உழைப்பே உயர்வு கட்டுரை – Hard Work Essay in Tamil :- கடின உழைப்பே உயவுக்கு சிறந்த வழியாகும் .உழைப்பில்லாமல் வெற்றி என்பது வெறும் கனவாகும்.நல்ல சந்தர்பத்திற்க்காக காத்திருக்கும் ஒருவனால் எப்போதும் வெற்றி பெற இயலாது .உழைப்பில்லாமல் எந்த ஒரு நல்ல நிகழ்வுகளும் ஒருவரது வாழ்வில் நடைபெறாது.
தாமஸ் ஆல்வா எடிசன் 21 மணிநேரம் உழைக்கும் வல்லமை உடையவர் , தனுக்கு கிடைக்கும் இரண்டு மூன்று மணி துளிகளையும் தனது ஆய்வகத்திலேயே உறங்கினர்.இந்த உழைப்பினாலேயே ஒரு சிறந்த அறிவியலாளராக இந்த உலகிற்கு புதிய கண்டுபிடுப்புகளை கொடுக்க முடிந்தது .
நமது தேச தலைவர்களான காந்தி மற்றும் நேரு போன்றோர் 17 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைக்கும் பழக்கம் உடையவர்கள் .இந்திய சுதந்திரத்திற்கு இந்த உழைப்பே உறுதுணையாக இருந்தது.
எப்போதும் வேலைசெய்ய தயாராகு இருக்கும் மனநிலையில் உள்ள ஒரு மனிதனை வெற்றி தேடி வருகிறது .வேலை என்பதை ஒரு பளுவாக என்னமாய் அதை ஒரு மகிழ்ச்சியான செயலாக மேற்கொள்ளும் மனோபாவத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.
நாளை என்பது இன்றே வேலைகளை செய்பவருக்கு மகிழ்ச்சியான நாளாகும் .ஒரு மனிதன் தனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வேலையாக இல்லாத பொது அதை செய்து முடித்து விட்டால்,தனக்கு பிடித்த வேலைகள் செய்ய நல்ல மனநிலை ஏற்படுகிறது . கடின உழைப்பை தொடுவதற்கு இந்த வழிமுறையே வாய்ப்பாகும்