TN 12th Tamil Guide Chapter 3.6 Thirukkural
கடலினும் பெரியது
அ) உற்ற காலத்தில் செய்த உதவி
ஆ) பயன் ஆராயாமல் ஒருவன் செய்த உதவி
இ) திணையளவு செய்த உதவி
Answer:
ஆ) பயன் ஆராயாமல் ஒருவன் செய்த உதவி
பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
நல்லார் நயவர் இருப்ப நயம் இலாக்
கல்லார்க் கொன்றாகிய காரணம் – தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்
அ) இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.
ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு
இ) ஊழில் பெருவலி யாஉள மற்று ஒன்று
சூழினும் தான்முந்து உறும்.
Answer:
ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு
வையகமும் வானகமும் ஆற்றலரிது – எதற்கு?
அ) செய்யாமல் செய்த உதவி
ஆ) பயன் தூக்கார் செய்த உதவி
இ) தினைத்துணை நன்றி
ஈ) செய்ந்நன்றி
Answer:
அ) செய்யாமல் செய்த உதவி
பொருத்திக் காட்டுக.
அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – 1. சேர்ந்தாரைக் கொல்லி
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி – 2. ஞாலத்தின் மாணப் பெரிது
இ) சினம் – 3. தெய்வத்துள் வைக்கப்படும்
ஈ) காலத்தினாற் செய்த நன்றி – 4. நன்மை கடலின் பெரிது
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 1, 2, 3, 4
ஈ) 2, 3, 4, 1
Answer:
ஆ) 3, 4, 1, 2
திருக்குறள் என்பது
அ) ஆகுபெயர்
ஆ) கருவியாகுபெயர்
இ) அடையடுத்த ஆகுபெயர்
ஈ) அடையடுத்த கருவியாகுபெயர்
Answer:
ஈ) அடையடுத்த கருவியாகுபெயர்
திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர்
அ) வீரமாமுனிவர்
ஆ) ஜி.யு.போப்
இ) கால்டுவெல்
ஈ) சார்லஸ் வில்கினிஸ்
Answer:
அ) வீரமாமுனிவர்
ஏட்டுச்சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
அ) 1912
ஆ) 1712
இ) 1612
ஈ) 1812
Answer:
ஈ) 1812
அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை
அ) 380
ஆ) 700
இ) 250
ஈ) 133
Answer:
அ) 380
இன்பத்துப்பாலில் உள்ள இயல்கள்
அ) 4
ஆ) 3
இ) 2
ஈ) 9
Answer:
இ) 2
திருக்குறளில் உள்ள மொத்த இயல்கள்
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 9
Answer:
ஈ) 9
அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் அமைந்துள்ள பிரிவு
அ) இன்பத்துப்பால்
ஆ) பொருள் பால்
இ) அறத்துப்பால்
ஈ) காமத்துப்பால்
Answer:
ஆ) பொருள் பால்
இல்லறவியலில் அமைந்துள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை
அ) 130
ஆ) 200
இ) 133
ஈ) 250
Answer:
ஆ) 200
கற்பியல், களவியல் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
அ) 18, 07
ஆ) 07, 18
இ) 09, 16
ஈ) 16, 09
Answer:
ஆ) 07, 18
ஊழியலில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
அ) 08
ஆ) 13
இ) 01
ஈ) 04
Answer:
இ) 01
‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை ‘ – ‘அன்பும் அறனும்’ இலக்கணக் குறிப்பு
அ) உம்மைத்தொகை
ஆ) எண்ணும்மை
இ) உவமைத்தொகை
ஈ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
Answer:
ஆ) எண்ணும்மை
‘செய்த’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
அ) செய்து + அ
ஆ) செய்+த்(ந்)+த்+அ
இ) செய் + து
ஈ) செய் + த் + அ
Answer:
ஈ) செய் + த் + அ
‘நன்றல்லது’ இச்சொல்லிற்கு உரிய சரியான புணர்ச்சி விதிகள்
அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
ஆ) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
இ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
ஈ) ஈறுபோதல், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
Answer:
அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
‘மறத்தல் வெகுளியை யார்மாட்டும்’ – ‘மறத்தல்’ என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) உவமையாகு பெயர்
ஆ) வினைமுற்று
இ) தொழிற்பெயர்
ஈ) பண்புப்பெயர்
Answer:
இ) தொழிற்பெயர்
‘கொன்ற’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
அ) கொன் + ற் + அ
ஆ) கொன்று + அ
இ) கொன் + ற் + உ
ஈ) கொல்(ன்) + ற் + அ
Answer:
ஈ) கொல்(ன்) + ற் + அ
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதபமிகும்’ என்ற விதிப்படி அமைந்த சொல்
அ) உலகத்தார்
ஆ) பனைத்துணை
இ) கொல்லாது
ஈ) காப்பால்
Answer:
ஆ) பனைத்துணை
‘நன்றி மறப்பது நன்றன்று ; நன்றல்லது’ – ‘நன்றி மறப்பது’ – இலக்கணக் குறிப்பு
அ) வினையெச்சம்
ஆ) இரண்டாம் வேற்றுமைத் தொகை
இ) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
ஈ) பெயரெச்சம்
Answer:
ஆ) இரண்டாம் வேற்றுமைத் தொகை
கூற்று 1 : ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லது.
கூற்று 2 : ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு உய்வு இல்லை.
அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று இரண்டும் தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
கூற்று : சினத்தை விட நமக்கு வேறு பகை இல்லை.
காரணம் : அது நம் முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் கொன்றுவிடும்.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று சரி காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answer:
ஆ) கூற்று சரி காரணம் சரி
கூற்று 1 : மெலியவரிடத்தில் சினம் கொள்ளாமல் காப்பவரே சினம் காப்பவர்.
கூற்று 2 : புலால் உண்ணவில்லை என்றால் வருவாயின் பொருட்டு ஊன் விற்பவர் யாரும் இருக்கமாட்டார்.
அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி
கூற்று 1 : ஒருவர் செய்த தீமையை அப்பொழுது மறந்துவிடுவது நல்லதன்று.
கூற்று 2 : உரிய காலத்தில் செய்யும் சிறிய உதவி உலகத்தைவிடப் பெரியது.
அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று இரண்டும் சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
கூற்று : ஒருவன் தன்னைக் காக்க சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டாம்.
காரணம் : சினம் காக்கவிட்டால் தன்னையே அழித்துவிடும்.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி.
இ) கூற்று சரி, காரணம் சரி.
ஈ) கூற்று வறு, காரணம் தவறு.
Answer:
ஆ) கூற்று தவறு, காரணம் சரி.
சரியானதைத் தேர்க.
அ) ஒருவர் செய்த தீமையை மறக்கக் கூடாது.
ஆ) உரிய காலத்தில் செய்த உதவி பனையளவு பெரியது.
இ) நன்மையான விளைவுகள் சினத்தால் ஏற்படாது.
ஈ) இயல்பான அறிவு எப்போதும் வெளிப்படாது.
Answer:
இ) நன்மையான விளைவுகள் சினத்தால் ஏற்படாது.
சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க.
அ) இல்வாழ்க்கை – 26-ஆம் அதிகாரம்
ஆ) புலால் மறுத்தல் – 38-ஆம் அதிகாரம்
இ) ஊழ் – 05-ஆம் அதிகாரம்
ஈ) வெஃகாமை – 18-ஆம் அதிகாரம்
Answer:
ஈ) வெஃகாமை – 18-ஆம் அதிகாரம்
சரியானதைத் தேர்க.
அ) பாயிரவியல் – 20 அதிகாரம்
ஆ) இல்லறவியல் – 01 அதிகாரம்
இ) துறவறவியல் – 13 அதிகாரம்
ஈ) ஊழியல் – 04 அதிகாரம்
Answer:
இ) துறவறவியல் – 13 அதிகாரம்
பொருந்தாதைத் தேர்க.
அ) ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு உய்வே இல்லை.
ஆ) ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறந்துவிடுவது நல்லது அன்று.
இ) செல்வம் குறையாமலிருக்க பிறர் கைப்பொருளை விரும்ப வேண்டும்.
ஈ) அறத்தின் இயல்புடன் வாழ்பவர் முயற்சி உடையவரை விட மேம்பட்டவர்.
Answer:
இ) செல்வம் குறையாமலிருக்க பிறர் கைப்பொருளை விரும்ப வேண்டும்.
பொருத்துக.
அ) அரசவியல் – 1) 13 அதிகாரம்
ஆ) இல்லறவியல் – 2) 25 அதிகாரம்
இ) ஒழிபியல் – 3) 20 அதிகாரம்
ஈ) கற்பியல் – 4) 18 அதிகாரம்
அ) 2, 4, 3, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 2, 3, 1, 4
ஈ) 2, 4, 3, 1
Answer:
இ) 2, 3, 1, 4
பொருத்துக.
அ) 11-ஆம் அதிகாரம் – 1. வெகுளாமை
ஆ) 31-ஆம் அதிகாரம் – 2. வெஃகாமை
இ) 18-ஆம் அதிகாரம் – 3. புலால் மறுத்தல்
ஈ) 26-ஆம் அதிகாரம் – 4. செய்ந்நன்றி அறிதல்
அ) 4, 1, 3, 2
ஆ) 4, 2, 1, 3
இ) 2, 4, 3, 1
ஈ) 4, 1, 2, 3
Answer:
ஈ) 4, 1, 2, 3
பொருத்திக் காட்டுக.
அ) அறத்துப்பால் – 1) 70
ஆ) பொருட்பால் – – 2) 38
இ) இன்பத்துப்பால் – 3) 25
அ) 2, 1, 3
ஆ) 3, 2, 1
இ) 1, 2, 3
ஈ) 2, 3,1
Answer:
அ) 2, 1, 3
பொருத்திக் காட்டுக.
அ) அறத்துப்பால் – 1) 3 இயல்கள்
ஆ) பொருட்பால் – 2) 4 இயல்கள்
இ) இன்பத்துப்பால் – 3) 2 இயல்கள்
அ) 2, 1, 3
ஆ) 3, 1, 2
இ) 2, 3, 1
ஈ) 1, 3, 2
Answer:
அ) 2, 1, 3
அறத்துப்பாலில் இடம்பெறாத இயலைக் கண்டறிக.
அ) பாயிரவியல்
ஆ) இல்லறவியல்
இ) துறவறவியல்
ஈ) ஒழிபியல்
Answer:
ஈ) ஒழிபியல்
பொருட்பாலில் இடம்பெறாத இயலைக் கண்டறிக.
அ) அரசு இயல்
ஆ) அமைச்சு இயல்
இ) ஒழிபியல்
ஈ) ஊழியல்
Answer:
ஈ) ஊழியல்
இன்பத்துப்பாலில் இடம்பெறும் இயல்களைக் கண்டறிக
அ) களவியல், கற்பியல்
ஆ) அரசியல், அமைச்சியல்
இ) ஊழியல், ஒழிபியல்
ஈ) பாயிரவியல், இல்லறவியல்
Answer:
அ) களவியல், கற்பியல்
பொருத்திக் காட்டுக (இயல்களும் அதிகாரங்களின் எண்ணிக்கையும்).
அ) பாயிரவியல் – 1) 1 அதிகாரம்
ஆ) இல்லறவியல் – 2) 13 அதிகாரங்கள்
இ) துறவறவியல் – 3) 20 அதிகாரங்கள்
ஈ) ஊழியல் – 4) 4 அதிகாரங்கள்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1
பொருத்திக் காட்டுக.
அ) அரசியல் – 1) 18 அதிகாரங்கள்
ஆ) அமைச்சியல் – 2) 13 அதிகாரங்கள்
இ) ஒழிபியல் – 3) 32 அதிகாரங்கள்
ஈ) கற்பியல் – 4) 25 அதிகாரங்கள்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 4, 1
இ) 4, 1, 3, 2
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 4, 3, 2, 1
திருக்குறளின் களவியலில் உள்ள அதிகாரங்கள்
அ) 07
ஆ) 18
இ) 13
ஈ) 04
Answer:
அ) 07
திருக்குறள் ……………… ஆன நூல்.
அ) குறள் வெண்பாக்களால்
ஆ) சிந்தியல் வெண்பாக்களால்
இ) ஆசிரியப்பாவால்
ஈ) கலிப்பாவால்
Answer:
அ) குறள் வெண்பாக்களால்
திருக்குறள் ……………. நூல்களுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) பதினெண்மேற்கணக்கு
Answer:
இ) பதினெண்கீழ்க்கணக்கு
திருக்குறள் என்பது ………………. ஆகும்.
அ) இடவாகுபெயர்
ஆ) காலவாகுபெயர்
இ) அடையடுத்த ஆகுபெயர்
ஈ) எண்ணலளவையாகுபெயர்
Answer:
இ) அடையடுத்த ஆகுபெயர்
திருக்குறள் என்பது
அ) இரண்டடி வெண்பா
ஆ) நான்கடி வெண்பா
இ) மூவடி வெண்பா
ஈ) ஓரடி வெண்பா
Answer:
அ) இரண்டடி வெண்பா
உலகப் பொதுமறை, அறவிலக்கியம், தமிழர் திருமறை உள்ளிட்ட சிறப்புப் பெயர்களுக்குரிய நூல்
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) நான்மணிக்கடிகை
ஈ) இன்னாநாற்பது
Answer:
அ) திருக்குறள்
மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே மனித வாழ்வின் மேன்மைகளையும் வாழ்வியல் நெறிகளையும் வகுத்துக்காட்டிய நூல்
அ) இலியட்ஸ்
ஆ) மெயின்காம்ப்
இ) திருக்குறள்
ஈ) சாகுந்தலம்
Answer:
இ) திருக்குறள்
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி – இவற்றால் ‘நாலும்’ என்பது …………… ‘இரண்டு’ என்பது ………………. குறிக்கும்.
அ) நாலடியார், திருக்குறள்
ஆ) நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது
இ) நானிலம், இருதிணை
ஈ) நாற்படை, இருசுடர்
Answer:
அ) நாலடியார், திருக்குறள்
திருக்குறளுக்கு உரை எழுதியவர்களாகப் பழம்பாடலால் குறிப்பிடப்படுபவர்கள்
அ) இருவர்
ஆ) நால்வர்
இ) அறுவர்
ஈ) பதின்மர்
Answer:
ஈ) பதின்மர்
திருக்குறளுக்கு உரை எழுதாதவரைக் கண்டறிக.
அ) தருமர்
ஆ) மணக்குடவர்
இ) பரிமேலழகர்
ஈ) அடியார்க்கு நல்லார்
Answer:
ஈ) அடியார்க்கு நல்லார்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – எனப் பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வெ. ராமலிங்கனார்
ஈ) இராமலிங்க அடிகள்
Answer:
அ) பாரதியார்
வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே – எனப் பாடியவர்
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) இராமலிங்க அடிகள்
ஈ) வெ. இராமலிகனார்
Answer:
அ) பாரதிதாசன்
தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை நிறுவியுள்ள இடம்
அ) சென்னை
ஆ) நாகர்கோவில்
இ) கன்னியாகுமரி
ஈ) சேலம்
Answer:
இ) கன்னியாகுமரி
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்
அ) வேலூர்
ஆ) சென்னை
இ) மேலூர்
ஈ) திருத்தணி
Answer:
அ) வேலூர்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது – என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) நிரல்நிறை அணி
ஆ) தற்குறிப்பேற்ற அணி
இ) பிறிதுமொழிதல் அணி
ஈ) வேற்றுமை அணி
Answer:
அ) நிரல்நிறை அணி
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லிஇனம் என்னும்
ஏமப் புணையச் சுடும் – என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) நிரல்நிறை அணி
ஆ) ஏகதேச உருவக அணி
இ) பிறிதுமொழிதல் அணி
ஈ) வேற்றுமை அணி
Answer:
ஆ) ஏகதேச உருவக அணி