மனைவி :- ஒரு பெண் திருமணமான பிறகு திருமணம் செய்துகொண்ட நபருக்கு மனைவியாகிறாள் , மனைவியின் குணநலன்கலை புரிந்து கொண்டு மனைவியுடன் வாழ்வதே மிக சிறந்த தம்பதியமாகும்,ஒரு ஆண் மனைவியாக ஒரு பெண்ணை தேர்வு செய்யும்போது அழகு ,அறிவு ,ஆரோக்கியம் என பலதரப்பட்ட தகுதிகளை கொண்டு தீர்மானிக்க எண்ணினாலும் ,உள்மனதில் ஏற்படும் காதல் மற்றும் நம்பிக்கையினால் நிகழும் திருமணமே ஒரு பெண்ணை மனைவியியாக மாற்றுகிறது
மனைவியும் தாயும்
மனைவி வந்த பிறகு வாழ்வில் தாய்க்கு கொடுத்துவந்த முக்கியத்துவத்தையும் ,அதற்க்கு மேற்பட்ட அன்பாயும் எவன் ஒருவர் தாராளமாக தருகிறானோ அவனது இல்வாழ்கை இனிதாக இருக்கும் என்ற பெரியோர்களின் கூற்றை உண்மையாக்க ஒவ்வொரு ஆண் மகனும் விரும்புகிறான் ,அம்மாவுடன் இருந்த காலங்களில் தன் தந்தை தனது மனைவியை நடத்தும் விதத்தை பிடிக்காமலும் அல்லது பிடித்தும் இருக்கும் ஒரு ஆணுக்கு ,புதிதாக வேறொரு வீட்டில் இருந்து வரும் பெண்ணை நல்ல முறையில் காக்க வேண்டும் என்ற எண்ணம் எழுவது இயல்பே ஆகும் ,