Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th MATERIALS

12th Tamil Punarchi vithigal – புணர்ச்சி விதிகள்

12th Tamil Punarchi vithigal – புணர்ச்சி விதிகள் :- பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைகள் இங்கே கொடுக்க பட்டுள்ளன

12th Tamil Punarchi vithigal - புணர்ச்சி விதிகள்

புணர்ச்சி விதி

  • செம்பரிதி = செம்மை + பரிதி

விதி : ஈறு போதல்

செம் + பரிதி – செம்பரிதி.

  • வானமெல்லாம் = வானம் + எல்லாம்

விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – 

வான(ம்+எ)ல்லாம் = வானமெல்லாம்

  • உன்னையல்லால் = உன்னை + அல்லால்

விதி: இஈஐ வழி யவ்வும் 

உன்னை + ய் + அல்லால்

விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – உன்னையல்லால்

  • செந்தமிழே = செம்மை + தமிழே

விதி : ஈறு போதல் 

செம் + தமிழே 

விதி : முன்னின்ற மெய் திரிதல் – செந்தமிழே

புணர்ச்சி விதி

  • ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள் 

விதி : உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் – 

ஆங்க் + அவற்றுள்

விதி : உடல்மேல்உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

 – ஆங்கவற்றுள்

  • தனியாழி = தனி + ஆழி 

விதி : இ ஈ ஐ வழி யவ்வும்

 தனி + ய் + ஆழி

 விதி : உடல் மேல் உயிர்வந்து ஒன்று வது இயல்பே 

– தனியாழி

  • வெங்கதிர் = வெம்மை + கதிர்

விதி : ஈறு போதல் 

வெம் + கதிர் 

விதி : முன்னின்ற மெய் திரிதல் 

-வெங்கதிர்

புணர்ச்சி விதி

  • இனநிரை = இனம் + நிரை

விதி: மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்

-இனநிரை

  • புதுப்பெயல் = புதுமை + பெயல்

விதி :ஈறுபோதல் 

– புது + பெயல்

விதி: இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் 

-புதுப்பெயல்

  •  அருங்கானம்= அருமை+கானம்;

விதி : ஈறு போதல்

–அரு+கானம்;

விதி:இனமிகல் – அருங்கானம்

  • செல்லிடத்து – செல் + இடத்து

விதி 1 : தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்

– செல்(ல்+இ)டத்து

விதி2 : உடல் மேல் உயிர்வந்து ஒன்று வது இயல்பே 

– செல்லிடத்து

  • எத்திசை= எ + திசை

விதி : இயல்பினும் விதியினும் நின்ற 

உயிர்முன் கசதப மிகும் – 

-எத்திசை

புணர்ச்சி விதி

  • உள்ளொன்று = உள் + ஒன்று

விதி : ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ 

– உள்(ள் + ஒ)ன்று

விதி : ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’

 – உள்ளொன்று

  • ஒருமையுடன் = ஒருமை + உடன்

விதி:’இஈஐவழி யவ்வும்’

– ஒருமை + ய் + உடன்

 விதி: ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது

இயல்பே 

– ஒருமையுடன்

  • பூம்பாவாய் = பூ+பாவாய்

விதி: பூப்பெயர் முன் இன மென்மையும் தோன்றும்.