தாயுமானவர் கட்டுரை – Thayumanavar Katturai :- தாயுமானவர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் கவி ஆவார் ,இவர் இயற்றியுள்ள பல பாடல்களும் பாடல்களும் தமிழ் காப்பியங்கள் மற்றும் பாடல்கள் தொகுப்பில் இடம்பெறுகின்றன,தமிழக அரசின் அரசுடைமையாக்க பட்ட படைப்புகளில் இவரது பாடல்களும் இடம்பெறுகின்றன.
தாயுமானவர் வரலாறு
சைவ வேளாளர் குளத்தில் கேடிலியப்பப் பிள்ளை மற்றும் கெஜவல்லி அம்மையாருக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார்,இவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு ஆகும் .ஆரம்ப களங்களில் திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் கணக்கராக பணிபுரிந்தார்.
அப்போது முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு வியந்தனர் என்பார்கள்.
தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர்; வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லுவதுண்டு.பின்னர் அப்பதவியைத் துறந்து திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார்.
துறவு
மட்டுவார்குழலி என்னும் மங்கையை மணந்து வாழ்ந்தார்.பின்னர்த் துறவு வாழ்கையில் நாட்டங்கொண்டு துறவு பூண்டார்.திருமூலர் மரபில் வந்த மௌனகுரு என்பாரின் அருளும் ஆசியும் பெற்றுச் சிறந்து விளங்கினார்.அவர் முக்தி பெற்ற இடம் இராமநாதபுரத்தின் ஒரு பகுதியுள்ள இலட்சுமிபுரமாகும்
இவரது படைப்புகளில் சில இங்கே கொடுக்க பட்டுள்ளன