குழந்தை பாதுகாப்பு அலுவலர் தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடைபெறும் என ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.
இதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழிலும் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையில் 16 குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்ப ஜூன் 19-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கான முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு. ஒன்றாம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்
இந்நிலையில் குழந்தை பாதுகாப்பு அலுவலர் தேர்வு தமிழிலும் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.