பிழையான தொடரைக் கண்டறிக.
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ) மலை மீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
Answer:
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
பேச்சுத் தமிழில் அமைந்த தொடரை தேர்க!
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன
Answer:
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
வேற்றுமைப் புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் எவ்வாறு திரியும்
அ) இயல்பாகப் புணரும்
ஆ) லகரம் டகரமாகும்
இ) லகரம் னகரமாகும்
ஈ) லகரம் றகரமாகும்
Answer:
ஈ) லகரம் றகரமாகும்
வேற்றுமைப் புணர்ச்சியில் ளகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் எவ்வாறு திரியும்
அ) ளகரம் லகரமாகும்
ஆ) ளகரம் னகரமாகும்
இ) ளகரம் டகரமாகும்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஈ) இவற்றில் எதுவுமில்லை
எழுதும்போது வரும் பிழைகளை ……………….. வகையாகக் கொள்ளலாம்.
அ) 3
ஆ) 4
இ) 5
ஈ) 6
Answer:
ஆ) 4
உயிரெழுத்துகள்
அ) 10
ஆ) 12
இ) 30
ஈ) 18
Answer:
ஆ) 12
உயிரெழுத்துகளின் வகை
அ) 2
ஆ) 4
இ) 12
ஈ) 18
Answer:
அ) 2
மெய்எழுத்துகள்
அ) 3
ஆ) 18
இ) 12
ஈ) 30
Answer:
ஆ) 18
மெய்எழுத்துகளின் வகை
அ) 3
ஆ) 12
இ) 18
ஈ) 30
Answer:
அ) 3
உயிர் மெய்யெழுதுக்கள்
அ) 18
ஆ) 126
இ) 216
ஈ) 247
Answer:
இ) 216
உயிர் மெய்க்குறில்
அ) 90
ஆ) 126
இ) 247
ஈ) 216
Answer:
அ) 90
உயிர் மெய் நெடில்
அ) 90
ஆ) 126
இ) 247
ஈ) 216
Answer:
ஆ) 126
தமிழ் எழுத்துகள் மொத்தம்
அ) 90
ஆ) 246
இ) 216
ஈ) 247
Answer:
ஈ) 247
ந, ண, ன, ற, ர, ல,ள,ழ – இவ்வெட்டு எழுத்துகளில் சொல்லின் தொடக்கமாக வரும் எழுத்து
அ) ர
ஆ) ல
இ) ந
ஈ) ற
Answer:
இ) ந
சொல்லின் இறுதியில் வராத எழுத்தைக் கண்டறிக.
அ) ர
ஆ) ல
இ) ந
ஈ) ற
Answer:
இ) ந
……….. சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துகள் வருவதில்லை.
அ) வடமொழியில்
ஆ) தமிழில்
இ) ஆங்கிலத்தில்
ஈ) இந்தியில்
Answer:
ஆ) தமிழில்
க்ரீடம், ப்ரியா – என்பவை …………. மொழிச் சொற்கள்.
அ) வட
ஆ) அரபு
இ) தமிழில்
ஈ) தெலுங்கு
Answer:
அ) வட
தமிழ்ச் சொல் ………… மெய்யோடு முடியாது.
அ) வல்லின
ஆ) மெல்லின
இ) இடையின
ஈ) உயிர்
Answer:
அ) வல்லின
ட், ற் என்னும் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும் ………….. என்னும் வரிசையே வரும்.
அ) க, ச, ப
ஆ) ன, ண, ந
இ) ர, ற
ஈ) ப. ம.ய
Answer:
அ) க, ச, ப
சரியான கூற்றினைக் கண்டறிக.
i) வல்லின மெய்கள் ஈறொற்றாய் வாரா
ii) ட், ற் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை
iii) க், ச், த்,ப, ஆகியவற்றின்பின் அவற்றின் அவ்வெழுத்து வரிசைகளே வரும்
அ) i, ii – சரி
ஆ) ii, iii – சரி
இ) i, iii – சரி
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி
சொல்லின் முதலில் வராத எழுத்துகள்
அ) ட, ற
ஆ) த, ந
இ) ப, ம
ஈ) க, ச
Answer:
அ) ட, ற
ஆய்த எழுத்து சொல்லின் ……………. வரும்.
அ) முதலில்
ஆ) இடையில்
இ) கடைசியில்
ஈ) ஈற்றில்
Answer:
இ) கடைசியில்
மெல்லின எழுத்துகளில் சொல்லின் தொடக்கமாக வராதவை
அ) ங, ஞ
ஆ) ங, ம
இ) ண, ன
ஈ) ந, ம
Answer:
ஈ) ந, ம
………. என்னும் எழுத்துகளுக்குப் பின் வியங்கோள் வினைமுற்று/கள் விகுதி/வல்லினத்தில் தொடங்கும் சொற்கள் வரும்போது இயல்பாய் நிற்கும்.
அ) ய், ர், ல், ழ், ள்
ஆ) ற், ட்
இ) ங. ஞ, ண, ர. ம
ஈ) க், ச்ட், த், ப்
Answer:
அ) ய், ர், ல், ழ், ள்
………….. ஒற்றுகள் மட்டுமே ஈரொற்றாய் வரும்.
i) ய
ii) ர
iii) ழ
அ) மூன்றும் சரி
ஆ) மூன்றும் தவறு
இ) i, iii – சரி
ஈ) i, ii – சரி
Answer:
அ) மூன்றும் சரி
தனிக்குறிலை அடுத்து ……………. ஒற்றுகள் வாரா.
அ) க, ச
ஆ) ர, ழ
இ) த, ப
ஈ) க, ப
Answer:
ஆ) ர, ழ
லகரத்தைத் தொடர்ந்து மெல்லினம்வரின் லகரம் ……… திரிவதுண்டு.
அ) னகரமாய்த்
ஆ) ணகரமாய்த்
இ) டகரமாய்த்
ஈ) மகரமாய்த்
Answer:
அ) னகரமாய்த்
ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம்வரின் ளகரம் ………… திரிவதுண்டு.
அ) னகரமாய்த்
ஆ) ணகரமாய்த்
இ) டகரமாய்த்
ஈ) றகரமாய்த்
Answer:
இ) டகரமாய்த்
ளகரத்தைத் தொடர்ந்து மெல்லினம்வரின் ளகரம் ………. திரிவதுண்டு.
அ) னகரமாய்த்
ஆ) ணகரமாய்த்
இ) டகரமாய்த்
ஈ) றகரமாய்த்
Answer:
ஆ) ணகரமாய்த்
சரியானவற்றைக் கண்டறிக.
i) இயக்குநர்
ii) இயக்குனர்
iii) உறுப்பினர்i
v) வீட்டினர்
அ) – சரி
ஆ) ii, iii – சரி
இ) iv – சரி
ஈ) ii – மட்டும் தவறு
Answer:
ஈ) ii – மட்டும் தவறு