Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 1.3 தன்னேர் இலாத தமிழ்

பலவுள் தெரிக

Question 1.
“மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!” இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்
அ) அடிமோனை, அடி எதுகை
ஆ) சீர் மோனை, சீர் எதுகை
இ) அடி எதுகை, சீர் மோனை
ஈ) சீர் எதுகை, அடியோனை
Answer:
இ) அடி எதுகை, சீர் மோனை

Question 1.
அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்
அ) முத்துவீரியம்
ஆ) வீரசோழியம்
இ) மாறவைங்காரம்
ஈ) இலக்கண விளக்கம்
Answer:
இ) மாறவைங்காரம்

Question 2.
கீழ்க்காண்பவற்றுள் ‘வினையாலணையும் பெயர்’ எது?
அ) உயர்ந்தோர்
ஆ) வந்தான்
இ) நடப்பான்
ஈ) உயர்ந்து
Answer:
அ) உயர்ந்தோர்

Question 3.
‘ஈறுபோதல்’, ‘முன்னின்ற மெய்திரிதல்’ எச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதி?
அ) கருங்குயில்
ஆ) வெங்கதிர்
இ) நெடுந்தேர்
ஈ) ழுதுமாம்
Answer:
ஆ) வெங்கதிர்

Question 4.
‘விளங்கி’ – இச்சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு
அ) விள + ங் + இ
ஆ) விளங்கு + க் + இ
இ) வி + ளங்கு + இ
ஈ) விளங்கு + இ
Answer:
ஈ) விளங்கு + இ

Question 5.
கருத்து 1 : மக்களின் அறியாமையை அகற்றுவது தமிழ்மொழியாகும்.
கருத்து 2 : புற இருளைப் போக்க கதிரவன் உதவும்.
அ) இரண்டு கருத்தும் சரி
ஆ) கருத்து 1 சரி 2 தவறு
இ) கருத்து 1 தவறு 2 சரி
ஈ) இரண்டு கருத்தும் தவறு
Answer:
அ) இரண்டு கருத்தும் சரி

Question 6.
கருத்து 1 : ‘தொன்னூல் விளக்கம்’ அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் நூல்.
கருத்து 2 : ‘குவலயானந்தம்’ என்னும் நூல் முழுமையான இலக்கண நூல்.
அ) இரண்டு கருத்தும் சரி
ஆ) இரண்டு கருத்தும் தவறு
இ) கருத்து 1 தவறு, 2 சரி
ஈ) இவற்றில் எதுவுமில்லை

Answer:
ஆ) இரண்டு கருத்தும் தவறு

Question 7.
சரியானதைத் தேர்க.
அ) வீரசோழியம் – நாவல்
ஆ) முத்து வீரியம் – சிறுகதை
இ) குவலயானந்தம் – அணியிலக்கணம்
ஈ) மாறனலங்காரம் – பொருளிலக்கணம்
Answer:
இ) குவலயானந்தம் – அணியிலக்கணம்

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) வந்து – பெயரெச்சம்
ஆ) உயர்ந்தோர் – வினையாலணையும் பெயர்
இ) இலாத – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) வெங்கதிர் – வினைத்தொகை
Answer:
ஆ) உயர்ந்தோர் – வினையாலணையும் பெயர்

Question 9.
பொருந்தாததைக் தேர்க.
அ) தமிழ்மொழி – பொதிகை மலை
ஆ) தொல்காப்பியம் – இலக்கிய நூல்
இ) தண்டியலங்காரம் – தண்டி
ஈ) காவியதர்சம் – வடமொழி இலக்கணம்
Answer:
ஆ) தொல்காப்பியம் – இலக்கிய நூல்

Question 10.
பொருத்துக.
அ) வெங்கதிர் – 1. இடைக்குறை
ஆ) இலாத – 2. வினையெச்சம்
இ) வந்து – 3. வினையாலணையும் பெயர்
ஈ) உயர்ந்தோர் – 4. பண்புத்தொகை
அ) 4, 2, 3, 1
ஆ) 4, 1, 3, 2
இ) 4, 1, 2, 3
ஈ) 2, 3, 1, 4
Answer:
இ) 4, 1, 2, 3

Question 11.
தமிழ் தோன்றிய மலை
அ) குடகு
ஆ) பொதிகை
இ) இமயமலை
ஈ) விந்தியமலை
Answer:
ஆ) பொதிகை

Question 12.
தன்னேர் இலாத தமிழ் பாடப்பகுதியல் இடம்பெற்றுள்ள பாடல்
அ) தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்
ஆ) இறையனார்களவியல் உரை மேற்கோள் பாடல்
இ) நம்பியகப்பொருள் உரை மேற்கோள் பாடல்
ஈ) புறப்பொருள் வெண்பாமாலை உரை மேற்கோள் பாடல்
Answer:
அ) தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்

Question 13.
இருளைப் போக்கும் இரண்டு
அ) கதிரவன், நிலவு
ஆ) கதிரவன், தமிழ்
இ) அறிவு, தமிழ்
ஈ) அறிவு, ஞானம்
Answer:
ஆ) கதிரவன், தமிழ்

Question 14.
மின்னலைப் போன்று ஒளிர்வது
அ) கதிரவன்
ஆ) தமிழ்
இ) தமிழ்
ஈ) வானம்
Answer:
அ) கதிரவன்

Question 15.
அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூலைக் கண்டறிக.
அ) வீரசோழியம்
ஆ) இலக்கணவிளக்கம்
இ) முத்து வீரியம்
ஈ) குவலயானந்தம்
Answer:
ஈ) குவலயானந்தம்

Question 16.
தண்டியலங்காரம் ……………. இலக்கணத்தைக் கூறும் நூல்.
அ) எழுத்து
ஆ) சொல்
இ) பொருள்
ஈ) அணி
Answer:
ஈ) அணி

Question 17.
‘ஓங்கலிடை வந்து’ என்று தொடங்கும் பாடல் தண்டியலங்காரத்தின் ………….. பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அ) பொருளணியியல்
ஆ) பொதுவியல்
இ) சொல்லணியியல்
ஈ) ஒழிபியல்
Answer:
அ) பொருளணியியல்

Question 18.
காவியதர்சம் என்பது
அ) வடமொழி இலக்கண நூல்
ஆ) புராண நூல்
இ) வரலாற்று நூல்
ஈ) மலையாள இலக்கிய நூல்
Answer:
அ) வடமொழி இலக்கண நூல்

Question 19.
காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல்
அ) தண்டியலங்காரம்
ஆ) மாறனலங்காரம்
இ) வீரசோழியம்
ஈ) முத்துவீரியம்
Answer:
அ) தண்டியலங்காரம்

Question 20.
தண்டியலங்காரத்தின் ஆசிரியர்
அ) தண்டி
ஆ) ஐயரினாதர்
இ) சமணமுனிவர்
ஈ) பவணந்தி
Answer:
அ) தண்டி

Question 21.
தண்டி …………. ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
அ) கி.பி. 11
ஆ) கி.பி. 12
இ) கி.பி. 13
ஈ) கி.பி. 14
Answer:
ஆ) கி.பி. 12


தண்டியலங்காரம் …………… பெரும் பிரிவுகளை உடையது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

குறுவினா


தண்டியலங்காரம் – நூல், நூலாசிரியர் சிறுகுறிப்பு தருக.
Answer:
அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களில் ஒன்று தண்டியலங்காரமாகும். எழுதியவர் தண்டி ஆவார். இவரது காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு. தண்டியலங்காரம் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.

ஆசிரியர் : தண்டி
காலம் : 12ஆம் நூற்றாண்டு
தழுவல் நூல் : காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலை தழுவி எழுதப்பட்டது.
மூன்று பிரிவுகள் : பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல்.


அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?
Answer:
தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம்.


அணியிலக்கணத்தோடு பிற இலக்கணத்தையும் கூறும் நூல்கள் யாவை?
Answer:
அணி இலக்கணத்தோடு பிற இலக்கணத்தையும் கூறும் நூல் தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம் ஆகும்.


தண்டியலங்காரத்தின் மூன்று பெரும் பிரிவுகள் யாவை?
Answer:
பொதுவியல், மாறனலங்காரம், சொல்லணியியல்.