Tamil Katturai about Forest in Tamil language காடு : காடு என்பது ஒரு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பாகும், இது பன்முகத்தன்மை மற்றும் பன்முக மரங்கள் (முக்கியமாக மரச்செடிகள்) ஆதிக்கம் செலுத்தும் சமூகமாக உள்ளது.
காடு ஒரு பரந்த நிலப்பரப்பை உள்ளடக்கியது. காடு மிகப்பெரிய, சிக்கலான மற்றும் மிக முக்கியமான மனிதனுக்கு தேவையான வளங்களை உருவாக்குகிறது.
காடு மனிதனுக்கு எரிபொருள், மரம், காகித கூழ், செயற்கை இழைக்கான மூலப்பொருள் போன்றவற்றை வழங்குகிறது. இது பூமியின் வெப்பநிலையை சீராக வைத்து கொள்ளவும் , நீர்நிலை சுழற்சி, வெள்ளம் மற்றும் மண் அரிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியும் மற்றும் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆக்ஸிஜனின் சமநிலையை உதவுகியும் மனிதனின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது .
இயற்கை காடுகள் மண்ணுக்கு ஊட்டச்சத்துக்களை கெடுக்காமல் மண்ணின் வளத்தை பராமரிக்கின்றன. காடு பல்வேறு வகையான வனவிலங்குகளுக்குக்கும் பறவைகளுக்கும் பொருத்தமான வாழ்விடமாக இருக்கின்றன. காடுகளின் வேறு சில நன்மைகள்
காடுகளினால் ஏற்படும் நன்மைகள்
- அறிவியல் வளர்ச்சியால் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைக்கிறது
- மிக உயர்ந்த மரங்கள் தங்கள் வேர்களின் மூலம் மண் அரிப்பை தடுக்கிறது
- புவியின் வெப்பமயமாதல் பிரச்சனைக்கு காடுகளே தீர்வாக உள்ளன
- கட்டிட வேலைகளுக்கு மரங்களை தருகிறது
- விவசாத்தினால் பெறமுடியாத அறிய பழங்களை காடுகளே தருகின்றன
- காற்றில் ஆக்ஸிஜன் அளவை கட்டுக்குள் வைக்கிறது
- வன விலங்குகளுக்கு பாதுகாப்பான வாழ்விடமாக உள்ளன
- மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகளை தருகின்றன
காடு பாதுகாக்க மனிதனின் கடமைகள்
- அரசு அறிவித்துள்ள சட்ட திட்டங்களை மதித்தல்
- பிளாஸ்டிக் கழிவுகளை காடுகளில் கொட்டுவதை தவிர்த்தல்
- அனுமதி இன்றி மரங்களை வெட்டுவதை தவிர்த்தல்
- கண்ணாடி பாட்டில் உடைத்து எரிவதை நிறுத்துதல்
- காட்டுப்பகுதியில் தீ பற்றவைத்தலை தவிர்த்தல் அல்லது பூரணமாக அணைத்தல்