கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பட்லர் மற்றும் படிக்கல் சிறப்பான துவகத்தை தந்தனர்.

பட்லரின் அதிரடி சதத்தால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக விளையாடிய ஆரோன் ஃபின்ச் அரைசதம் கடந்து 28 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடிய ஆரோன் ஃபின்ச் அரைசதம் கடந்து 28 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனால் 9 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 107 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்திருந்தது.

12 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது

கடைசி 6 ஓவர்களில் கொல்கத்தா அணி வெற்றி பெற 66 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு புறம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி காட்டி வந்தார்.

கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்கள் எடுத்திருந்த போது சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதைத் தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 51 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சிவம் மாவி மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன்காரணமாக யுஸ்வேந்திர சாஹல் ஹாட்ரிக் எடுத்தார். அத்துடன் ஐபிஎல் போட்டிகளில் முதல் முறையாக ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.