ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(டெட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை ஏப்ரல் 26ஆம் தேதி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில் தற்போது பல்வேறு தரப்பினர் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர் .

ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சர்வர் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் விண்ணப்பங்களை பதிவு செய்தவர்களின் செல்போனுக்கு OTP அனுப்பப்படவில்லை.போன்ற காரணங்களினால் 

விண்ணப்பிக்க கடைசி நாளான ஏப்ரல் 13ம் தேதி முடிவடைந்த நிலையிலும் புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது 

கடைசி நேரம் வரை காத்திருந்து விண்ணப்பிக்க இயலாமல் போகும் நிலையை தவிர்க்க கூடிய விரைவில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் 

மீண்டும் அதே வலைத்தளம் மற்றும் சர்வர் பயன்படுத்த படுவதால் முன்னதாகவே விண்ணப்பிப்பது நல்லது 

மீண்டும் சர்வர் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்ற போதிலும் முன்னதாக விண்ணப்பித்து தங்களது வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும் 

ஏப்ரல் 26 வரை அவகாசம் இருந்த போதிலும் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கிடைத்துள்ள இரண்டாவது வாய்ப்பை நல்ல முறையில் உபயோகிக்கவும்