சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வரும் பயில்வான் ரங்கசாமி மீது தற்போது சட்ட ரீதியாக புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவருமாகிய பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சையாக பேசுபவர்.

தற்போது பெரிதாக எந்த படத்திலும் நடிக்காத பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து வருகிறார்.

அவர் அளிக்கும் ஒவ்வொரு பேட்டியிலும் ஒரு சினிமா நட்சத்திரத்தின் கிசு கிசு தகவல் கண்டிப்பாக இடம்பெற்று இருக்கும்.

மேலும், சினிமா தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், வில்லங்கமாக கேள்வி எழுப்பி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஒருவழியாக்குவார் என்று பரவலாக பேச்சு உண்டு.

80களுக்கு முன்பிருந்தே அவர் சினிமாவில் வலம் வருபவர் என்பதால், அப்போதைய சினிமா பிரபலங்களுடன் தனக்கு இருந்த நெருக்கத்தை வைத்து, அவர்கள் பற்றிய தகவல்களை அவ்வப்போது பகிர்வார்.

சில நேரங்களில் உறுதி செய்யப்ப்படாத  தகவல்களையும் பார்த்தது போலவே சொல்லி சர்ச்சையில் சிக்குவதும் பயில்வானின் வேலை.

இப்படி சினிமாத்துறையிலேயே சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வரும் பயில்வான் ரங்கசாமி மீது தற்போது சட்ட ரீதியாக புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.தமிழ் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை சேர்ந்த தயாரிப்பாளர் கே.ராஜன் புகார் அளித்து இருக்கிறார்.

அந்த புகாரில், "பயில்வான் ரங்கநாதன் பொய்யான செய்திகளை ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் தொடர்ந்து பேசி வருகிறார், அதனால் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் மன உளைச்சலில் இருக்கிறார்கள்.

சமீபத்திய அவர் அளித்த பேட்டியில் என்னை யாரும் தாக்க முடியாது, அப்படி தாக்க வந்தால் அரிவாளால் அறுத்து விடுவேன் என்று பயில்வான் மிரட்டி இருக்கிறார். அவரது பேச்சு வன்முறையை தூண்டுகிறது.

அதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.இந்த புகாரை அடுத்து பயில்வான் ரங்கநாதன் கைதாகலாம் என கூறப்படுகிறது.

சமீபத்தில் ராதிகா,கஸ்தூரி என பல நடிகைகள் குறித்து ரங்கநாதன் தரக்குறைவாக பேசியதும் அவர்கள் அதற்கு கண்டனமும் தெரிவித்தனர்.

பயில்வான் கருத்துகள் குறித்து பேசிய கஸ்தூரி, கண்ட நாயோட எதுக்கு வம்புன்னு பாத்தேன்...இந்த முழு பொய்யனை இனியும் சும்மா விட்டா பெத்த அம்மாவையே கூட தப்பா பேசுவான்.

Law suit coming up. I request respected journalists & actor community support எனக் குறிப்பிட்டிருந்தார்.