நீட் தேர்விற்கு 02.04.2022 முதல் விண்ணப்பிக்கலாம் 

 நீட் தேர்விற்கு 02.04.2022 முதல் விண்ணப்பிக்கலாம் 

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்விற்கு 02.04.2022 முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு, தேசிய தேர்வு முகமையால் இந்திய அளவில் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

2022-23 கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை நேற்று அறிவித்துள்ளது

அதன்படி ஏப். 2ம் தேதி (நாளை) முதல் நீட் தேர்வுகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கும் என்றும் மே 7ம் தேதியுடன் முன்பதிவு காலம் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஆன்லைன் விண்ணப்பங்களில் மாணவர்கள் திருத்தம் மேற்கொள்ள 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

மேலும் நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வானது தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் சுமார் 20 லட்சம் மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது