சுப்பிரமணிய சிவா வாழ்கை வரலாறு கட்டுரை Subramaniya Siva
Subramaniya Siva – சுப்பிரமணிய சிவா
சுப்ரமணிய சிவா இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழக மக்களுக்கு தனக்கு மேடை பேச்சு மற்றும் பத்திரிக்கை மூலமாக விடுதலை வேட்கையை தூண்டியவர்களில் மிக முக்கியமானவர் ஆவர்
பிறப்பு
தேதி | 4 அக்டோபர் 1884 |
இடம் | திண்டுக்கல் மாவட்டம் , வத்தல குண்டு |
தந்தை | ராஜம் ஐயர் தாயார்: நாகம்மாள் |
கல்வி
- 1893 திண்ணைப்பள்ளியில் சேர்ந்து படித்தார்.
- 9 வது வயதில் காட்டுச்செட்டி மண்டபத்தில் ஆரம்ப கல்வி கற்றார்
- மகாகவி சுப்ரமணிய பாரதியார் பணியாற்றிய சேதுபதி உயிர் நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார்.
- வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உணவருந்திக்கொண்டே மேற்படிப்பு படித்தார்.
- இவர் கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் ஒரு ஆண்டு படித்தார்.
- மெட்ரிகுலேஷன் தேர்வில் தோற்றார்.
சுந்தந்திர போராட்டம்
1906-07 திருவனந்தபுரத்தில் ‘தர்ம பரிபாலன சமாஜம் அமைப்பை உருவாக்கி இளைஞர்களை கூட்டுவித்துச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி தேசபக்தி ஊட்டும் பணியில் ஈடுபட்டார்.
அரசாட்சிக்கு எதிராக இவரின் செயல்பாடுகள் அமைந்ததால் இவர் திருவனந்தபுரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
வா வு சி யுடன் நட்பு
இதன்பிறகு சிவா கால் நடையாகவே ஊர் ஊராய்ச் சென்று தேசிய பிரச்சாரம் செய்ய முற்பட்டார்.
தூத்துக்குடிக்கு வந்தபொழுது தூத்துக்குடியில் வழக்குரைஞராக இருந்த ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். இக்காலத்தில் சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் உளமார்ந்த நட்பு ஏற்பட்டது.
சிறை வாசம்
- இவர்களின் சுதேச உணர்வைத் தன் ‘சுதேச கீதங்களால்’ இவர்களின் நண்பரான பாரதியார் தூண்டிவிட்டார்.
- 1908இல் சிதம்பரனாரும், சிவாவும் இணைந்து நெல்லை சீமையில் சுற்றுப்பயணம் செய்து தேசிய பரப்புரை செய்தனர்.
- மார்ச்சு 12, 1908இல் சிவா ராஜத்துரோகக் குற்றம் புரிந்தார் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டார். பின்னர் நவம்பர் 2, 1912இல் விடுதலைச் செய்யப்பட்டார்.
- இவர்களின் சுதேச உணர்வைத் தன் ‘சுதேச கீதங்களால்’ இவர்களின் நண்பரான பாரதியார் தூண்டிவிட்டார்.
- 1908இல் சிதம்பரனாரும், சிவாவும் இணைந்து நெல்லை சீமையில் சுற்றுப்பயணம் செய்து தேசிய பரப்புரை செய்தனர்.
- மார்ச்சு 12, 1908இல் சிவா ராஜத்துரோகக் குற்றம் புரிந்தார் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டார். பின்னர் நவம்பர் 2, 1912இல் விடுதலைச் செய்யப்பட்டார்
பத்திரிக்கை தொழில்
- எழுத்துத் தொழிலை கைக்கொள்ள கருதி,ஞானபாநு என்ற மாத இதழைத் துவக்கினார்.
- 1916இல் ‘பிரபஞ்ச மித்திரன்’ என்ற வார இதழை அரம்பித்து சிலகாலம் நடத்தினார். இதில் ‘நாரதர்’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதிவந்தார்.
- எழுத்துலகில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சுமார் இருபது நூல்களுக்கு மேலாக எழுதினார்
படைப்புகள்
- மோட்ச சாதனை ரகசியம்
- ஸ்ரீ ஸ்வாமி விவேகானந்தர் ஆத்மஞான ரகசியம்
- அருள் மொழிகள்
- வேதாந்த ரகஸ்யம்
- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம்
- ஞானாம்ருதமென்னும் பிரஹ்மானந்த
- சம்பாஷணை
- சச்சிதானந்த சிவம்
- பகவத்கீதா சங்கிலகம்
- சங்கர விஜயம்
- ராமானுஜ விஜயம்
- சிவாஜி (நாடகம்)
தேசிங்குராஜன் (நாடகம்) - நளின சுந்தரி (அ) நாகரிகத்தின் தடபுடல் (கதை)
கடைசி காலம்
- 1920 இல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குப் பிரதிநிதியாகச் சென்றார்.
- நவம்பர் 17, 1921இல் இரண்டாவது முறையாக, ராஜத்துரோகக் குற்றத்துக்காகச் சிவாவின் மீது அரசு வழக்குத் தொடுத்தது, இரண்டரை ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது
- 1923 ஆம் ஆண்டு துவக்கத்தில் தருமபுரி, கோவை, பாப்பாரப்பட்டி முதலான ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
- பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயிலுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அவ்வூரில் நிலம் பெற்று அதற்கு பாரதபுரம் என்று பெயர் சூட்டினார்.
பாரத மாதா கோவில்
கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவைச் சித்தரஞ்சன்தாசை கொண்டு செய்வித்தார். 1924இல் காசியில் வசித்து வந்த இவரது தாயார் காலமானார். இவருக்கு வந்திருந்த தொழுநோயைக் காரணம் காட்டி ரயில் பயணம் செய்ய ஆங்கில அரசு தடைவிதித்தது.
மறைவு
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சுதந்திரம் பெறாமலேயே உயிர் நீத்த சுதந்திர போராட்ட தியாகிகள் ஏராளம் ,அவர்களுள் முக்கியமானவர் சுப்ரமணிய சிவா ஆவர் .12 ஜூலை 1925 இல் மரணமடைந்தார் சுப்ரமணிய சிவா
1 COMMENTS
Comments are closed.