10th Social Science Tamil Medium 2nd Assignment Answerkey for July 2021 :- Asper the goverment decision the tn schools collect assignment for the july month.This is the 10th standard social science english medium assignmnet answerkey ,we also have social sciene tamil medium answerkey also
வகுப்பு – 10
சமூக அறிவியல் (வரலாறு)
அலகு -2 – இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
பகுதி-அ
1.ஒரு மதிப்பெண்வினா
1 ) அமெரிக்காவில் முதல் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி எந்த ஆண்டு தோன்றியது?
அ)பொ.ஆ.1919 ஆ)பொ.ஆ. 1929
இ)பொ.ஆ. 1939 ஈ) பொ.ஆ. 1949
விடை : ஆ ) பொ.ஆ.1929
2. இத்தாலியில் பாசிசக் கட்சிதோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
அ)பொ.ஆ. 1919 ஆ)பொ.ஆ. 1929
இ)பொ.ஆ.1909 ஈ) பொ.ஆ. 1949
விடை : அ ) பொ.ஆ.1919
3. அடால்ஃப்ஹிட்லர் எழுதிய சுயசரிதை நூலின் பெயர் என்ன?
அ)போரும் அமைதியும்
ஆ)வெள்ளை பயங்கரவாதம்
இ)மெயின் காம்ப்
ஈ)புரட்சிகர இளைஞர் இயக்கம்.
விடை : இ ) மெயின் காம்ப்
4. சரியானகூற்றைத் தேர்ந்தெடு.
i ) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச்சந்தை வீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாளில் ஏற்பட்டது.
ii. ) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத் தடை 1966இல்விலக்கிக்கொள்ளப்பட்டது.
அ)i) மற்றும் ii) சரி ஆ) ii) மற்றும் iii) சரி
இ)i) ii)மற்றும் iii) சரி ஈ) i) மற்றும்iii) சரி
விடை : ஈ ) i) மற்றும்iii) சரி
5. உலகத்தின் எந்தப்பகுதிடாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?
அ)ஐரோப்பா ஆ) இலத்தீன் அமெரிக்கா
இ) இந்தியா ஈ) சீனா
விடை : ஆ ) இலத்தீன் அமெரிக்கா
பகுதி-ஆ
11. குறுவினா
6. போயர்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக
தென்னாப்பிரிக்காவில் குடியேறிய டச்சுக் குடியேறிகளின் வம்சாவழியினரே ஆப்பிரிக்க நேர்கள் என்று அழைக்கப்பட்ட போயர்கள் ஆவர்.
7. மன்றோ கோட்பாடு பற்றி எழுதுக.
அமெரிக்க குடியரசுத் தலைவர் மன்றோ , அமெரிக்காவில் எந்தப் பகுதியிலும் அது வடக்கோ , தெற்கோஐரோப்பியர்கள் தலையீட்டால் அது அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிரான போராகக் கருதப்படும்என அறிவித்தார். இதுவே மன்றோ கோட்பாடு ஆகும்.
8. இந்தோ-சீனாவில் நடைபெற்ற வெள்ளை பயங்கரவாதம்” குறித்து
நீங்கள் அறிந்ததென்ன?
வியட்நாம் விடுதலை வீரர்கள் பிரெஞ்சு கவர்னரை கொலை செய்ய முயற்சித்தனர்.
- விவசாயிகள் கம்யூனிஸ்டுகள் தலைமையில் புரட்சி செய்தனர்.
- பிரெஞ்சு அரசு புரட்சியை அடக்கியது. ஆயிரக்கணக்கான மக்களைச் சுட்டுக்கொன்றது.
பகுதி-இ
III. சிறுவினா
1 , ‘தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் பற்றி எழுதுக.
தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல்:
இனஒதுக்கல் என்பதன் பொருள் தனிமைப்படுத்துதல் அல்லது ஒதுக்கிவைத்தல் என்பதாகும். ஒட்டுமொத்த நாடும் பல்வேறு இடங்களுக்கான தனித்தனிப் பகுதிகளாக பிரிக்கப்பட்டன. வெள்ளை இனத்தவருக்கும் வெள்ளையரல்லாத இனத்தவருக்கும் இடையில் திருமணங்கள் தடை செய்யப்பட்டன. ஏறத்தாழ அனைத்துப் பள்ளிகளும் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டன. இதன்மூலம் வெள்ளையருக்கு வழங்கப்படும் கல்வியில் இருந்து மாறுபட்ட கல்வியை ஏனைய ஆப்பிரிக்கர்களுக்கும் நடைமுறைப் படுத்தப்பட்டது.
2. ஹோசி.மின்பற்றிஒருகட்டுரை எழுதுக.
ஹோ சி மின் 1890இல் டோங்கிங்கில் பிறந்தார். தனது 21 ஆவது வயதில் அவர் அவர் ஐரோப்பா சென்றார். பாரிஸ் அமைதி மாநாட்டில் வியட்நாமின் சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டினார். தினசரிகளில் அவர் எழுதிய கட்டுரைகளும் குறிப்பாக “விசாரணையில் பிரெஞ்சு காலனியாதிக்கம்” எனும் சிற்றேடு அவரை நன்கறியப்பட்ட வியட்நாமிய தேசியவாதி ஆக்கியது. 1921இல் ஹோ சி மின் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராக இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மாஸ்கோ சென்று புரட்சியின் நுட்பங்களைக் கற்றார். 1925இல் ‘புரட்சிகர இளைஞர் இயக்கம்’ எனும் அமைப்பை நிறுவினார்.
3. தென்ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சிகுறித்து விவரிக்கவும்.
- தென் ஆப்பிரிக்காவில் இரு முக்கிய அரசியல் கட்சிகள் செயல்பட்டன.
- அவை யூனியனிஸ்ட் கட்சி (ஆங்கிலேயர்கள்)
- தென் ஆப்பிரிக்கக் கட்சி (ஆப்பிரிக்க நேர்கள் / போயர்கள்) ஆகியவை.
- முதல் பிரதம மந்திரியானபோதா, தென் ஆப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்தவர். ஆங்கிலேயருடன் ஒத்துழைத்து ஆட்சியை நடத்தினார்.
ஆனால் தென்னாப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்த போராடும் குணமிக்க ஒரு பிரிவினர் ஹெர்சாக் என்பவரின் தலைமையின் கீழ் தேசியக்கட்சி எனும் கட்சியைத் தொடங்கினர்.
1920 ஆம் ஆண்டுத் தேர்தலில் தேசியக்கட்சி 44 இடங்களைக் கைப்பற்றியது.தென்னாப்பிரிக்கக் கட்சி ஸ்மட்ஸ் தலைமையில் 41 இடங்களில் வெற்றி பெற்றது.
ஆங்கிலேயர் அதிகமிருந்த யூனியனிஸ்ட் கட்சி இத்தருவாயில் தென்னாப்பிரிக்கக் கட்சியுடன் இணைந்தது. இதனால் போர்க்குணம் கொண்ட ஆப்பிரிக்கநேர்களின் கட்டுப்பாட்டிலிருந்ததேசியக் கட்சியைக் காட்டிலும் ஸ்மட்ஸ் பெரும்பான்மை பெற்றார்.
பகுதி – ஈ
IV ) பெருவினா
4 ) ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.
- முதல் உலகப்போரின்போது ஹிட்லர் பவேரியாவின் படையில் பணியாற்றனார். ஆனால் முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டது.
- 1919ஆம் ஆண்டு ஏழு நபர்களைக் கொண்ட ஒரு குழுவானது, மியூனிச் நகரில் சந்தித்து தேசிய சோசலிஸ்ட்டு ஜெர்மன் உழைப்பாளர் கட்சி என்ற நாசிக் கட்சியை உருவாக்கியது. அவர்களுள் ஹிட்லரும் ஒருவராக இருந்தார்.
- அவர் 1923ஆம் ஆண்டு பவேரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சியை மேற்கொண்டார்.
- அம் முயற்சியில் தோல்வியுற்றார். எனவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
- சிறையிலிருந்த போது அவரது அரசியல் சிந்தனைகளை உள்ளடக்கிய சுயசரிதை நூலான ‘ எனது போராட்டம்’ என்ற நூலை எழுதினார்.
- 1932ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் கம்யூனிஸ்டுகள் 6,000,000 வாக்குகளைப் பெற்றனர்.
- இதனால் முதலாளிகள் மற்றும் சொத்து உரிமையாளர்கள் நாசிசத்தை ஆதரிக்கத் தொடங்கினர். இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ஹிட்லர் தவறான வழியில் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
- ஹிட்லரின் நாசிச அரசு:
- கம்யூனிஸ்டுகள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி வைக்க மறுத்ததால் ஜெர்மனியில் குடியரசு ஆட்சி கவிழ்ந்தது.
- இதன் விளைவாகத் தொழிலதிபர்களும் வங்கியாளர்களும் குடியரசுக் கட்சியினரும் ஹிட்லரை சான்சிலராக பதவியில் அமர்த்தும்படி குடியரசுத் தலைவர் வான் ஹிண்டன்பர்க் என்பவரைவற்புறுத்தினர்.
- மூன்றாவது ரெய்க் என்றழைக்கப்பட்ட ஹிட்லரின் நாஜி அரசு ஜெர்மனியில் நிறுவப்பட்டிருந்த பாராளுமன்ற ஜனநாயக அரசை முடிவுக்குக் கொண்டுவந்தது.
- 1934ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் ஹிண்டன்பர்க் மறைந்ததும், சான்சிலராக இருந்த ஹிட்லர் குடியரசுத் தலைவராகவும், ராணுவத் தளபதியாகவும் பொறுப்பேற்றார்.
ஒப்படைப்பு – 2
வகுப்பு 10
சமூக அறிவியல் -புவியியல்
அலகு -2
இந்தியா-காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
பகுதி – அ
1.ஒருமதிப்பெண்வினா
1.புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்லவளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் ——– என்றஅளவில் வெப்பநிலை குறைகிறது,
(அ)7.5•C ஆ)6.5°C
(இ)5.5°C ஈ)9.5°C
விடை : ஆ ) 6.5°C
2.கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு ——- காற்றுகள் உதவுகின்றன
(அ ) லூ ஆ)நார்வெஸ்டர்ஸ்
இ) மாஞ்சாரல் (ஈ)ஜெட் காற்றோட்டம்
விடை : இ) மாஞ்சாரல்
3.பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
(அ)அயன மண்டல பசுமைமாறாக்காடுகள்
(ஆ) இலையுதிர்க்காடுகள்
(இ) மாங்குரோவ்காடுகள்
(ஈ) மலைக்காடுகள்
விடை : ஆ ) இலையுதிர்க்காடுகள்
4.சேஷாசலம் உயிர்க் கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் ———-
(அ) தமிழ்நாடு
(ஆ)ஆந்திரப்பிரதேசம்
(இ)மத்தியப்பிரதேசம்
(ஈ) கர்நாடகா
விடை : ஆ ) ஆந்திரப்பிரதேசம்
5.ஒரே அளவு மழை பெறும் இடங்களை இணைக்கும் கோடு ——- ஆகும்
(அ) சமவெப்பகோடுகள்
(ஆ) சமமழைக்கோடுகள்
(இ) சமஅழுத்தக்கோடுகள்
(ஈ) அட்சக்கோடுகள்
விடை : ஆ ) சமமழைக்கோடுகள்
பகுதி – ஆ
II . குறுவினா
1.வானிலை மற்றும்காலநிலைவேறுபடுத்துக
- வானிலை
- ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் தன்மையைக் குறிக்கும்.
- ஓர் இடத்தின் குறுகிய கால வளி மண்டலத்தின் வெப்பம் , மேகமூட்டம் , வறட்சி ,சூரிய ஒளி , காற்று , மழை ஆகிய நிலையைக் குறிப்பது.
- இது ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும்.
- காலநிலை
- ஒரு பகுதியின் நீண்ட கால வானிலை சராசரியே காலநிலையாகும்.
- காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார் 30 – 35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
- இது மாறாதது.
2.வடகிழக்கு பருவக்காற்றுமற்றும் தென்மேற்குபருவக்காற்றுவேறுபடுத்துக.
- வடகிழக்குப் பருவக்காற்று
- வடகிழக்குப் பருவக்காற்று அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வீசுகிறது.
- வடகிழக்குப் பருவக்காற்று நிலப்பகுதியிலிருந்து வீசுகிறது.
- இக்காற்று சோழ மண்டலக் கடற்கரைக்கு நல்ல மழையைக் கொடுக்கிறது.
- இந்தியாவின் மொத்த மழைப்பொழிவில் 25% க்கும் குறைவாக வடகிழக்குப் பருவக்காற்றினால் கிடைக்கிறது.
- தென்மேற்குப் பருவக்காற்று
- தென்மேற்குப் பருவக்காற்று ஜூன் முதல் செப்டம்பர் வரை வீசுகிறது.
- தென்மேற்குப் பருவக்காற்று இந்தியப் பெருங்கடலிலிருந்து நிலப்பகுதியை நோக்கி வீசுகிறது.
- இக்காற்று இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்கும் மற்றும் அநேக பகுதிகளுக்கும் மழையைக் கொடுக்கிறது.
- இந்தியாவின் மொத்த மழைப்பொழிவில் 75% தென்மேற்குப் பருவக்காற்றினால் கிடைக்கிறது.
3.மலைப்பகுதிகள் சமவெளிகளைவிட குளிரானவை காரணம்கூறுக?
புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறைகிறது. வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.5 டிகிரி C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது.
பகுதி – இ
III ) சிறுவினா
1 ) பருவக்காற்று குறித்து குறிப்பு வரைக.
” மான்சூன் ” என்ற சொல் ” மௌசிம் ” என்ற அரபுச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பருவகாலம் ஆகும்.பருவ காலம் என்ற சொல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரபு மாலுமிகளால் இந்தியப் பெருங்கடல் கடற்கரைப் பகுதிகளில் குறிப்பாக அரபிக்கடலில் பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளை குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.
2 ) இந்திய வனவிலங்கு வாரியம் பற்றி குறிப்பிடுக.
1952 ஆம் ஆண்டு வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்த பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்க நிறுவப்பட்ட அமைப்பு இதுவாகும்.
3 ) இந்தியாவின் நான்கு பருவகாலங்களைக் குறிப்பிடுக.
- குளிர்காலம் – ஜனவரி முதல் பிப்ரவரி.
- கோடைகாலம் – மார்ச் முதல் மே வரை
- தென்மேற்குப் பருவக்காற்று காலம் – ஜூன் முதல் செப்டம்பர் வரை
- வடகிழக்கு பருவக்காற்று காலம் – அக்டோடர் முதல் டிசம்பர் வரை .
பகுதி – ஈ
IV ) பெருவினா
1 ) தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக.
தென்மேற்குப் பருவக்காற்று :
இந்திய காலநிலையின் முக்கிய அம்சமாக தென்மேற்குப் பருவக்காற்று விளங்குகியது.
- பருவக்காற்று பொதுவாக இந்தியாவின் தென்பகுதியில் ஜூன் முதல் வாரம் தொடங்குகிறது. அனைத்து இந்தியப் பகுதிகளிலும் ஜூன் 15ல் முன்னேறுகிறது.
- தென்மேற்குப் பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலையானது 40°C வரை உயருகிறது. இப்பருவக்காற்றின் இடி, மின்னலுடன் கூடிய துவக்கம் ‘பருவமழை வெடிப்பு’ எனப்படுகிறது. இது இந்தியாவின் வெப்புநிலையை பெருமளவு குறைக்கிறது.
- இக்காற்று இந்தியாவின் தென்முனையை அடையும் பொழுது இரண்டு கிளைகளாகப் பிரிக்கிறது.
- ஒரு கிளை அரபிக்கடல் வழியாகவும் மற்றாரு கிளை வங்காள விரிகுடா வழியாகவும் வீசுகிறது.
- அரபிக்கடல் கிளை: தென்மேற்குப் பருவக்காற்றின் அரபிக்கடல கிளை மேற்கத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் மோதி பலத்த மழைப் பொழிவைத் தருகிறது. வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலையால் தடுக்கப்பட்டு வடஇந்தியா முழுவதும் கனமழையைத் தோற்றுவிக்கிறது. ஆரவல்லி மலைத் தொடர் காற்று வீசும் திசைக்கு இணையாக அமைந்துள்ளதால் இராஜஸ்தான் மற்றும் வடஇந்தியாவின் மேற்கு பகுதிக்கு மழைப்பொழிவைத் தருவதில்லை.
- வங்காள விரிகுடா கிளை: வங்காள விரிகுடா கிளை. வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை நோக்கி வீசுகிறது. இது காசி காரோ. ஜெயந்தியா குன்றுகளால் தடுக்கப்பட்டு மேகாலயாவில் உள்ள மௌசின்ராமில் மிகக் கனமழையைத் தருகிறது. இக்காற்று பின்னர் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும் போது மழைப் பொழிவின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.
- இந்தியாவின் ஒட்டு மொத்த மழைப்பொழிவில் 75% மழைப் பொழிவானது இப்பருவக்காற்று காலத்தில் கிடைக்கிறது.
2 ) இந்தியக் காடுகள் பற்றி விவரிக்கவும்.
காலநிலை. மண் வகைகள், மழைப்பொழிவு. நிலத்தோற்ற்கள் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்திய காடுகள் பின்வருமாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன. அவை.
- அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
- அயன மண்டல இலையுதிர் காடுகள் அயன மண்டல வறண்ட காடுகள்.
- மலைக்காடுகள் (கிழக்கு இமயமலை/மேற்கு இமயமலை காடுகள்)
- அல்பைன் காடுகள்
- ஓத அலைக்காடுகள்
- கடற்கரையோரக் காடுகள்
- நதி வனப்பகுதி அல்லது ஆற்றங்கரைக் காடுகள்.
இந்த எட்டு வகைக் காடுகளில் ஒரு சில பற்றி விரிவாகக் காண்போம்.
அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்:
ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீ.க்கு மேலும். 22°Cக்கு அதிகமான வெப்பநிலை உள்ள பகுதிகளிலும் இக்காடுகள் காணப்படுகின்றன.
காணப்படும் இடங்கள்: கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்டிரா. அந்தமான் நிக்கோபர் தீவுகள். அஸ்ஸாம். மேற்கு வங்காளம். நாகலாந்து மற்றும் திரிபுரா
காணப்படும் மரங்கள்: இரப்பர். எபனி. ரோஸ் மரம். தென்னை. மூங்கில். சின்கோனா மற்றும் சிடார்.
அயன மண்டல இலையுதிர்க்காடுகள்;
ஆண்டு மழைப்பொழிவு 100 முதல் 200 செமீ வரை உள்ள பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன. இக்காடுகள் கோடைகாலத்தில் இலைகளை உதிர்த்து விடுகின்றன.
காணப்படும் இடங்கள்: பஞ்சாப், ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய இந்தியா, மத்தியப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட்.
காணப்படும் மரங்கள்: தேக்கு, சால், சந்தன மரம். ரோஸ் மரம், குசம், மாகு, பாலாங், ஆம்லா மற்றும் மூங்கில்.அயன மண்டல வறண்டக்காடுகள்:
ஆண்டு மழைப்பொழிவு 50 செ.மீ. முதல் 100 செ.மீ. வரை உள்ள பகுதிகளில் அக்காடுகள் காணப்படுகின்றன.
காணப்படும் இடங்கள் :
கிழக்கு இராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா.
காணப்படும் மரங்கள்:
இலுப்பை. ஆலமரம், ஆவாரம்பூ மரம், பலா, மஞ்சக்கடம்பு, கருவேலம்மற்றும் மூங்கில்.
மலைக்காடுகள்:
i) கிழக்கு இமயமலைக்காடுகள்:
200 செ.மீ.க்கு அதிகமாக மழைப்பொழிவு உள்ள இடங்களில் இக்காடுகள் காணப்படுகின்றன.
காணப்படும் இடங்கள் :
வடகிழக்கு இந்திய மாநிலங்களில் உள்ளகிழக்கு இமயமலைச்சரிவுகளில்இக்காடுகள் காணப்படுகின்றன.
காணப்படும் மரங்கள்:
சால். ஓக், லாரஸ், அமுரா, செஸ்ட்நெட் மற்றும் சினனமன்.
ii) மேற்கு இமயமலைக்காடுகள்:
மிதமான மழைப்பொழிவு உள்ள இடங்களில் இக்காடுகள்காணப்படுகின்றன.
காணப்படும் இடங்கள்:
ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்ரகாண்ட். காணப்படும் மரங்கள் சிறு புதர் செடிகள், சிறு மரங்கள், சிர், தியோதர், நீல பைன், பாப்புலர். பிர்ச் மற்றும் எல்டர்.
அல்பைன் காடுகள்:
காணப்படும் இடங்கள்:
இமய மலையின் 2400 மீட்டருக்கு மேல் உள்ள பகுதிகளில் இக்காடுகள்காணப்படுகின்றன.
காணப்படும் மரங்கள் :
ஓக். சில்வர் பிர், பைன் மற்றும் ஜூனிபர்.
ஒத அலைக்காடுகள்:
காணப்படும் இடங்கள்:
டெல்டாக்கள், பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழிமுகப் பகுதிகள். கங்கை. பிரம்ம புத்ரா, மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டாப் பகுதிகளில்காணப்படுகின்றன. இங்குள்ள காடுகள் மாங்குரோவ் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
3 ) காலநிலையைப் பாதிக்கும் காரணிகளைப் பட்டியலிட்டு விளக்குக.
காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்
அட்சங்கள் கடல் மட்டத்திலிருந்து உயரம், கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு, பருவக்காற்று, நிலத்தோற்றம், ஜெட் காற்றுகள் போன்றவை இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகளாகும்.
1 ) அட்சங்கள்
இந்தியா 8°4′ வட அட்சம் முதல் 376′ வட அட்சம் வரை அமைந்துள்ளது. 23°30′ வட அட்சமான கடகரேகை நாட்டை இருசமபாகங்களாக பிரிக்கிறது. கடகரேகைக்கு தெற்கே அமைந்துள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் அதிகவெப்பமும் மிக குளிரற்ற சூழலும் நிலவுகிறது. கடகரேகைக்கு வடக்கே உள்ள பகுதிகள் மித வெப்ப காலநிலையைக் கொண்டுள்ளது.
2 ) உயரம்
புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு மீட்டர் உயரத்திற்கும் 6.500 என்ற அளவில் வெப்பநிலைகுறைகிறது.
3 ) கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு
இந்தியாவின் பெரும்பகுதி குறிப்பாக தீபகற்ப இந்தியா கடலிலிருந்து வெகுதொலைவில் இல்லை. இதன் காரணமாக இப்பகுதி முழுவதும் நிலவும் காலநிலை கடல் சார் ஆதிக்கத்தை கொண்டுள்ளது. இப்பகுதியில் குளிர்காலம் குளிரற்று காணப்பட்டு வருடம் முழுவதும் சீரான வெப்பநிலையைக் கொண்டுள்ளது.
4 ) பருவக்கால காற்று
இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் மிக முக்கிய காரணி பருவக்கால காற்றாகும். இவை பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளாகும்.
5 ) நிலத்தோற்றம்
இந்தியாவின் நிலத்தோற்றம், காலநிலையின் வடஇந்தியா முக்கிய கூறுகளான வெப்பநிலை, வளிமண்டல அழுத்தம், காற்றின் திசை மற்றும் மழையளவை பெருமளவில் பாதிக்கின்றது.
6 ) ஜெட் காற்றோட்டங்கள்,
வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் ” ஜெட்காற்றுகள்” என்கிறோம். ஜெட் காற்றோட்ட கோட்பாட்டின் படி, துணை அயன மேலை காற்றோட்டம் வடபெரும் சமவெளிகளிலிருந்து திபெத்திய பீடபூமியை நோக்கி இடம்பெயர்வதால் தென்மேற்கு பருவக்காற்று உருவாகின்றது.கீழை ஜெட் காற்றோட்டங்கள் மற்றும் பின்னடையும் தென்மேற்கு பருவக்காற்று காலங்களில் வெப்ப மண்டல தாழ்வழுத்தங்களை உருவாக்குகின்றன.
வகுப்பு – 10
சமூக அறிவியல் -குடிமையியல்
அலகு -2 – இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
பகுதி-அ
1.ஒரு மதிப்பெண்வினா
1 ) ஒரு மசோதாவை நிதி மசோதிவாக அல்லது இதர மசோதாவை என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்
அ) குடியரசுத் தலைவர்
ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
இ)நாடாளுமன்ற விவகார அமைச்சர்
ஈ)லோக் சபாவின் சபாநாயகர்
விடை : ஈ)லோக் சபாவின் சபாநாயகர்
2. 2.நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர்………ஆவார்
அ)குடியரசுத்தலைவர்
ஆ)தலைமை நீதிபதி
இ)பிரதம அமைச்சர்
ஈ)அமைச்சர்கள் குழு
விடை : அ)குடியரசுத்தலைவர்
3. லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்சவயது
அ) 18வயது
ஆ) 21வயது
இ) 25வயது
ஈ)30வயது
விடை : இ) 25வயது
4. அமைச்சர்கள் குழு ஒட்டு மொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்.
அ)குடியரசுத்தலைவர்
ஆ)மக்களவை
இ) பிரதம அமைச்சர்
ஈ)மாநிலங்களவை
விடை : ஆ)மக்களவை
5.கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத்தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?
அ) சட்டப்பிரிவு 352
ஆ) சட்டப்பிரிவு 360
இ) சட்டப்பிரிவு 356
ஈ)சட்டப்பிரிவு 365
விடை : ஆ) சட்டப்பிரிவு 360
பகுதி-ஆ
11. குறுவினா
1. இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
- குடியரசுத் தலைவர், ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
- குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்கிறார்.
- குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும்.
- அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட தகுதி உடையவர் ஆவார்.
2.நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலைகளின் படி எவ்வாறு வகைப்படுத்தப் பட்டுள்ளனர்?
நடுவண் அமைச்சர்கள் மூன்று தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
- இராசாங்க அமைச்சர்கள்
- இணை அமைச்சர்கள்
3.உச்சநீதி மன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
- இந்தியக்குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- அவர் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருத்தல் வேண்டும்.
- அவர் பத்து ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும்.
- குடியரசுத் தலைவர் பார்வையில் சிறப்பு மிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும்.
பகுதி-இ
III. சிறுவினா
1 , இந்தியக் குடியரசுத் தலைவரின் சட்டமன்ற மற்றும் நீதிஅதிகாரங்களை விவரி.
குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்: சட்டமன்ற அதிகாரங்கள்:
- பொதுத்தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை இவர் உரையாற்றி துவக்கி வைக்கிறார்.
- மேலும் ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் இவருடைய உரையுடன் துவங்குகிறது.
- குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு இரண்டுமுறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்.
- அவர் நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும் ஒரு சட்ட மசோதா நிலுவையில் இருந்தாலும் அது குறித்து செய்தி அனுப்பலாம்.
- குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும் சட்டமாகின்றன.
- நிதி மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யமுடியாது.
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தையோ குடியரசுத் தலைவர் முடிவுக்குக் கொண்டுவரலாம்.
- மக்களவையின் ஐந்து ஆண்டுகாலம் முடியும் முன்னரே அதனைக் கலைக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு.
நீதி அதிகாரங்கள்:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
குடியரசு தலைவரின் சிறப்பு அதிகாரங்கள் :
பிரிவு 361(1)ன் படி குடியரசுத் தலைவர் மற்றும் ஒரு மாநிலத்தின் ஆளுநர் தன்னுடைய பணி மற்றும் அதிகாரத்தை செய்யவேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை
2.இந்திய உச்சநீதி மன்றத்தின் நீதி வரையறைகள் ஏதேனும் மூன்றினை விளக்குக
தனக்கேயுரிய நீதி வரையறை:
உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக வரும் வழக்குகள் தனக்கேயுரிய நீதி வரையறைக்குட்பட்டவை ஆகும். அவைகள்,
- இந்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்கள்.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்கள்.
- அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எழும் சிக்கல்கள் ஆகியன உச்ச நீதிமன்றத்தின் தனக்கேயுரிய நீதி வரையறைக்குட்பட்டதாகும்.
- அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்திட நீதிப்பேராணைகளை உச்சநீதிமன்றம் வழங்குகிறது.
மேல்முறையீட்டு நீதிவரையறை:
உச்ச நீதிமன்றமே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.
மாநில உயர் நீதிமன்றங்கள் உரிமையியல், குற்றவியல் அரசியலமைப்பு வழக்குகள் மீதான தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது.
ஆலோசனை நீதிவரையறை:
பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சட்டம் அல்லது உண்மை மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தினைப் பெற அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு அதிகாரத்தினை வழங்குகிறது.
இதர நீதிவரையறை:
உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தின் பொதுவான செயல்முறைகள், வழிமுறைகளை ஒழுங்குப்படுத்தும் விதிகளை உருவாக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
3. இந்தியப் பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?
- அரசியலமைப்பு சட்டப்பிரிவு 78 பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
- பிரதம அமைச்சர் அமைச்சர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
- தான் தலைமை வகிக்கும், அமைச்சரவைக் கூட்டத்தின் தேதி, நாள், நிகழ்ச்சிநிரல் குறித்து முடிவு செய்வார்.
- காபினெட் அமைச்சரவை கூட்டம் நடைபெறாத பொழுது பிரதம அமைச்சர் தனது மூத்த சகாக்கள் இருவர் அல்லது மூவரை இயல்பாகக் கலந்தாலோசிக்கலாம்.
- பிரதம அமைச்சர் பல்வேறு துறைகளின் பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
- நடுவண் அரசின் விவகாரங்கள் மற்றும் சட்டத்திற்கான முன்மொழிவுகள் போன்ற அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவருடன் விவாதிக்கிறார்.
- பிரதம அமைச்சர் என்பவர் குடியரசுத் தலைவருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்.
- பிரதம அமைச்சர் நாட்டின் உண்மையான தலைவராவார். அவர் நாட்டின் முக்கிய செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
- சர்வதேச மாநாடுகளான காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகப் பிரதமர் பங்கு கொள்கிறார்.
பகுதி – ஈ
IV ) பெருவினா
மக்களவை மற்றும் மாநிலங்களவையின் செயல்பாடுகளை பட்டியலிடுக.
மக்களவையின் செயல்பாடுகள்
- நாடாளுமன்றம் ஈரவைகளைக் கொண்டது. ஈரவைகளும் ஒரே மாதிரியான மதிப்பீடுகளையும் பொறுப்புகளையும் தன்னகத்தே கொண்டவை.
- இருப்பினும், நிதிச் செலவு ஒப்புதல் பெறுவது போன்ற சில விதிவிலக்குகள் உள்ளன. இவற்றில் முதலாவது மக்களவை, தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொண்ட, நாடெங்கிலுமுள்ள 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர்களால், நாட்டின் 543 நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்து, நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது மக்களவை ஆகும்.
- மக்களவையில் ஆங்கிலோ-இந்திய சமூகத்திலிருந்து நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்களாக இருப்பார்கள்.
- மக்களவை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 நாடாளுமன்றத்தில் அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் தீர்மானத்தில் நியமன உறுப்பினர்கள் முடிவெடுக்க முடியாது.
- மக்களின் பொதுப் பிரச்சினைகள் தொடர்பான விவாதங்கள், மக்களின் சமூக பொருளாதார தேவைகள், மற்றும் கொள்கை முடிவுகள் பற்றி கலந்துரையாட, விவாதிக்க, அமைந்த ஒரு மிக உயரிய மன்றம் தான் மக்களவை.
- இரு அவைகளை சார்ந்த உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்றே மக்கள் பொதுவாக அழைப்பர். மாநிலத்தின் ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலிருந்தும் மக்களால் தேர்தல்கள் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களவையில் இருப்பர். மக்களவையின் ஆயுட்காலம் ஐந்து வருடங்களாகும்.
மாநிலங்களவையின் செயல்பாடுகள்
- குடியரசுத் துணைத்தலைவர் மாநிலங்களவையின் அலுவல் வழி அவைத்தலைவராக இருப்பார். அவைத்தலைவர் மாநிலங்களவையின் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கி முறைப்படுத்துவார்.
- பணம்/ நிதி சம்பந்தமான முன்வரைவுகளைத் தவிர்த்து, ஏனைய முன்வரைவுகள் அனைத்தும் மாநிலங்களவையில் விவாதிக்கவும், கேள்விகள் கேட்கவும், முன்வரைவுகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றவும் நடைமுறைகள் விதிகளின் அடிப்படையில் நடைபெறும்.
- மக்களவையைப் போலவே சட்டம் இயற்றுதல்தான் மாநிலங்களவையின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று. இதில் மக்களவைக்கு இணையான அதிகாரத்தை மாநிலங்களவை கொண்டுள்ளது.
- ஐக்கிய அமெரிக்க நாட்டில் மாநிலக் குழுவின் உறுப்பினர்கள் செனட்டர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அங்கு மாநிலத்தின் பரப்பளவு மற்றும் மக்கள்தொகை ஆகியவற்றை பொருட்படுத்தாது ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான அளவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது.
- ஆனால் இந்தியாவில் மாநிலங்களவையில் பிரதிநிதித்துவம் அந்தந்த மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில் அமைந்துள்ளது.
வகுப்பு – 10
சமூக அறிவியல் -பொருளியல்-
அலகு -2 – இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
பகுதி-அ
1.ஒரு மதிப்பெண்வினா
1 ) உலகவர்த்தக அமைப்பின் (WTO) தலைவர்யார்?
அ)அமைச்சாவை
ஆ)தலைமை இயக்குநர்
இ)துணைதலைமை இயக்குநர்
ஈ)இவற்றில் எதுவுமில்லை
விடை : ஆ)தலைமை இயக்குநர்
2. இந்தியாவில் காலனியாதிக்க வருகை
அ) போர்ச்சுகீசியர்.டச்சு.ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு
ஆ)டச்சு,ஆங்கிலேயர் டேனிஷ் பிரெஞ்சு
இ) போர்ச்சுகீசியர், டேனிஷ், டச்சு,பிரெஞ்சு, ஆங்கிலேயர்
ஈ)டேனிஷ், போர்ச்சுகீசியர், பிரெஞ்சு, ஆங்கிலேயர், டச்சு
விடை : இ) போர்ச்சுகீசியர், டேனிஷ், டச்சு,பிரெஞ்சு, ஆங்கிலேயர்
3. காட் (GATT) இன் முதல் சுற்று நடைபெற்ற இடம்.
அ)டோக்கியோ
(ஆ)உருகுவே
(இ)டார்குவே
(ஈ) ஜெனீவா
விடை : (ஈ) ஜெனீவா
4. இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கை யெழுத்திட்டது?
(அ)1984
(ஆ)1976
(இ)1950
(ஈ)1994
விடை : (ஈ)1994
5. 1632இல் ஆங்கிலேயர்களுக்கு கோல்டன்ஃபயர்மான் வழங்கியவர்யார்?
(அ)ஜஹாங்கீர்
(ஆ)கோல்கொண்டா சுல்தான்
(இ)அக்பர்
(ஈ)ஓௗரங்கசீப்
விடை : (ஆ)கோல்கொண்டா சுல்தான்
பகுதி-ஆ
11. குறுவினா
உலகமயமாக்கல் என்றால் என்ன?
- உலகமயமாக்கல் என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும்.
- அடிப்படையில் உலகமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் செயல்முறையை குறிக்கிறது.
உலகமயமாக்கலின் வகைகளை எழுதுக
- தொன்மையான உலகமயமாக்கல்
- இடைப்பட்ட உலகமயமாக்கல்
- நவீன உலகமயமாக்கல்
பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக
பன்னாட்டு நிறுவனம் என்பது நாட்டில் பண்டங்களையும் அல்லது பணிகளையும் உற்பத்தி செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு பெருநிறுவனமாகும்.
பகுதி-இ
III. சிறுவினா
பன்னாட்டு நிறுவனங்களின் நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.
பன்னாட்டு நிறுவனங்களின் நன்மைகள் :
- பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருள்களை தரமாகவும் மற்றும் பரிவர்த்தனை செலவு இல்லாமலும் உற்பத்தி செய்கிறது.
- பன்னாட்டு நிறுவனங்கள் விலைகளை குறைப்பதால் உலகளாவிய நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது.
- பன்னாட்டு நிறுவனங்கள் வரி மாறுபாட்டை பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
- பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்களின் தீமைகள் :
- பன்னாட்டு நிறுவனங்கள் முற்றுரிமையை (சில தயாரிப்புகளுக்கு) வளர்ப்பதற்கான ஒரு வழியாகும்.
- பன்னாட்டு நிறுவனங்கள் சுற்று சூழலில் தீங்கினை உருவாக்க வாய்ப்புள்ளது.
- ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பன்னாட்டு நிறுவனத்தின் அறிமுகம் சிறிய உள்ளூர் வணிக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
- பன்னாட்டு நிறுவனங்கள் ஒழுக்க நெறிமுறைகளை மீறுவதோடு, தார்மீக சட்டங்களை அவர்கள் குற்றம் சாட்டி, மூலதனத்துடன் தங்கள் வணிக செயல்பாட்டினை திருப்பிக் கொள்வதற்கும் முனைவர்.
2.உலகவர்த்தக அமைப்பு பற்றி எழுதுக
உலக வர்த்தக அமைப்பு (WTO):
- 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக வர்த்தக அமைப்பை (WTO) அமைப்பதற்கு காட் உறுப்பு நாடுகள் உருகுவே சுற்றின் போது இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்திட 104 உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டது.
- WTO உடன்படிக்கை ஜனவரி 1, 1995 முதல் நடைமுறைக்கு வந்தது.
உலக வர்த்த க அமைப்பு (World Trade Organisation):
தலைமையகம் : ஜெனிவா, சுவிட்சர்லாந்து
நோக்கம் : வணிகத்தினை கட்டுப்படுத்தல், அயல்நாட்டு வாணிபம்
உறுப்பினர்கள் : தலைமை இயக்குநர், துணை தலைமை இயக்குநர்-4 மற்றும் 80 உறுப்பு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 அலுவலக ஊழியர்கள்.
உலக வர்த்தக அமைப்பின் குறிக்கோள்கள்:
- அயல் நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்தல்.
- வர்த்தக தாராளமயமாக்கலுக்கான பேச்சு வார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
- வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்.
- நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து அறிமுகம் செய்தல்.
- உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்.
- முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்.
- முழு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்.
உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.
உலகமயமாக்கலின் சவால்கள்:
- உலகமயமாக்கலில் நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் தானாக கிடைப்பதில்லை.
- வளர்ந்து வரும் உலகில் உலகமயமாக்கல், உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்பது அச்சத்திற்குரியதாகும்.
- உலகமயமாக்கலினால் உலகளாவிய போட்டி அதிகரித்த தொழில்துறை உலகில், ஊதியங்கள் தொழிலாளர் உரிமைகள், வேலைவாய்ப்பு நடைமுறைகள் ஆகியவற்றை அடிமட்டத்திற்கு கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.
- இது உலகளாவிய சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.
- உலகமயமாக்கலால் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
- மக்கள் அதிகமாக துரித உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் உடல்நலக் குறைவு மற்றும் நோய் பரவுதலுக்கு இது வழிவகுக்கிறது.
- உலகமயமாக்கல் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பகுதி – ஈ
IV ) பெருவினா
பன்னாட்டுநிறுவனங்களின் வளர்ச்சிக்கான காரணங்களை தொகுத்து எழுதுக.
பன்னாட்டுநிறுவனங்களின் வளர்ச்சிக்கான காரணங்கள்
1. சந்தை நிலப்பரப்பின் விரிவாக்கம்:
பெரிய அளவிலான நிறுவனங்கள் விரிவடைந்து வருவதால், அந்த நிறுவனம் உள்ள நாட்டின் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் அதன் செயல்பாடுகளை மேலும் விரிவாக்குகிறது.
2. சந்தைப்படுத்தும் மேன்மை:
ஒரு பன்னாட்டு நிறுவனம், தேசிய நிறுவனங்களின் மீது சந்தைப்படுத்தும் மேன்மையைக் கொண்டுள்ளது. இது சந்தை மதிப்பினைப் பெற்று, அதன் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் குறைவான சிரமங்களை எதிர் கொள்கிறது.
> மேலும் பயனுள்ள விளம்பர மற்றும் விற்பனை ஊக்குவிப்பு தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்கிறது.
3. நிதி மேன்மை :
> இதில் நிதி வளங்களும், உயர்நிதி பயன்பாடுகளும் உள்ளன.
> இதனால் வெளிப்புற மூலதன சந்தைகளை எளிதில் அணுகமுடியும் மற்றும் அதன் சர்வதேச புகழ் காரணமாக வளங்களை அதிகரிக்கவும் முடியும்.
4. தொழில்நுட்ப மேன்மை :
பின்தங்கிய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்க, ஊக்கமளித்ததற்கான முக்கிய காரணம் இந்த நிறுவனங்கள் தொழில் வளர்ச்சியில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் காணப்படுவதேயாகும்.
5. பண்டங்களின் கண்டுபிடிப்புகள் :
பன்னாட்டு நிறுவனங்கள், புதிய தயாரிப்புகள் மற்றும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை மேம்பட்ட வடிவமைப்புகளாக உருவாக்குவதற்கான பணியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.