Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Tamil Articles

300 Rare Riddles in Tamil – விடுகதையும் விடைகளும்

Riddles in Tamil – விடுகதையும் விடைகளும் :- Here is the long list of riddles in tamil vidukathai tamil question answers,Lot of teachers and parents want to give a vidukathai in tamil to students to improve their knowledge,But there is not a huge list like us shared online, so we decited to puthir kelvigalum vidaigalum in this page

300 Rare Riddles in Tamil - விடுகதையும் விடைகளும்
  1. ஓடுவான், வருவான்; ஒற்றைக் காலில் நிற்பான். அவன் யார்? Ans:-கதவு
  2. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்து. அது என்ன?Ans:-வெண்டைக்காய்
  3. கூரை வீட்டைப் பிரித்தால் ஓட்டு வீடு. ஓட்டு வீட்டுக்குள்ளே வெள்ளை மாளிகை. வெள்ளை மாளிகையின் நடுவே ஒரு குளம். அது என்ன?Ans:-தேங்காய்
  4. எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவேன். தண்ணீர் குடித்தால் இறந்துவிடுவேன். நான் யார்?Ans:-நெருப்பு
  5. ஊர் முழுவதும் சுற்றுவேன். வீட்டுக்குள் நுழைய மாட்டேன். நான் யார்?Ans:-செருப்பு
  6. மஞ்சள் குருவி ஊஞ்சலாடுது. அது என்ன?Ans:-எலுமிச்சை
  7. ஆடி ஆடி நடந்தான், அமைதியாக அதிர வைத்தான் அவன் யார்? Ans:-யானை
  8. உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன் அவன் யார்?Ans:-எறும்பு
  9. அடித்தாலும், உதைத்தாலும் அழ மாட்டான் அவன் யார்? Ans:-பந்து
  10. மழையோடு வருகின்ற வெள்ளை புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது அது என்ன?Ans:- ஈசல்
  11. இருப்பது இரண்டு கால் ஓடுவது குதிரை வேகம் இறக்கை உண்டு பறக்காது அது என்ன? Ans:-நெருப்புக் கோழி
  12. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன் அவன் யார் ? Ans:-தலையணை
  13. பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?Ans:- சீப்பு
  14. ஐந்து வீட்டிற்க்கு ஒரு முற்றம் அது என்ன? Ans:-உள்ளங்கையும் விரல்களும்
  15. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?Ans:- நிழல்
  16. காற்றைக் குடித்து காற்றில் பறப்பான் அவன் யார்?Ans:- பலூன்
  17. இலையுண்டு கிளையில்லை, பூ உண்டு மணமில்லை, காய் உண்டு விதையில்லை, பட்டை உண்டு கட்டை இல்லை, கன்று உண்டு பசு இல்லை அது என்ன?Ans:- வாழை
  18. எவ்வளவு முயன்றாலும் அவனை கடிக்க முடியாது. அவன் இல்லாமல் உணவே இல்லை. அவன் யார் ? Ans:-தண்ணீர்
  19. பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழுக்காது. அது என்ன? Ans:-தேங்காய்
  20. இளமையில் பச்சை, முதுமையில் சிகப்பு, குணத்திலே எரிப்பு. விடை தெரியுமா? Ans:-மிளகாய்
  21. தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன? Ans:-நெல்
  22. அடிக்காமல், திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்? Ans:-வெங்காயம்
  23. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்? Ans:-மெழுகுவர்த்தி
  24. நீண்ட உடலிருக்கும் தூணும் அல்ல, உடலில் சட்டை இருக்கும் ஆனால் உயிர் இல்லை, துயிலில் சுகம் இருக்கும் மெத்தை அல்ல அது என்ன? Ans:-தலையணை
  25. இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?Ans:- கடிகாரம்
  26. வெயிலில் மலரும், காற்றில் உலரும். அது என்ன?Ans:- வியர்வை
  27. போகும் இடமெல்லாம் கோடு கிழித்திடுவான் – அவன் யார்?Ans:- நத்தை
  28. இருந்தாலும், இறந்தாலும், பறந்தாலும் இறக்கை மடக்காத பட்சி – அது என்ன?Ans:- தட்டாம் பூச்சி
  29. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?Ans:- கண்
  30. அச்சு இல்லாத சக்கரம்: அழகு காட்டும் சக்கரம். அது என்ன? Ans:- வளையல்
  31. ஓடியாடித் திரியும் – உடலைத் தேடிக் குத்தும் – அது என்ன?Ans:- கொசு
  32. கனியிலே சிறந்த கனி, என்றுமே திகட்டாத கனி… அது என்ன?Ans:- பிள்ளைக்கனி
  33. கடுகு மடிக்க இலை இல்லை, யானை படுக்க இடமுண்டு- அது என்ன? Ans:- சவுக்குமரம்
  34. நீரிலே பிறப்பான்.. வெயிலிலே வளர்வான்.. நீரிலே இறப்பான்..! அவன் யார்? Ans:- உப்பு
  35. செய்வதைச் செய்யும் குரங்கும் அல்ல; சிங்காரிக்க உதவும் சீப்பும் அல்ல. அது என்ன?Ans:- கண்ணாடி
  36. அக்கா வீட்டுக்குத் தங்கை போவாள்.. ஆனால், தங்கை வீட்டுக்கு அக்கா வரமுடியாது! அது என்ன?Ans:- கால் படி, அரை படி
  37. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்? Ans:-தேள்
  38. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன? Ans:-தலைமுடி
  39. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்? Ans:-வெங்காயம்
  40. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? Ans:-கரும்பு
  41. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?Ans:- விழுது
  42. உடம்பு முழுவதும் முள். அது என்ன?Ans:-சீப்பு
  43. கையும் இல்லை, காலும் இல்லை. ஓடிக்கொண்டே இருப்பேன். நான் யார்?Ans:-நேரம்
  44. வெள்ளை மணலுக்குள்ளே தங்கம். அது என்ன?Ans:-முட்டை
  45. பச்சைப் பேருந்துக்குள் சிவப்பு பயணிகள். அவர்கள் அணியும் தொப்பி கறுப்பு. அது என்ன?Ans:-தர்பூசணி
  46. உன்னை எங்கு சென்றாலும் தொடர்ந்து வருவான். அது யார்?Ans:-நிழல்
  47. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? Ans:-பட்டாசு
  48. ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்? Ans:-மூச்சு
  49. கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்? Ans:-பூரி
  50. கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?Ans:- காகம்
  51. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள் ? Ans:-வெண்டைக்காய்
  52. கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்? Ans:-பட்டுத்துணி
  53. படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ? Ans:-பட்டாசு
  54. ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன? Ans:-பற்கள்
  55. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?Ans:- அகப்பை
  56. காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?Ans:- சூரியன்
  57. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?Ans:- சோளக்கதிர்
  58. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ? Ans:-உப்பு
  59. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன? Ans:-கடல்
  60. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்? Ans:-நிழல்
  61. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன? Ans:-சைக்கிள்
  62. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?Ans:- கண்
  63. ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?Ans:- ஆமை
  64. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?Ans:- முட்டை
  65. எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ? Ans:-அடுப்புக்கரி
  66. உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்? Ans:-பெயர்
  67. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?Ans:- கண் இமை
  68. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன? Ans:-சிரிப்பு
  69. வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன? Ans:-நாய்
  70. இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன? Ans:-வாழை
  71. வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன? Ans:-சோளம்
  72. இவனும் ஒரு பேப்பர் தான்; ஆனால், மதிப்போடு இருப்பான். அது என்ன? Ans:-பணம்
  73. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.Ans:- கொசு
  74. கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன?Ans:- பூசனிக்கொடி
  75. எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?Ans:- குடை
  76. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்? Ans:-தொலைபேசி
  77. பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன? Ans:-தேங்காய்
  78. தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்? Ans:-மீன் வலை
  79. படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?Ans:- பட்டாசு
  80. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன? Ans:-பாய்
  81. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன? சிலந்தி Ans:-வலை
  82. கீழேயும் மேலேயும் மண்; நடுவிலே அழகான பெண். அது என்ன? Ans:-மஞ்சல்செடி
  83. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ? Ans:-அலாரம்
  84. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?Ans:- தராசு
  85. பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான். அவன் யார்? Ans:-தேன்
  86. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன? Ans:-சிலந்தி
  87. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?Ans:- தக்காளி
  88. ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன? Ans:-தோடு
  89. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்?Ans:- நுங்கு
  90. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன?Ans:- தொலைபேசி
  91. வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை, கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும்
  92. இல்லை, வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்?Ans:- சிலந்தி
  93. கீழேயும் மேலேயும் மண்; நடுவிலே அழகான பெண். அது என்ன? Ans:-மஞ்சல்செடி.
  94. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ? Ans:-அலாரம்
  95. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன? Ans:-தராசு
  96. பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான். அவன் யார்? Ans:-தேன்
  97. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன? Ans:-சிலந்தி
  98. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன? தக்காளி
  99. ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன?Ans:- தோடு
  100. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்? Ans:-நுங்கு
  101. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன? Ans:-தொலைபேசி
  102. வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை, கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை, வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்?Ans:- சிலந்தி
  103. பா‌ர்‌க்க‌த்தா‌ன் கறுப்பு; ஆனா‌ல் உள்ளமோ சிவப்பு. நம‌க்கு‌த் தருவதோ சுறுசுறு‌ப்பு அது என்ன?Ans:- தேயிலை
  104. பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்? Ans:-சீப்பு
  105. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது? Ans:-உப்பு
  106. பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?Ans:- சீப்பு
  107. வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன? Ans:-அகப்பை
  108. காதை திருகினால் பாட்டு பாடுவான்? அவன் யார்?Ans:- ரேடியோ
  109. நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில் பெண்கள் விருப்பம், அது என்ன?Ans:- பட்டு
  110. நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம் அது என்ன? நத்தை
  111. நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும் அது என்ன? Ans:-தையல் ஊசியும் நூலும்
  112. வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்?Ans:- நாட்காட்டி
    முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்?Ans:- மின்சாரம்
  113. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன?Ans:- செருப்பு
  114. மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்? Ans:-அணில்
  115. நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன். நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசமும் இருக்கு. நான் யார் ? Ans:-ஆமை
  116. தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?Ans:- நெல்
  117. பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழக்காது. அது என்ன? Ans:-தேங்காய்
  118. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்? தையல்காரர்
  119. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன? Ans:-வழுக்கை / பொக்கை
  120. இளமையில் பச்சை, முதுமையில் சிகப்பு, குணத்திலே எரிப்பு. விடை தெரியுமா?Ans:- மிளகாய்
  121. எவ்வளவு முயன்றாலும் அவனை கடிக்க முடியாது. அவன் இல்லாமல் உணவே இல்லை. அவன் யார் ? Ans:-தண்ணீர்
  122. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?Ans:- Ans:-நிழல்
  123. நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்? Ans:-நாற்காலி
  124. சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன? Ans:-வாழைப்பழம்
  125. ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம் அது என்ன? Ans:-வாய்
  126. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்? Ans:-படகு
  127. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது! – அது என்ன? Ans:-குயில்
  128. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன? Ans:-நிலா
  129. பார்க்க அழகு பாம்புக்கு எதிரி அது என்ன? Ans:- மயில்
  130. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன? Ans:- கோலம்
  131. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்? Ans:-எறும்புக்கூட்டம்
    எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன? Ans:-விக்கல்
  132. குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான். Ans:-கரன்டி
  133. அடிக்காமல்,திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்? Ans:-வெங்காயம்
  134. பாலிலே புழு நெளியுது. அது என்ன? Ans:- பாயாசம்
  135. வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்? Ans:-ஆறு
  136. மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்? Ans:-பஞ்சு
  137. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை அது என்ன ? Ans:-தென்னை
  138. 8. சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன? Ans:-கொசு
  139. 9. மழையில் பிறந்து வெயிலில் காயுது? Ans:-காளான்
  140. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான், அவன் யார்? Ans:-பந்து
  141. வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு. அது என்ன?Ans:- நாணயம்
  142. ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது அது என்ன ? Ans:-கண்
  143. பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன?Ans:- வேர்கடலை
  144. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன? Ans:-வத்தல் மிளகாய்
  145. இருந்த இடத்தில் நகர்ந்தபடி இரவும் பகலும் செல்வான். அவன் யார்?Ans:- கடிகாரம்
  146. உடம்பெல்லாம் பல் கொண்ட ஒருத்திக்கு கடிக்க தெரியாது?Ans:- சீப்பு
  147. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான் அவன் யார்? Ans:-தென்னை
  148. சலசலவென சத்தம் போடுவான், சமயத்தில் தாகம் தீர்ப்பான். அவன் யார்?Ans:- அருவி
  149. கல்லில் காய்க்கும்பூ தண்ணீரில் மலரும்பூ, அது என்ன பூ?Ans:- சுண்ணாம்பு
  150. காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்? Ans:-பலூன்
  151. நடந்தவன் நின்றான் கத்தியை எடுத்து தலையைச் சீவினேன் மறுபடியும் நடந்தான் அவன் யார்? Ans:-பென்சில்
  152. எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன? Ans:-மின் விசிறி
  153. வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன? Ans:-உழுந்து
  154. முத்துக் கோட்டையிலே மகாராணி சிறைபட்டிருக்கிறாள். அவள் யார்? Ans:-நாக்கு
  155. கூரை வீட்டைப் பிரிச்சா ஓட்டுவீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!அது என்ன ?Ans:- தேங்காய்
  156. பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன? Ans:-வானொலி பெட்டி
  157. கந்தல் துணிக்காரி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்? Ans:-சோளப்பொத்தி
  158. வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார். அவர் யார்? Ans:-பாம்பு
  159. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்? Ans:-அஞ்சல் பெட்டி.
  160. இது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர்; பிற்பகுதி தேசத் தந்தையை குறிக்கும். அது என்ன? Ans:-சூரிய காந்தி
  161. பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்? Ans:-கிளி
  162. இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்? Ans:-நிலா
  163. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன? Ans:-கண்ணீர்
  164. அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன? Ans:-அம்மி குளவி
  165. ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல்படி. அது என்ன? Ans:-மூக்கு
  166. ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது ? Ans:-சந்திரன்
  167. உடம்பெல்லாம் தங்கநிறம், தலையில் பச்சை கிரீடம் அது என்ன? Ans:-அன்னாசிப் பழம்
  168. குண்டுச் சட்டியில் கெண்டை மீன்.அது என்ன? Ans:-நாக்கு.
  169. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்? Ans:-மெழுகுத்திரிவத்தி
  170. நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன?Ans:- நாய்
  171. பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை? Ans:-மழை
  172. நீண்ட உடம்புக்காரன், நெடுந்தூரப் பயணக்காரன்? Ans:-ரயில்
  173. எடுக்க எடுக்க வளரும். எண்ணெயைக் கண்டால் படிந்துவிடும். அது என்ன?Ans:- முடி
  174. அரிவாளால் வெட்டி வெட்டி அடுப்பிலே வெச்சாலும் மூச்சே விட மாட்டான். அவன் யார்? Ans:-விறகு
  175. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்? Ans:-ஒட்டகம்
  176. ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்? நெருப்பு
  177. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது?Ans:- செருப்பு
  178. ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான். Ans:-செருப்பு
  179. கருப்பர்கள் மாநாடு போட்ட இடத்தில் கண்ணீர் பிரவாகம். அது என்ன? Ans:-மேகம், மழை.
  180. கூட்டுக்குள் குடியிருக்கும் குருவி அல்ல; கொலை செய்யும்; பாயும்; அது வீரனுமல்ல. அது என்ன? Ans:-அம்பு.
  181. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ஓட்டம் அது என்ன ? Ans:-இதயம்
  182. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்? Ans:-ஒட்டகம்
  183. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்? Ans:-தேங்காய்
  184. பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன? Ans:-கண்கள்
  185. முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கை தேவை? Ans:-ஆபத்து
  186. மண்ணுகுளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ? Ans:-மஞ்சள்
  187. நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன?Ans:- தலை முடி
  188. குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன் தூக்கி விடுவான் – அது என்ன? Ans:-பணியாரம்
  189. எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான். அவன் யார்?Ans:- பென்சில்
  190. பச்சைபெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள். அது என்ன?Ans:- வெண்டைக்காய்
  191. நீண்ட உடலிருக்கும் தூணும் அல்ல ,உடலில் சட்டை இருக்கும் ஆனால் உயிர் இல்லை,துயிலில் சுகம் இருக்கும் மெத்தை அல்ல அது என்ன? Ans:-தலையணை
  192. எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன? Ans:-நண்டு
  193. ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஓய்வு எடுத்துவிட்டால் மறுபடியும் இயங்காது. அது என்ன? Ans:-இதயம்
  194. நான் இருந்ததில்லைஆனாலும் இருப்பவனாக இருப்பேன். என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன் பழசாயிருப்பேன். என்னை நம்பியே இந்த உலகமும் ,மக்களும் நல்லது நடக்குமென எண்ணுகிறார்கள் நான் யார்?Ans:- நாளை
  195. கிட்ட இருக்கும் பட்டணம்; எட்டித்தான் பார்க்க முடியவிலை. அது என்ன?Ans:- முதுகு.
  196. கோவிலைச் சுற்றிக் கருப்பு; கோவிலுக்குள்ளே வெளுப்பு. அது என்ன? Ans:-சோற்றுப்பானை-சோறு.
  197. வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன?Ans:- தீக்குச்சி
  198. அரைசாண் ராணிக்கு வயிற்றில் ஆயிரம் முத்துகள். அது என்ன? Ans:-வெண்டைக்காய்
  199. அழுவேன்,சிரிப்பேன் அனைத்தும் செய்வேன் நான் யார்? Ans:-முகம் பார்க்கும் கண்ணாடி
  200. முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன? Ans:-நத்தை
  201. அம்மா போடும் வட்டம், பளபளக்கும் வட்டம், சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன? Ans:-அப்பளம்
  202. தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்?Ans:- பனம்பழம்
  203. 3. முயல் புகாத காடு எது? Ans:-முக்காடு
  204. உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன? Ans:-இளநீர்
  205. தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்? Ans:-பென்சில்
  206. கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்ன?Ans:- சவப்பெட்டி
  207. மழை காலத்தில் குடை பிடிப்பான், மனிதனல்ல. அவன் யார்?Ans:- காளான்
  208. ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டு, ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது, அக் குற்றம் என்ன? Ans:-தற்கொலை
  209. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள், அவள் யார்?Ans:- செல்போன்
  210. ஓவென்று உயர்ந்த மலை, நடுவே உடன் பிறப்பு இருவர் ! ஒருவரை மற்றவர் பார்ப்பதுமில்லை; பேசுவதும் இல்லை. அவர்கள் யார்?Ans:- கண், மூக்கு.
  211. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்?Ans:- சிலந்தி
  212. தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன?Ans:- முதுகு
  213. வீட்டிலிருப்பான் காவலாலி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?Ans:- பூட்டும் திறப்பும்
  214. கொம்பு நிறைய கம்பு அது என்ன ? Ans:-மாதுளம்பழம்
  215. காட்டிலே பச்சை; கடையிலே கறுப்பு; வீட்டிலே சிவப்பு. அது என்ன? Ans:-மரம்-கரி-நெருப்பு.
  216. என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும் ஆவல்.தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை. நான் மறைக்கப்பட வேண்டியவன். நான் யார்? Ans:-இரகசியம்
  217. நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார்? Ans:-மணிக்கூடு
  218. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன? Ans:-ஈசல்
  219. நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்? Ans:-பென்சில்
  220. விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன?Ans:- தும்பிக்கை
  221. வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன? கல்வி
  222. அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு. அது என்ன? Ans:-இடியாப்பம்
  223. தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் -அது என்ன? Ans:-கப்பல்கள்”
  224. தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும். அது என்ன? Ans:-எழுமிச்சம்பழம்”
  225. இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன? Ans:-கடிகாரம்
  226. உணவு கொடுத்தால் வளரும்; நீர் கொடுத்தால் அழியும். அது என்ன?Ans:- நெருப்பு
  227. ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான். அது என்ன?Ans:- தீக்குச்சி
  228. கத்தி போல் இலை இருக்கும் கவரிமான் பூ பூக்கும் தின்ன பழம் கொடுக்கும் தின்னாத காய் கொடுக்கும் அது என்ன? Ans:-வேம்பு
  229. எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன? Ans:-மெழுகுவர்த்தி
  230. அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது – அது என்ன? Ans:-புடலங்காய்
  231. மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம் அது என்ன? Ans:-அன்னாசிப்பழம்
  232. ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு; இவனுக்கு மட்டும் ஓய்வில்லை; இரவும் பகலும் ஓட்டந்தான். அது என்ன? Ans:-மூச்சு
  233. சட்டையைக் கழற்றியதும் சடக்கென்று உள்ளே விழும் – அது என்ன? Ans:-வாழைப்பழம்”
  234. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம். அது என்ன? Ans:-வளையல்
  235. வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது அது என்ன?Ans:- விமானம்”
  236. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?Ans:- கடிதம்
  237. உருவத்தில் சிறியவன். உழைப்பில் பெரியவன். அவன் யார்? Ans:-எறும்பு
  238. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்? Ans:-தென்றல்
  239. வெயிலில் மலரும், காற்றில் உலரும். அது என்ன? Ans:-வியர்வை
  240. காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது அது என்ன? Ans:-முட்டை
  241. காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க உதவும் சங்கு அது என்ன?Ans:- சேவல்”
  242. அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன? Ans:-காற்று
  243. குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்? Ans:-கத்தரிக்காய்
  244. அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும் – அது என்ன? Ans:-இளநீர்
  245. எட்டாத ராணியாம் இரவில் வருவாள், பகலில் மறைவாள். அது யார்? Ans:-நிலா
  246. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன ? Ans:-மத்து
  247. கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்? Ans:-புகை
  248. அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். அது என்ன? Ans:-சாம்பிராணி
  249. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார் ? Ans:-தலையணை
  250. நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத தண்ணீர் இல்லை அது என்ன? Ans:-அச்சு வெல்லம்”
  251. வாலால் நீர் குடிக்கும்,வயால் பூச்சொரியும் அது என்ன? Ans:-விளக்கு
  252. அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன? Ans:-மிருதங்கம்
  253. கை பட்டால் சிணுங்கும் கன்னிப் பெண், கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார்? கா‌லி‌ங்பெ‌ல்
  254. பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு. அது என்ன? Ans:-வானம்
  255. ஓட்டம் நின்றால் போதும் ஆட்டம் நின்று போகும். அது என்ன? Ans:-ரத்தம்
  256. கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிற்குது. அது என்ன? Ans:-உளுந்து
  257. மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன? Ans:-தீபம்
  258. காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம் அது என்ன?Ans:- வானம்”
  259. உரசினால் உயிரே மாய்த்துக் கொள்ளும் அது என்ன?Ans:- தீ‌க்கு‌ச்‌சி
  260. ஆறு எழுத்துள்ள ஓர் உலோகப் பெயர். அதன் கடை மூன்று எழுத்துகள் சேர்ந்தால் ஒரு கொடிய பிராணி. அது என்ன? துத்தநாகம்
  261. வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன? Ans:-மழை
  262. மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன? Ans:-மஞ்சள்
  263. காளைக்குக் கழுத்து மட்டும் தண்ணீர் அது என்ன?Ans:- தவளை”
  264. ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன? Ans:-கண்ணீர்
  265. “நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன் நான் யார்? Ans:-வெங்காயம்”
  266. தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்?Ans:- உப்பு
  267. சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான் – அது என்ன? தீக்குச்சி
  268. “நடலாம், பிடுங்க முடியாது அது என்ன? Ans:-பச்சை குத்துதல்”
  269. ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவை யாவை? Ans:-எறும்புகள்
  270. ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன? Ans:-ஊதுபத்தி”
  271. கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ளநீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன?Ans:- நெருப்பு
  272. தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன?Ans:- க‌ண் இமை
  273. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார் ?Ans:- மெட்டி
  274. வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும். அது என்ன? Ans:-வாழை
  275. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை – அது என்ன ?Ans:- தலை வகிடு
  276. வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக் காரி அது என்ன? Ans:-மயில்”
  277. அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன? Ans:-மதி
  278. வேகாத வெயிலில் வெள்ளையப்பன் விளைகிறான். அது என்ன?Ans:- உப்பு
  279. வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்? Ans:-கத்தரிக்கோல்”
  280. தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார்?Ans:- இள‌நீ‌ர்
  281. ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன? Ans:-மரம்
  282. காவி உடையணியாத கள்ளத்தவசி கரையோரம் கடுந்தவம் செய்கிறான் அவன் யார்? Ans:-கொக்கு”
  283. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான். அது என்னAns:- ? ஊசி
  284. காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை. அது என்ன? Ans:-ஈ
  285. ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்? Ans:-துடைப்பம்”
  286. கோடையிலே ஆடி வரும் வாடையில முடங்கி விடும் – அது என்ன?Ans:- மின்விசிறி”
  287. நடைக்கு உவமை, நளனக்கு தூதுவன் அவன் யார்? Ans:-அன்னம்”
  288. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை மடக்கித் தாக்கும். அது என்ன ? Ans:-தேனீ
  289. ஆயிரம் பேர் வந்து சென்றாலும் வந்த சுவடு தெரியாது? அது என்ன? Ans:-எறு‌ம்பு
  290. வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன? Ans:-நெருப்பு
  291. தணித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை அது என்ன?Ans:- உப்பு
  292. கலர்ப்பூ கொண்டைக்காரி, காலையில் எழுப்பிவிடுவாள். அது என்ன? Ans:-சேவல்
  293. சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு, பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன? Ans:-கிளி”
  294. தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். அது என்ன?Ans:- உரோமம்
  295. காலில்லாதவன் வளைவான், நெளிவான் காடு மேடெல்லாம் அலைவான் அவன் யார்? Ans:-பாம்பு”
  296. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து. அது என்ன ? Ans:-தேன்
  297. சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன? Ans:-பப்பாளி விதைகள்”
  298. காலையிலே கூவும் பட்சி, கந்தன் கொடியில் காணும் பட்சி, குப்பையைக் கிளறும் பட்சி, கொண்டையுடைய பட்சி – அது என்ன? Ans:-சேவல்”
  299. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது. அது என்ன?Ans:- சங்கு
  300. ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை. அது என்ன?Ans:- குடை
  301. காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான். அவன் யார்? Ans:-புல்லாங்குழல்
  302. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அது என்ன? Ans:-குளிர்
  303. சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள். அது என்ன? Ans:-மின்விசிறி
  304. அடி மலர்ந்து நுனி மலராத பூ – அது என்ன ? Ans:-வாழைப்பூ
  305. ஆயிரம் தச்சர் கூடி கட்டிய அந்த அழகான மண்டபம் , ஒருவர் கண்பட்டு உடைந்ததாம் அந்த மண்டபம். அது என்ன? Ans:-தேன் கூடு
  306. பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்துவிடுவேன். நான் யார்? Ans:-அமைதி
  307. அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது. அது என்ன? Ans:-தண்ணீர்
  308. நடக்கத் தெரியாதவன், நட்டுவனுக்கு வழி காட்டுகிறான் அவன் யார்? Ans:-கைகாட்டி”
  309. தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன? Ans:-அன்னாசிப்பழம்
  310. ராஜா, ராணி உண்டு நாடு அல்ல. இலைகள் பல உண்டு, தாவரம் இல்லை! அது என்ன?Ans:- காட்ஸ்
  311. கந்தல் துணிக்காறி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்? Ans:-சோளப்பொத்தி
  312. மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?Ans:- பஞ்சு”
  313. கழுத்து உண்டு, தலையில்லை; உடல் உண்டு, உயிர் இல்லை, கையுண்டு, விரல் இல்லை. அது என்ன?Ans:- சட்டை
  314. கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் குறியும் மாறாது – அது என்ன? Ans:-கரும்பு”
  315. மணல் வெளியில் ஓடுது, தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன?Ans:- ஒட்டகம்”
  316. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான். அவன் யார் ?Ans:- வானொலிப் பெட்டி
  317. சங்கீதம் பாடும் சல்லாபம் செய்யும் சமயத்தில் ரத்தம் குடிக்கும் – அது என்ன? Ans:-கொசு”
  318. நான்தான் சகலமும். என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது. எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார் ? காற்று
  319. கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி தீர்த்தம் விட்டானாம் தங்கத் தம்பி – அது என்ன? தேங்காய்”
  320. முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன?
  321. அண்டமென்ற பெயரும் உண்டு, அடைகாத்தால் குஞ்சுமுண்டு. அது என்ன? Ans:-முட்டை
  322. ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்?Ans:- பம்பரம்
  323. காலைக்கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும் நாயல்ல அது என்ன? Ans:-முள்”
  324. பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது. அது என்ன? Ans:-பாம்பு
  325. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும், தீ அல்ல; பளபளக்கும், தங்கம் அல்ல. அது என்ன?Ans:- சூரியன்
  326. பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?Ans:- முருங்கைமரம்
  327. என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார் ?Ans:- துவாரம்
  328. தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன? Ans:-தொட்டா சுருங்கிச் செடி
  329. ஆகாயத்தில் பறக்கும். அக்கம் பக்கம் போகாது. அது என்ன? கொடி
  330. அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன? Ans:-நிலா
  331. பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன? Ans:-பெட்ரோல்
  332. இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?Ans:- இதயம்