12th Tamil Punarchi vithigal – புணர்ச்சி விதிகள் :- பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைகள் இங்கே கொடுக்க பட்டுள்ளன
புணர்ச்சி விதி
- செம்பரிதி = செம்மை + பரிதி
விதி : ஈறு போதல்
செம் + பரிதி – செம்பரிதி.
- வானமெல்லாம் = வானம் + எல்லாம்
விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே –
வான(ம்+எ)ல்லாம் = வானமெல்லாம்
- உன்னையல்லால் = உன்னை + அல்லால்
விதி: இஈஐ வழி யவ்வும்
உன்னை + ய் + அல்லால்
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – உன்னையல்லால்
- செந்தமிழே = செம்மை + தமிழே
விதி : ஈறு போதல்
செம் + தமிழே
விதி : முன்னின்ற மெய் திரிதல் – செந்தமிழே
புணர்ச்சி விதி
- ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்
விதி : உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் –
ஆங்க் + அவற்றுள்
விதி : உடல்மேல்உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
– ஆங்கவற்றுள்
- தனியாழி = தனி + ஆழி
விதி : இ ஈ ஐ வழி யவ்வும்
தனி + ய் + ஆழி
விதி : உடல் மேல் உயிர்வந்து ஒன்று வது இயல்பே
– தனியாழி
- வெங்கதிர் = வெம்மை + கதிர்
விதி : ஈறு போதல்
வெம் + கதிர்
விதி : முன்னின்ற மெய் திரிதல்
-வெங்கதிர்
புணர்ச்சி விதி
- இனநிரை = இனம் + நிரை
விதி: மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
-இனநிரை
- புதுப்பெயல் = புதுமை + பெயல்
விதி :ஈறுபோதல்
– புது + பெயல்
விதி: இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்
-புதுப்பெயல்
- அருங்கானம்= அருமை+கானம்;
விதி : ஈறு போதல்
–அரு+கானம்;
விதி:இனமிகல் – அருங்கானம்
- செல்லிடத்து – செல் + இடத்து
விதி 1 : தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்
– செல்(ல்+இ)டத்து
விதி2 : உடல் மேல் உயிர்வந்து ஒன்று வது இயல்பே
– செல்லிடத்து
- எத்திசை= எ + திசை
விதி : இயல்பினும் விதியினும் நின்ற
உயிர்முன் கசதப மிகும் –
-எத்திசை
புணர்ச்சி விதி
- உள்ளொன்று = உள் + ஒன்று
விதி : ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’
– உள்(ள் + ஒ)ன்று
விதி : ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’
– உள்ளொன்று
- ஒருமையுடன் = ஒருமை + உடன்
விதி:’இஈஐவழி யவ்வும்’
– ஒருமை + ய் + உடன்
விதி: ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது
இயல்பே
– ஒருமையுடன்
- பூம்பாவாய் = பூ+பாவாய்
விதி: பூப்பெயர் முன் இன மென்மையும் தோன்றும்.