பொருத்தக.
அ) குரங்குகள் – 1. கன்றுகளைத் தவிர்த்தன
ஆ) பசுக்கள் – 2. மரங்களிலிருந்து வீழ்ந்தன
இ) பறவைகள் – 3. குளிரால் நடுங்கின
ஈ) விலங்குகள் – 4. மேய்ச்சலை மறந்தன
அ) 1, 3, 4, 2
ஆ ) 3, 1, 2, 4
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 1, 3, 4
Answer:
ஆ ) 3, 1, 2, 4
‘பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென’ – தடித்த சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ) வினைத் தொகை
ஆ) உரிச்சொல் தொடர்
இ) இடைச்சொல் தொடர்
ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
Answer:
ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
‘ஆர்கலி’ என்ற சொல்லின் பொருள்
அ) சூரியன்
ஆ) வெள்ளம்
இ) கடல்
ஈ) நிலா
Answer:
ஆ) வெள்ளம்
‘கலங்கி’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
அ) கல+ங்+க்+இ
ஆ) கலங்கி +இ
இ) கலங்கு+க்+இ
ஈ) கலங்கு+இ
Answer:
ஈ) கலங்கு+இ
போர்மேற்சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படை வீடு
அ) கடவை
ஆ) சிவிரம்
இ) கூதிர்ப்பாசறை
ஈ) வீடாரம்
Answer:
இ) கூதிர்ப்பாசறை
ஆயர்கள் சூடியிருந்த மாலை
அ) குறிஞ்சி மாலை
ஆ) மல்லிகை மாலை
இ) வாகை மாலை
ஈ) காந்தள் மாலை
Answer:
ஈ) காந்தள் மாலை
‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி அமைந்த சொல்
அ) கொடுங்கோல்
ஆ) புதுப்பெயல்
இ) வலனேற்பு
ஈ) கண்ணுடைய
Answer:
இ) வலனேற்பு
‘மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்’ என்னும் விதிப்படி அமைந்த சொல்
அ) இனநிரை
ஆ) ஏறுடை
இ) புதுப்பெயல்
ஈ) கொடுங்கோல்
Answer:
அ) இனநிரை
‘வளைஇ’ – என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ) மரூஉ
ஆ) சொல்லிசை அளபெடை
இ) இசைநிறையளபெடை
ஈ) இன்னிசையளபெடை
Answer:
ஆ) சொல்லிசை அளபெடை
வெற்றி பெற்ற அரசனும் வீரரும் சூடும் பூ
அ) காஞ்சி
ஆ) தும்பை
இ) வாகை
ஈ) வஞ்சி
Answer:
இ) வாகை
கூற்று 1 : தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
கூற்று 2 : கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர்.
அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று இரண்டும் சரி
ஈ) கூற்று 1 சரி 2 தவறு
Answer:
இ) கூற்று இரண்டும் சரி
கூற்று : வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு, ஆகிய நிரைகளை மேடான நிலங்களில் மேயவிட்டனர்.
விளக்கம் : உலகம் குளிருமாறு புதிய மழை பொழிந்ததால் தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தால் மேடான நிலம் சென்றனர்.
அ) கூற்று சரி விளக்கம் தவறு
ஆ) கூற்று தவறு விளக்கம் தவறு
இ) கூற்றும் விளக்கமும் சரி
ஈ) கூற்று தவறு விளக்கம் சரி
Answer:
இ) கூற்றும் விளக்கமும் சரி
சரியானதைத் தேர்க.
அ) வாகை – துறை
ஆ) கூதிர்ப்பாசறை – திணை
இ) கொடுங்கோல் – வளைந்த கோல்
ஈ) கண்ணி – கன்னம்
Answer:
இ) கொடுங்கோல் – வளைந்த கோல்
பொருந்தாததைத் தேர்க.
அ) புதுப்பெயல் – புதிய வயல்
ஆ) புலம்பு – தனிமை
இ) மா – விலங்கு
ஈ) கவுள் கன்னம்
Answer:
அ) புதுப்பெயல் – புதிய வயல்
பொருந்தாததைக் தேர்க.
அ) புதுப்பெயல் – ஈறுபோதல், இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.
ஆ) கொடுங்கோல் – ஈறுபோதல், இனமிகல்
இ) வலனேற்பு – உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
ஈ) இனநிரை – மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
Answer:
இ) வலனேற்பு – உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
பொருத்துக.
அ) ஆர்கலி – 1. பெண் குரங்கு
ஆ) கவுள் – 2. தலையில் சூடும் மாலை
இ) மந்தி – 3. கன்ன ம்
ஈ) கண்ணி – 4. வெள்ளம்
அ) 3, 4, 1, 2
ஆ) 2, 1, 4,3
இ) 4, 3, 1, 2
ஈ) 4, 1, 3, 2
Answer:
இ) 4, 3, 1, 2
நெடுநல்வாடையை இயற்றியவர்
அ) கபிலர்
ஆ) பரணர்
இ) நக்கீரர்
ஈ) மோசிகீரனார்
Answer:
இ) நக்கீரர்
நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவன்
அ) சோழன் கரிகாலன்
ஆ) சேரன் செங்குட்டுவன்
இ) பாண்டியன் நெடுஞ்செழியன்
ஈ) பறம்புமலை பாரி
Answer:
இ) பாண்டியன் நெடுஞ்செழியன்
நக்கீரரின் தந்தை
அ) மதுரைக் கணக்காயனார்
ஆ) மாங்குடி மருதனார்
இ) வெள்ளைக்குடி நாகனார்
ஈ) இவர்களில் எவழருமிலர்
Answer:
அ) மதுரைக் கணக்காயனார்
நெடுநல்வாடை …………. நூல்ளுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) நீதி
Answer:
ஆ) பத்துப்பாட்டு
நெடுநல்வாடை ……………. அடிகளைக் கொண்டது.
அ) 144
ஆ) 150
இ) 188
ஈ) 196
Answer:
இ) 188
நெடுநல்வாடை அமைந்துள்ள பா
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) விருத்தப்பா
Answer:
ஆ) ஆசிரியப்பா
கலங்கி – இச்சொல்லைப் பிரிக்கும் முறை
அ) கல + ங் + க் + இ
ஆ) கலங்கு + இ
இ) கலங்கு + க் + இ
ஈ) கல + க் + க் + இ
Answer:
ஆ) கலங்கு + இ
புதுப்பெயர் – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதிகளைக் கண்டறிக.
i) ஈறுபோதல்
ii) முன்நின்ற மெய் திரிதல்
iii) இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.
அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) மூன்றும் சரி
ஈ) i, iii சரி
Answer:
ஈ) i, iii சரி
கூதிர்ப்பருவத்திற்குரிய மாதங்கள்
அ) தை, மாசி
ஆ) பங்குனி, சித்திரை
இ) ஐப்பசி, கார்த்திகை
ஈ) மார்கழி, தை
Answer:
இ) ஐப்பசி, கார்த்திகை
கண்ணி என்பது
அ) கழுத்தில் அணியும் மாலை
ஆ) தலையில் சூடும் மாலை
இ) கையில் அணியும் அணிகலன்
ஈ) காலில் அணியும் தழல்
Answer:
ஆ) தலையில் சூடும் மாலை
கூதிர்ப் பாசறை என்பது
அ) போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு
ஆ) போர்மேற் சென்ற அரசன் தோற்றுப் பதுங்கும் படைவீடு
இ) தலைவனும் தலைவியும் குளிர்காலத்தில் தங்கும் வீடு
ஈ) போரில் காயம் அடைந்த மன்னன் சிகிச்சை பெறுமிடம்
Answer:
அ) போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு
ஆயர் ………… மாலையைத் தலையில் சூடியிருந்தனர்.
அ) அத்தி
ஆ) முல்லை
இ) காந்தள்
ஈ) குறிஞ்சி
Answer:
இ) காந்தள்
முல்லை நிலத்தில் குளிரால் நடுங்கியவை
அ) பறவைகள்
ஆ) குரங்குகள்
இ) பசுக்கள்
ஈ) எருதுகள்
Answer:
ஆ) குரங்குகள்
‘மா’ என்பதன் பொருள்
அ) பறவை
ஆ) விலங்கு
இ) வானம்
ஈ) பூமி
Answer:
ஆ) விலங்கு
கன்றுகோள் ஒழியக் கடிய வீசி
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயம்
அ) எதுகை
ஆ) இயைபு
இ) முரண்
ஈ) அந்தாதி
Answer:
அ) எதுகை