தொடர்ந்து ஏற்படும் சர்வர் பிரச்னை காரணமாக ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது
2022 தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்விற்கு இன்று (13.04.2022) கடைசி நாள் என்ற போதிலும் ,கடந்த மூன்று தினங்களாக விண்ணப்பங்கள் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது ,
ஆன்லைன் விண்ணப்பம் பாதி பூர்த்தி செய்து சிலரும் ,புதிய விண்ணப்பத்தை தொடங்க OTP கிடைக்காமல் சிலரும் ,விண்ணப்ப கட்டணம் செலுத்த முடியாத நிலையில் சிலரும் உள்ளனர்.
சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும்போது நீண்ட நேரம் ஒரே திரையை காட்டும் வலைத்தளம் கடைசியில் மேலே கண்ட பக்கத்தை காட்டுகிறது.
புகைப்படம் மற்றும் கையெழுத்து போன்றவற்றை பதிவேற்றம் செய்யும்போது மேல்கண்ட Error பகுதியை காட்டுகிறது.
தொடர் வேலை பளு மற்றும் பள்ளி வேளைகளில் மும்முரமாக இருந்த ஆசிரியர்கள் கடைசி நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் காரணமாக விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய இயலாமல் தவிக்கின்றனர்
இந்த வசதி குறைபாடு பற்றி TRBTET வலைத்தளத்தில் கொடுக்க பட்டுள்ள செல் நம்பர் மற்றும் ஈமெயில் முகவரிக்கு தொடர்ந்து தகவல் கொடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை
ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தை தொடர்பு கொள்வதை தவிர தற்சமயம் எந்த விளக்கமும் கிடைக்க பெறவில்லை , வேறு மாதிரியான குழப்பங்கள் குறைகள் ஏற்படின் இந்த பகுதியில் கமெண்ட் செய்யவும்