Site icon Tamil Solution

10th Social Science Tamil Medium 2nd Assignment Answerkey for July 2021

10th Social Science Tamil Medium 2nd Assignment Answerkey for July 2021 :- Asper the goverment decision the tn schools collect assignment for the july month.This is the 10th standard social science english medium assignmnet answerkey ,we also have social sciene tamil medium answerkey also


வகுப்பு – 10

சமூக அறிவியல் (வரலாறு)

அலகு -2 – இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

பகுதி-அ


1.ஒரு மதிப்பெண்வினா


1 ) அமெரிக்காவில் முதல் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி எந்த ஆண்டு தோன்றியது?

அ)பொ.ஆ.1919      ஆ)பொ.ஆ. 1929 

இ)பொ.ஆ. 1939     ஈ) பொ.ஆ. 1949

விடை : ஆ ) பொ.ஆ.1929


2. இத்தாலியில் பாசிசக் கட்சிதோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?

அ)பொ.ஆ. 1919           ஆ)பொ.ஆ. 1929

 இ)பொ.ஆ.1909           ஈ) பொ.ஆ. 1949

விடை : அ ) பொ.ஆ.1919


3. அடால்ஃப்ஹிட்லர் எழுதிய சுயசரிதை நூலின் பெயர் என்ன?

அ)போரும் அமைதியும் 

ஆ)வெள்ளை பயங்கரவாதம்

இ)மெயின் காம்ப்

ஈ)புரட்சிகர இளைஞர் இயக்கம்.

விடை : இ ) மெயின் காம்ப் 



4. சரியானகூற்றைத்  தேர்ந்தெடு.

i  ) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச்சந்தை வீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாளில் ஏற்பட்டது.
ii. ) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத் தடை 1966இல்விலக்கிக்கொள்ளப்பட்டது
.

அ)i) மற்றும் ii) சரி         ஆ) ii) மற்றும் iii) சரி

இ)i) ii)மற்றும் iii) சரி      ஈ) i) மற்றும்iii) சரி

விடை : ஈ )  i) மற்றும்iii) சரி


5. உலகத்தின் எந்தப்பகுதிடாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?

அ)ஐரோப்பா ஆ) இலத்தீன் அமெரிக்கா 

இ) இந்தியா         ஈ) சீனா

விடை : ஆ ) இலத்தீன் அமெரிக்கா


பகுதி-ஆ

11. குறுவினா

6. போயர்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக

        தென்னாப்பிரிக்காவில் குடியேறிய டச்சுக் குடியேறிகளின் வம்சாவழியினரே ஆப்பிரிக்க நேர்கள் என்று அழைக்கப்பட்ட போயர்கள் ஆவர்.



7. மன்றோ கோட்பாடு பற்றி எழுதுக.

         அமெரிக்க குடியரசுத் தலைவர் மன்றோ , அமெரிக்காவில் எந்தப் பகுதியிலும்  அது வடக்கோ , தெற்கோஐரோப்பியர்கள் தலையீட்டால் அது அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிரான போராகக் கருதப்படும்என அறிவித்தார். இதுவே மன்றோ கோட்பாடு ஆகும்.



8. இந்தோ-சீனாவில் நடைபெற்ற வெள்ளை பயங்கரவாதம்” குறித்து
நீங்கள் அறிந்ததென்ன
?

வியட்நாம் விடுதலை வீரர்கள் பிரெஞ்சு கவர்னரை கொலை செய்ய முயற்சித்தனர்.


 பகுதி-இ

III. சிறுவினா


1 , ‘தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் பற்றி எழுதுக.

தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல்:

                 இனஒதுக்கல் என்பதன் பொருள் தனிமைப்படுத்துதல் அல்லது ஒதுக்கிவைத்தல் என்பதாகும். ஒட்டுமொத்த நாடும் பல்வேறு இடங்களுக்கான தனித்தனிப் பகுதிகளாக பிரிக்கப்பட்டன. வெள்ளை இனத்தவருக்கும் வெள்ளையரல்லாத இனத்தவருக்கும் இடையில் திருமணங்கள் தடை செய்யப்பட்டன. ஏறத்தாழ அனைத்துப் பள்ளிகளும் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டன. இதன்மூலம் வெள்ளையருக்கு வழங்கப்படும் கல்வியில் இருந்து மாறுபட்ட கல்வியை ஏனைய ஆப்பிரிக்கர்களுக்கும் நடைமுறைப் படுத்தப்பட்டது.



2. ஹோசி.மின்பற்றிஒருகட்டுரை எழுதுக.

         ஹோ சி மின் 1890இல் டோங்கிங்கில் பிறந்தார். தனது 21 ஆவது வயதில் அவர் அவர் ஐரோப்பா சென்றார். பாரிஸ் அமைதி மாநாட்டில் வியட்நாமின் சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டினார். தினசரிகளில் அவர் எழுதிய கட்டுரைகளும் குறிப்பாக “விசாரணையில் பிரெஞ்சு காலனியாதிக்கம்” எனும் சிற்றேடு அவரை நன்கறியப்பட்ட வியட்நாமிய தேசியவாதி ஆக்கியது. 1921இல் ஹோ சி மின் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராக இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மாஸ்கோ சென்று புரட்சியின் நுட்பங்களைக் கற்றார். 1925இல் ‘புரட்சிகர இளைஞர் இயக்கம்’ எனும் அமைப்பை நிறுவினார்.



3. தென்ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சிகுறித்து விவரிக்கவும்.
             

ஆனால் தென்னாப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்த போராடும் குணமிக்க ஒரு பிரிவினர் ஹெர்சாக் என்பவரின் தலைமையின் கீழ் தேசியக்கட்சி எனும் கட்சியைத் தொடங்கினர்.

 1920 ஆம் ஆண்டுத் தேர்தலில் தேசியக்கட்சி 44 இடங்களைக் கைப்பற்றியது.தென்னாப்பிரிக்கக் கட்சி ஸ்மட்ஸ் தலைமையில் 41 இடங்களில் வெற்றி பெற்றது.
ஆங்கிலேயர் அதிகமிருந்த யூனியனிஸ்ட் கட்சி இத்தருவாயில் தென்னாப்பிரிக்கக் கட்சியுடன் இணைந்தது. இதனால் போர்க்குணம் கொண்ட ஆப்பிரிக்கநேர்களின் கட்டுப்பாட்டிலிருந்ததேசியக் கட்சியைக் காட்டிலும் ஸ்மட்ஸ் பெரும்பான்மை பெற்றார்.


   பகுதி – ஈ 

IV ) பெருவினா 

4 ) ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.


ஒப்படைப்பு – 2 

வகுப்பு 10

சமூக அறிவியல் -புவியியல்

அலகு -2 

இந்தியா-காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

பகுதி – அ

1.ஒருமதிப்பெண்வினா

1.புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்லவளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் ——–  என்றஅளவில் வெப்பநிலை குறைகிறது,

(அ)7.5•C                 ஆ)6.5°C

(இ)5.5°C                    ஈ)9.5°C

விடை : ஆ ) 6.5°C


2.கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு ——-  காற்றுகள் உதவுகின்றன

(அ )   லூ              ஆ)நார்வெஸ்டர்ஸ்

 இ)  மாஞ்சாரல்        (ஈ)ஜெட் காற்றோட்டம்

விடை : இ) மாஞ்சாரல் 


3.பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

(அ)அயன மண்டல பசுமைமாறாக்காடுகள்

 (ஆ) இலையுதிர்க்காடுகள்

(இ) மாங்குரோவ்காடுகள்

(ஈ) மலைக்காடுகள்

விடை :  ஆ ) இலையுதிர்க்காடுகள்


4.சேஷாசலம் உயிர்க் கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் ———-

(அ) தமிழ்நாடு

(ஆ)ஆந்திரப்பிரதேசம்

(இ)மத்தியப்பிரதேசம்

(ஈ) கர்நாடகா

விடை :  ஆ ) ஆந்திரப்பிரதேசம்


5.ஒரே அளவு மழை பெறும் இடங்களை இணைக்கும் கோடு ——-  ஆகும்

(அ) சமவெப்பகோடுகள்

(ஆ) சமமழைக்கோடுகள்

(இ) சமஅழுத்தக்கோடுகள்

(ஈ) அட்சக்கோடுகள்

விடை :  ஆ ) சமமழைக்கோடுகள்


 பகுதி – ஆ

II . குறுவினா

1.வானிலை மற்றும்காலநிலைவேறுபடுத்துக


2.வடகிழக்கு பருவக்காற்றுமற்றும் தென்மேற்குபருவக்காற்றுவேறுபடுத்துக.


3.மலைப்பகுதிகள் சமவெளிகளைவிட குளிரானவை காரணம்கூறுக?

                புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறைகிறது. வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.5 டிகிரி C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது.


பகுதி – இ 

III ) சிறுவினா 

1 ) பருவக்காற்று குறித்து குறிப்பு வரைக.

           ” மான்சூன் ” என்ற சொல் ” மௌசிம் ” என்ற அரபுச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பருவகாலம்  ஆகும்.பருவ காலம் என்ற சொல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரபு மாலுமிகளால் இந்தியப் பெருங்கடல் கடற்கரைப் பகுதிகளில் குறிப்பாக அரபிக்கடலில் பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளை குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.


2 ) இந்திய வனவிலங்கு வாரியம் பற்றி குறிப்பிடுக.

          1952 ஆம் ஆண்டு வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்த பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்க நிறுவப்பட்ட அமைப்பு இதுவாகும்.


3 ) இந்தியாவின் நான்கு பருவகாலங்களைக் குறிப்பிடுக.


 பகுதி – ஈ 

IV ) பெருவினா

1 ) தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக.

தென்மேற்குப் பருவக்காற்று :

இந்திய காலநிலையின் முக்கிய அம்சமாக தென்மேற்குப் பருவக்காற்று விளங்குகியது.


2 ) இந்தியக் காடுகள் பற்றி விவரிக்கவும்.

     காலநிலை. மண் வகைகள், மழைப்பொழிவு. நிலத்தோற்ற்கள் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்திய காடுகள் பின்வருமாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன. அவை.

இந்த எட்டு வகைக் காடுகளில் ஒரு சில பற்றி விரிவாகக் காண்போம்.

அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்:

          ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீ.க்கு மேலும். 22°Cக்கு அதிகமான வெப்பநிலை உள்ள பகுதிகளிலும் இக்காடுகள் காணப்படுகின்றன.

காணப்படும் இடங்கள்: கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்டிரா. அந்தமான் நிக்கோபர் தீவுகள். அஸ்ஸாம். மேற்கு வங்காளம். நாகலாந்து மற்றும் திரிபுரா

காணப்படும் மரங்கள்: இரப்பர். எபனி. ரோஸ் மரம். தென்னை. மூங்கில். சின்கோனா மற்றும் சிடார்.

அயன மண்டல இலையுதிர்க்காடுகள்;

             ஆண்டு மழைப்பொழிவு 100 முதல் 200 செமீ வரை உள்ள பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன. இக்காடுகள் கோடைகாலத்தில் இலைகளை உதிர்த்து விடுகின்றன.

காணப்படும் இடங்கள்: பஞ்சாப், ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய இந்தியா, மத்தியப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட்.

காணப்படும் மரங்கள்: தேக்கு, சால், சந்தன மரம். ரோஸ் மரம், குசம், மாகு, பாலாங், ஆம்லா மற்றும் மூங்கில்.அயன மண்டல வறண்டக்காடுகள்: 
           ஆண்டு மழைப்பொழிவு 50 செ.மீ. முதல் 100 செ.மீ. வரை உள்ள பகுதிகளில் அக்காடுகள் காணப்படுகின்றன.
காணப்படும் இடங்கள் : 
           கிழக்கு இராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா.
காணப்படும் மரங்கள்: 
           இலுப்பை. ஆலமரம், ஆவாரம்பூ மரம், பலா, மஞ்சக்கடம்பு, கருவேலம்மற்றும் மூங்கில்.
மலைக்காடுகள்:
i) கிழக்கு இமயமலைக்காடுகள்:
        200 செ.மீ.க்கு அதிகமாக மழைப்பொழிவு உள்ள இடங்களில் இக்காடுகள் காணப்படுகின்றன.
காணப்படும் இடங்கள் : 
            வடகிழக்கு இந்திய மாநிலங்களில் உள்ளகிழக்கு இமயமலைச்சரிவுகளில்இக்காடுகள் காணப்படுகின்றன.
காணப்படும் மரங்கள்: 
            சால். ஓக், லாரஸ், அமுரா, செஸ்ட்நெட் மற்றும் சினனமன்.
ii) மேற்கு இமயமலைக்காடுகள்: 
             மிதமான மழைப்பொழிவு உள்ள இடங்களில் இக்காடுகள்காணப்படுகின்றன.
காணப்படும் இடங்கள்: 
           ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்ரகாண்ட். காணப்படும் மரங்கள் சிறு புதர் செடிகள், சிறு மரங்கள், சிர், தியோதர், நீல பைன், பாப்புலர். பிர்ச் மற்றும் எல்டர்.
அல்பைன் காடுகள்:
காணப்படும் இடங்கள்: 
           இமய மலையின் 2400 மீட்டருக்கு மேல் உள்ள பகுதிகளில் இக்காடுகள்காணப்படுகின்றன.
காணப்படும் மரங்கள் : 
     ஓக். சில்வர் பிர், பைன் மற்றும் ஜூனிபர்.
ஒத அலைக்காடுகள்:
காணப்படும் இடங்கள்: 
      டெல்டாக்கள், பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழிமுகப் பகுதிகள். கங்கை. பிரம்ம புத்ரா, மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டாப் பகுதிகளில்காணப்படுகின்றன. இங்குள்ள காடுகள் மாங்குரோவ் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.


3 ) காலநிலையைப் பாதிக்கும் காரணிகளைப் பட்டியலிட்டு விளக்குக.

 காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்

அட்சங்கள் கடல் மட்டத்திலிருந்து உயரம், கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு, பருவக்காற்று, நிலத்தோற்றம், ஜெட் காற்றுகள் போன்றவை இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகளாகும்.

1 ) அட்சங்கள்

        இந்தியா 8°4′ வட அட்சம் முதல் 376′ வட அட்சம் வரை அமைந்துள்ளது. 23°30′ வட அட்சமான கடகரேகை நாட்டை இருசமபாகங்களாக பிரிக்கிறது. கடகரேகைக்கு தெற்கே அமைந்துள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் அதிகவெப்பமும் மிக குளிரற்ற சூழலும் நிலவுகிறது. கடகரேகைக்கு வடக்கே உள்ள பகுதிகள் மித வெப்ப காலநிலையைக் கொண்டுள்ளது.

2 ) உயரம்

            புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு மீட்டர் உயரத்திற்கும் 6.500 என்ற அளவில் வெப்பநிலைகுறைகிறது. 

3 ) கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு

       இந்தியாவின் பெரும்பகுதி குறிப்பாக தீபகற்ப இந்தியா கடலிலிருந்து வெகுதொலைவில் இல்லை. இதன் காரணமாக இப்பகுதி முழுவதும் நிலவும் காலநிலை கடல் சார் ஆதிக்கத்தை கொண்டுள்ளது. இப்பகுதியில் குளிர்காலம் குளிரற்று காணப்பட்டு வருடம் முழுவதும் சீரான வெப்பநிலையைக் கொண்டுள்ளது.

4 ) பருவக்கால காற்று

       இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் மிக முக்கிய காரணி பருவக்கால காற்றாகும். இவை பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளாகும்.

5 ) நிலத்தோற்றம்

             இந்தியாவின் நிலத்தோற்றம், காலநிலையின் வடஇந்தியா முக்கிய கூறுகளான வெப்பநிலை, வளிமண்டல அழுத்தம், காற்றின் திசை மற்றும் மழையளவை பெருமளவில் பாதிக்கின்றது.

6 ) ஜெட் காற்றோட்டங்கள்,

          வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் ” ஜெட்காற்றுகள்” என்கிறோம். ஜெட் காற்றோட்ட கோட்பாட்டின் படி, துணை அயன  மேலை காற்றோட்டம் வடபெரும் சமவெளிகளிலிருந்து திபெத்திய பீடபூமியை நோக்கி இடம்பெயர்வதால் தென்மேற்கு பருவக்காற்று உருவாகின்றது.கீழை ஜெட் காற்றோட்டங்கள் மற்றும் பின்னடையும் தென்மேற்கு பருவக்காற்று காலங்களில் வெப்ப மண்டல தாழ்வழுத்தங்களை உருவாக்குகின்றன.


வகுப்பு – 10

சமூக அறிவியல் -குடிமையியல்

அலகு -2 – இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

பகுதி-அ


1.ஒரு மதிப்பெண்வினா


1 ) ஒரு மசோதாவை நிதி மசோதிவாக அல்லது இதர மசோதாவை என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்

அ) குடியரசுத் தலைவர்

ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

இ)நாடாளுமன்ற விவகார அமைச்சர்

ஈ)லோக் சபாவின் சபாநாயகர்

விடை : ஈ)லோக் சபாவின் சபாநாயகர்


2. 2.நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர்………ஆவார்

அ)குடியரசுத்தலைவர்
ஆ)தலைமை நீதிபதி
இ)பிரதம அமைச்சர்
ஈ)அமைச்சர்கள் குழு

விடை : அ)குடியரசுத்தலைவர்


3. லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்சவயது

அ) 18வயது
ஆ) 21வயது
இ) 25வயது
ஈ)30வயது

விடை : இ) 25வயது



4. அமைச்சர்கள் குழு ஒட்டு மொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்.

அ)குடியரசுத்தலைவர்

ஆ)மக்களவை

இ) பிரதம அமைச்சர்

ஈ)மாநிலங்களவை

விடை : ஆ)மக்களவை


5.கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத்தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?

அ) சட்டப்பிரிவு 352
ஆ) சட்டப்பிரிவு 360
இ) சட்டப்பிரிவு 356
ஈ)சட்டப்பிரிவு 365

விடை : ஆ) சட்டப்பிரிவு 360


பகுதி-ஆ

11. குறுவினா

1. இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?       



2.நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலைகளின் படி எவ்வாறு வகைப்படுத்தப் பட்டுள்ளனர்?         

நடுவண் அமைச்சர்கள் மூன்று தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

  1. காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
  2. இராசாங்க அமைச்சர்கள்
  3. இணை அமைச்சர்கள்


3.உச்சநீதி மன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?


 பகுதி-இ

III. சிறுவினா


1 , இந்தியக் குடியரசுத் தலைவரின் சட்டமன்ற மற்றும் நீதிஅதிகாரங்களை விவரி.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்: சட்டமன்ற அதிகாரங்கள்:

நீதி அதிகாரங்கள்:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

குடியரசு தலைவரின் சிறப்பு அதிகாரங்கள் :
பிரிவு 361(1)ன் படி குடியரசுத் தலைவர் மற்றும் ஒரு மாநிலத்தின் ஆளுநர் தன்னுடைய பணி மற்றும் அதிகாரத்தை செய்யவேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை



2.இந்திய உச்சநீதி மன்றத்தின் நீதி வரையறைகள் ஏதேனும் மூன்றினை விளக்குக         

தனக்கேயுரிய நீதி வரையறை:
உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக வரும் வழக்குகள் தனக்கேயுரிய நீதி வரையறைக்குட்பட்டவை ஆகும். அவைகள்,

மேல்முறையீட்டு நீதிவரையறை:
உச்ச நீதிமன்றமே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.

மாநில உயர் நீதிமன்றங்கள் உரிமையியல், குற்றவியல் அரசியலமைப்பு வழக்குகள் மீதான தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது.

ஆலோசனை நீதிவரையறை:
பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சட்டம் அல்லது உண்மை மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தினைப் பெற அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு அதிகாரத்தினை வழங்குகிறது.

இதர நீதிவரையறை:
உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தின் பொதுவான செயல்முறைகள், வழிமுறைகளை ஒழுங்குப்படுத்தும் விதிகளை உருவாக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.



3. இந்தியப் பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?
       


   பகுதி – ஈ 

IV ) பெருவினா 

மக்களவை மற்றும் மாநிலங்களவையின் செயல்பாடுகளை பட்டியலிடுக.

மக்களவையின் செயல்பாடுகள்

மாநிலங்களவையின் செயல்பாடுகள்


வகுப்பு – 10

சமூக அறிவியல் -பொருளியல்-

அலகு -2 – இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

பகுதி-அ


1.ஒரு மதிப்பெண்வினா


1 ) உலகவர்த்தக அமைப்பின் (WTO) தலைவர்யார்?

அ)அமைச்சாவை
ஆ)தலைமை இயக்குநர்

இ)துணைதலைமை இயக்குநர்
ஈ)இவற்றில் எதுவுமில்லை

விடை : ஆ)தலைமை இயக்குநர்


2. இந்தியாவில் காலனியாதிக்க வருகை

அ) போர்ச்சுகீசியர்.டச்சு.ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு

ஆ)டச்சு,ஆங்கிலேயர் டேனிஷ் பிரெஞ்சு

இ) போர்ச்சுகீசியர், டேனிஷ், டச்சு,பிரெஞ்சு, ஆங்கிலேயர்


ஈ)டேனிஷ், போர்ச்சுகீசியர், பிரெஞ்சு, ஆங்கிலேயர், டச்சு

விடை : இ) போர்ச்சுகீசியர், டேனிஷ், டச்சு,பிரெஞ்சு, ஆங்கிலேயர்


3. காட் (GATT) இன் முதல் சுற்று நடைபெற்ற இடம்.

அ)டோக்கியோ
(ஆ)உருகுவே
(இ)டார்குவே
(ஈ) ஜெனீவா

விடை : (ஈ) ஜெனீவா  



4. இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கை யெழுத்திட்டது?

(அ)1984
(ஆ)1976
(இ)1950
(ஈ)1994

விடை : (ஈ)1994


5. 1632இல் ஆங்கிலேயர்களுக்கு கோல்டன்ஃபயர்மான் வழங்கியவர்யார்?

(அ)ஜஹாங்கீர்
(ஆ)கோல்கொண்டா சுல்தான்
(இ)அக்பர்
(ஈ)ஓௗரங்கசீப்

விடை : (ஆ)கோல்கொண்டா சுல்தான்


பகுதி-ஆ

11. குறுவினா

உலகமயமாக்கல் என்றால் என்ன?

       



உலகமயமாக்கலின் வகைகளை எழுதுக

         



பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக

பன்னாட்டு நிறுவனம் என்பது நாட்டில் பண்டங்களையும் அல்லது பணிகளையும் உற்பத்தி செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு பெருநிறுவனமாகும்.


 பகுதி-இ

III. சிறுவினா


பன்னாட்டு நிறுவனங்களின் நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.

பன்னாட்டு நிறுவனங்களின் நன்மைகள் :

பன்னாட்டு நிறுவனங்களின் தீமைகள் :



2.உலகவர்த்தக அமைப்பு பற்றி எழுதுக

         

உலக வர்த்தக அமைப்பு (WTO):

உலக வர்த்த க அமைப்பு (World Trade Organisation):
தலைமையகம் : ஜெனிவா, சுவிட்சர்லாந்து
நோக்கம் : வணிகத்தினை கட்டுப்படுத்தல், அயல்நாட்டு வாணிபம்
உறுப்பினர்கள் : தலைமை இயக்குநர், துணை தலைமை இயக்குநர்-4 மற்றும் 80 உறுப்பு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 அலுவலக ஊழியர்கள்.

உலக வர்த்தக அமைப்பின் குறிக்கோள்கள்:



உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.
           

உலகமயமாக்கலின் சவால்கள்:


   பகுதி – ஈ 

IV ) பெருவினா 

பன்னாட்டுநிறுவனங்களின் வளர்ச்சிக்கான காரணங்களை தொகுத்து எழுதுக.

பன்னாட்டுநிறுவனங்களின் வளர்ச்சிக்கான காரணங்கள்
1. சந்தை நிலப்பரப்பின் விரிவாக்கம்:
பெரிய அளவிலான நிறுவனங்கள் விரிவடைந்து வருவதால், அந்த நிறுவனம் உள்ள நாட்டின் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் அதன் செயல்பாடுகளை மேலும் விரிவாக்குகிறது.

2. சந்தைப்படுத்தும் மேன்மை:
ஒரு பன்னாட்டு நிறுவனம், தேசிய நிறுவனங்களின் மீது சந்தைப்படுத்தும் மேன்மையைக் கொண்டுள்ளது. இது சந்தை மதிப்பினைப் பெற்று, அதன் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் குறைவான சிரமங்களை எதிர் கொள்கிறது.
> மேலும் பயனுள்ள விளம்பர மற்றும் விற்பனை ஊக்குவிப்பு தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்கிறது.

3. நிதி மேன்மை :
> இதில் நிதி வளங்களும், உயர்நிதி பயன்பாடுகளும் உள்ளன.
> இதனால் வெளிப்புற மூலதன சந்தைகளை எளிதில் அணுகமுடியும் மற்றும் அதன் சர்வதேச புகழ் காரணமாக வளங்களை அதிகரிக்கவும் முடியும்.

4. தொழில்நுட்ப மேன்மை :
பின்தங்கிய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்க, ஊக்கமளித்ததற்கான முக்கிய காரணம் இந்த நிறுவனங்கள் தொழில் வளர்ச்சியில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் காணப்படுவதேயாகும்.

5. பண்டங்களின் கண்டுபிடிப்புகள் :
பன்னாட்டு நிறுவனங்கள், புதிய தயாரிப்புகள் மற்றும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை மேம்பட்ட வடிவமைப்புகளாக உருவாக்குவதற்கான பணியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

Exit mobile version