‘விளியறி ஞமலி’ – இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது?
அ) எருது
ஆ) குதிரை
இ) நாய்
ஈ) யாழி
Answer:
இ) நாய்
பொருத்திக் காட்டுக.
அ) வேட்டம் – 1. கானவன்
ஆ) செறு – 2. மீன்பிடித்தல்
இ) உமணர் – 3. வயல்
ஈ) புனவன் – 4. உப்பு வணிகர்
அ) 2, 3, 4, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 4, 1, 2
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 2, 3, 4, 1
பொருத்திக் காட்டுக.
அ) ஞமலி – 1. சேறு
ஆ) பகடு – 2. விலை
இ) அள்ள ல் – 3. நாய்
ஈ) கொள்ளை – 4. எருது
அ) 3, 4, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 3, 4, 1, 2
பொருத்திக் காட்டுக.
அ) என்றூழ் – 1. மலைவெடிப்பு
ஆ) விடர் – 2. சூரிய வெப்பம்
இ) கதழ் – 3. அஞ்சிய
ஈ) வெரீஇய – 4. விரைவு
அ) 4, 3, 2, 1
ஆ) 2, 1, 4, 3
இ) 4, 2, 1, 3)
ஈ) 1, 2, 3, 4
Answer:
ஆ) 2, 1, 4, 3
‘மதர்கயல் மலைப்பின் அன்ன’ – என்பதில் ‘கயல்’ என்னும் சொல்லின் பொருள்
அ) மீன்
ஆ) விழி
இ) விண்மீ ன்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) மீன்
பெரிய கடல் பரப்பில் மீன் வேட்டையாடுபவர்
அ) குறவர்
ஆ) ஆயர்
இ) எயினர்
ஈ) பரதவர்
Answer:
ஈ) பரதவர்
‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு’ என்பது யாருடைய கூற்று?
அ) பரதவரின் கூற்று
ஆ) உமணர் மகள் கூவியது
இ) தலைவியின் கூற்று
ஈ) தலைமகன் பாங்கற்கு உரைத்தது
Answer:
ஈ) தலைமகன் பாங்கற்கு உரைத்தது
உப்பு ஏற்றிச்செல்லும் வண்டி சிக்கிக் கொண்ட இடம்
அ) மணற்திட்டு
ஆ) கருஞ்சேறு
இ) வாய்க்கால்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) கருஞ்சேறு
‘வெய்ய உயிர்க்கும் நோயாகின்றே’ என்று யார் யாரிடம் கூறியது?
அ) உமணர் மகள் தந்தையிடம்
ஆ) தந்தை உமணர் மகளிடம்
இ) தலைமகன் பாங்கனிடம்
ஈ) பாங்கன் தலைமனிடம்
Answer:
இ) தலைமகன் பாங்கனிடம்
உப்பு விளையும் களத்திற்கு ……………. என்று பெயர்.
அ) அளம்
ஆ) பாலம்
இ) நிலம்
ஈ) களி
Answer:
அ) அளம்
பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக விளங்கியது
அ) உப்பு
ஆ) முத்து
இ) துணி
ஈ) ஏலம்
Answer:
அ) உப்பு
பொருத்திக் காட்டுக.
அ) பெருங்கடல் – 1. செய்யுளிசை அளபெடை
ஆ) உழாஅது – 2. சொல்லிசை அளபெடை
இ) வெரீஇய – 3. பண்புத்தொகை
அ) 3, 1, 2
ஆ) 3, 2,1
இ) 1, 2, 3
ஈ) 2, 1, 3
Answer:
அ) 3, 1, 2
பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல்
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) குறுந்தாகை
ஈ) நற்றிணை
Answer:
அ) அகநானூறு
அகநானூறு ………. நூல்களுள் ஒன்று
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) நீதி
ஈ) பதினெண்கீழ்க்கணக்கு
Answer:
அ) எட்டுத்தொகை
அகநானூறு …………….. பிரிவுகளை உடையது.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
அ) மூன்று
பொருத்திக் காட்டுக.
அ) களிற்றியானை நிரை – 1) 100 பாடல்கள்
ஆ) மணிமிடை பவளம் – 2) 120 பாடல்கள்
இ) நித்திலக்கோவை – 3) 180 பாடல்கள்
அ) 2, 3, 1
ஆ) 1, 2, 3
இ) 3, 2, 1
ஈ) 1, 3, 2
Answer:
அ) 2, 3, 1
சரியானக் கூற்றைக் கண்டறிக.
i) அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்
ii) நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர் அம்மூவனார்.
ii) இவரது பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றிலும் தொகுக்கப்பெற்றுள்ளன.
அ) i), ii), சரி
ஆ) i), iii) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி