Siru Semippu Katturai in Tamil – சிறுசேமிப்பு கட்டுரை :- இன்றைய காலகட்டத்தில் பணத்தின் அவசியம் குழந்தைகளுக்கு கூட தெரிந்திருக்கிறது. இன்னலின்று வாழ பணத்தை சேமிக்கும் பழக்கம் முக்கியமானதாகும்.ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சிறுசேமிப்பின் பயன்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள் அதிகம் பணம் சம்பாதிப்பதை விட கிடைத்த பணத்தை சேமிப்பதில் அக்கறை காட்டினாள் வாழ்வில் முன்னேறலாம்
தினசரி கிடைக்கும் பணமானது ஒருசில காரணங்களுக்காக தடைபெறலாம் அப்போது நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பணமே உங்களை காக்கும். சிறுசேமிப்பு என்பது சம்பாதித்த பணத்தை சேமிப்பது மட்டுமல்லாது, அன்றாட நம் கைகளில் புழங்கும் பணத்தின் ஒரு பகுதியை சேமிப்பதும் அடங்கும். உதாரணமாக கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிய பிறகு மீதமிருக்கும் சில்லரை காசுகளை உண்டியலில் சேர்ப்பது ஆகும். பெரியோர்களின் சொல்படி சிறுதுளி பெருவெள்ளம் என அந்த சில்லறை காசுகள் ஒரு பெரும் தொகையாக ஒருநாள் மாறும்.
குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை சொல்லித்தருவது பெற்றோர்களில் மிக முக்கிய கடமையாகும்.குழந்தைகளுக்கு கீழ்கண்ட முறைகளில் பணம் சேமிக்கலாம்
- அழகிய உண்டியலில் பணம் சேர்க்க குழந்தைகளை பழக்குதல்
- சிறு குழந்தைகளுக்கு தற்போது பெற்றோருடன் இணைந்த வஞ்சி கணக்குகள் தொடங்கலாம்
- குழந்தைகளுக்கு தபால்துறை நடத்தும் ஆர் டி முறையில் பணம் சேமித்தல்
- நீண்டகால கணக்குகளில் பணம் சேமித்தல்
- ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நடத்தும் குழந்தை எதிர்கால சேமிப்பு கணக்கு தொடங்கலாம்
- தங்கத்தில் முதலீடு செய்தல்
முந்தைய பள்ளி கல்வி முறையில் சேமிப்பின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க சஞ்சாயிகா போன்ற சிறு சேமிப்பு முறைகள் கையாளப்பட்டன. தற்போது குழந்தைகள் தங்கள் வங்கி கணக்கிற்கு சிறுசேமிப்பு பணத்தை பள்ளிகள் மூலமாக கூட செலுத்தலாம்.
இன்றைய காலகட்டத்தில் செயல்பட முடியாத பல நடைமுறை சிக்கல்கள் வருகின்றன, உதாரணமாக 2019 பெரும்தோற்று காரணமாக நீண்ட முடக்கத்தை நாடு சந்தித்தது,அப்போது சிறுசேமிப்பில் அக்கறை காட்டிய குடும்பங்கள்தான் எவ்வித இடர்பாடுமின்றி இருந்தன. தனிமனித சேமிக்கும் பழக்கம்தான் ஒரு அரசையே நல்வழி படுத்தும் அடுத்தகட்ட முயற்சிக்கு துணைநிற்கும்.