Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 3.5 பொருள் மயக்கம்

பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க.

அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்
ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்
இ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்
ஈ) வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்
Answer:
இ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்

வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக.

அ) பாலை பாடினான் – 1. தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்
ஆ) பாலைப் பாடினான் – 2. தேரினைப் பார்த்தான்
இ) தேரை பார்த்தான் – 3. பாலினைப் பாடினான்
ஈ) தேரைப் பார்த்தான் – 4. பாலைத் திணை பாடினான்

அ) 4, 1, 3, 2
ஆ) 2, 3, 1, 4
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 4, 1, 3
Answer:
இ) தேரை பார்த்தான் – 3. பாலினைப் பாடினான்

சரியானதைத் தேர்க.

அ) உடம்படுமெய் – பேசியபடி
ஆ) பண்புத்தொகை – கத்துகடல்
இ) சொற்புணர்ச்சி – சுடர் ஆழி
ஈ) மேடுபள்ளம் – எதிரிணைச் சொல்
Answer:
ஈ) மேடுபள்ளம் – எதிரிணைச் சொல்

சரியானதைத் தேர்க.

அ) துணைவினையுடன் கூடிய சொற்களைப் பிரித்து எழுத வேண்டும்.
ஆ) இடைச் சொற்களைப் பிரித்து எழுத வேண்டும்.
இ) பெயர்ச்சொல்லில் இடைச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.
ஈ) வினைத்தொகையாக வரும் சொற்கள் ஒரு சொல் அல்ல.
Answer:
இ) பெயர்ச்சொல்லில் இடைச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.

சரியானதைத் தேர்க.

அ) காட்டில் இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் புறப்பட்டான்.
ஆ) இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் பணிவிடை செய்யப் புறப்பட்டான்.
இ) பணிவிடை செய்ய இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.
ஈ) இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.
Answer:
ஈ) இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.

தமிழில் படர்க்கைப் பலர்பால் சொல்லாகிய தாங்கள் என்பது தற்போது ………….. இடத்திலும் வரும்.

அ) படர்க்கை
ஆ) தன்மை
இ) இவற்றில் எதுவுமில்லை
ஈ) முன்னிலை
Answer:
ஈ) முன்னிலை

பொருந்தாததைத் தேர்க.

அ) பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருளைத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களைச் சேர்த்து எழுதக்கூடாது.
ஆ) எதிரிணைச் சொற்களைச் சேர்த்தே எழுத வேண்டும்.
இ) விடைச்சொல்லுடன் கூடிய சொற்களைச் சேர்த்தே எழுத வேண்டும்.
ஈ) பண்புத்தொகையாக வரும் சொற்கள் ஒரு சொல் என்னும் தன்மை கொண்டவை. எனவே அவற்றைப் பிரித்து எழுதக் கூடாது.
Answer:
அ) பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருளைத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களைச் சேர்த்து எழுதக்கூடாது.

பொருந்தாததைத் தேர்க.

அ) குதிரையும் யானையும் வேகமாக ஓடின.
ஆ) அவன் வெண்மதியிடம் பேசினான்.
இ) பறவைகள் நெல்மணிகளை வேகமாகக் கொத்தித் தின்றது.
ஈ) கோவலன் மதுரைக்குச் சென்றான்.
Answer:
இ) பறவைகள் நெல்மணிகளை வேகமாகக் கொத்தித் தின்றது.

பொருத்துக.

அ) அவன் – 1. அன்று
ஆ) அவர் – 2. அல்ல
இ) நாய் – 3. அல்ல ர்
ஈ) குதிரைகள் – 4. அல்லன்

அ) 4, 3, 1, 2
ஆ) 4, 1, 3, 2
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 1, 2

பொருத்துக.

அ) உற்றாருறவினர் – 1. நேரிணைச் சொற்கள்
ஆ) சீரும்சிறப்பும் – 2. உம்மைத் தொகை
இ) மேடுபள்ளம் – 3. வினைத் தொகை
ஈ) கத்துகடல் – 4. எதிரிணைச் சொற்கள்

அ) 2, 1, 3, 4
ஆ) 2, 1, 4, 3
இ) 2, 4, 1, 3
ஈ) 3, 4, 1, 2
Answer:
ஆ) 2, 1, 4, 3

சரியான தொடரைக் கண்டுபிடி.

அ) ஆண்டுதோறும் மறைந்த தி. ஜானகிராமன் நினைவாகக் கூட்டம் நடைபெறும்.
ஆ) மறைந்த தி. ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்.
இ) தி. ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் மறைந்த கூட்டம் நடைபெறும்.
ஈ) மறைந்த நினைவாக தி. ஜானகிராமன் ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்
Answer:
ஆ) மறைந்த தி. ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்.

சரியான கருத்துகளைக் கண்டறிக.

i) பண்புத்தொகை, வினைத்தொகையாக வரும் சொற்கள் ஒருசொல் என்னும் தன்மை கொண்டவை.
ii) எனவே அவற்றைப் பிரித்து எழுதக் கூடாது.
iii) செங்கடல் என்று பிரிக்காமல் எழுதுவதே சரியானது.

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருைைளத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களை …………. எழுத வேண்டும்.

அ) சேர்த்து
ஆ) பிரித்து
இ) இடைவெளியுடன்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) சேர்த்து

சரியான கூற்றுகளைக் கண்டறிக.

i) இடைச்சொல்லுடன் கூடிய சொற்களைச் சேர்த்தே எழுத வேண்டும்.
ii) உடம்படுமெய்கள் அமைந்த சொற்களில் உடம்படுமெய்களைச் சேர்த்துத்தான் எழுதல் வேண்டும்.
iii) பன்மையை உணர்த்தும் ‘கள்’ விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல் எழுத வேண்டும்.
iv) இரட்டைக் கிளவிச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.
அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) iii மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

அது என்னும் வேற்றுமை உருபு ……………….. உரியது.

அ) அஃறிணைக்கு
ஆ) உயர்திணைக்கு
இ) ஐந்திணைக்கு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) அஃறிணைக்கு