Desiya Orumaipadu Katturai in Tamil – தேசிய ஒருமைப்பாடு :- இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை என்ற பத்திர்ற்கு ஏற்ப பல்வேறு கலாச்சாரங்கள் ,பல்வேறு மதங்கள் ,பல்வேறு சமூக வேறுபாடுகள் என பிரிந்திருந்தாலும் ,பல்வேறு விதங்களில் ஒற்றுமையை கொண்டுள்ளது. இந்திய தேசிய ஒருமைப்பாடு என்பது எப்போதும் முன்னணியில் உள்ளது .
பண்டைய களங்களில் தேசிய ஒருமைப்பாடு குறைவாக இருந்த போதிலும் சுதந்திர போராட்டம் தொடங்கிய காலம் முதல் தேசிய ஒருமைப்பாடு அனைத்து மக்களின் மனங்களிலும் வேரூன்ற ஆரம்பித்தது . தேச தலைவர்களின் எழுச்சியான போராட்டங்களின் விளைவாக தேசிய ஒருமைப்பாடு வளர்ந்தது .
ஆங்கிலிலேயே அரசின் பிரித்தாளும் கொள்கையை முறியடித்த போதிலும் சுதந்திர போராட்டத்திற்கு பின்பு அமைந்த இந்திய அரசு எடுத்த பல்வேரு நடவடிக்கைகளின் பலனாக தேசிய ஒருமைப்பாடு மலர்ந்தது . இந்திய ஜனத்தொகை மிகப்பெரிய அளவில் இருப்பதாலும் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு விதமான கலாச்சார வேறுபாடுகள் இருப்பதாலும் ஆரம்ப காலகட்டங்களில் மக்களிடையே வேற்றுமை அதிக அளவில் இருந்தன .
கல்வி அறிவு மற்றும் இந்திய ஜனநாயகத்தின் வளர்ச்சியாலும் இப்போது ஒருமைப்பாடு வளர்ந்துள்ளது. தேசிய ஒருமைப்பாடு என்பது இந்திய ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக மாற துவங்கியது.
இந்திய வரலாற்றில் மொகலாயர்கள் வருகையின் போது ஏற்பட்ட பிரிவினைகளாலேயே ராஜபுத்திரர்கள் ஒன்றிணைந்து போரிடாமல் தனி தனியாக போரிட்டனர் ,இதன் காரணமாகவே இந்தியா மொகலாயர்கள் வசம் அடிபணிய வேண்டியதாக போனது .ஆங்கிலேய அரசு இந்திய தேசத்தை கவரும் நோக்குடன் செயல் பட்ட போது நமது அரசர்களிடம் இல்லாமல் போன ஒன்று தேசிய ஒருமை பாடே ஆகும் .
இன்றைய காலகட்டங்களில் இந்தியா உலகளவில் மகத்தான சக்தியாக உருவெடுக்க தேசிய ஒருமை பாடே முக்கிய காரணமாக கருத படுகிறது . உலக அளவில் ஒலிம்பிக் போட்டிகள் ,கிரிக்கெட் போட்டிகள் நடை பெறும்போது இந்திய மக்களின் ஒற்றுமையை நாம் கண்கூடாக காண முடிகிறது .
1 COMMENTS
Comments are closed.