Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

‘பலர் துஞ்சவும் தாம் துஞ்சான்’ விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும்
அ) சோழன் நெடுங்கிள்ளியை – பாணர்
ஆ) சோழன் நலங்கின்னியை – கோவூர் கிழார்
இ) கணைக்கால் இரும்பொறையை – கபிலர்
ஈ) கரிகாலனை – உருத்திரங்கண்ணனார்
Answer:
ஆ) சோழன் நலங்கின்னியை – கோவூர் கிழார்

ஒர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதற்குத் திருவள்ளுவர் அட்டவணையைத் தருவதாக அமையும் அதிகாரம்
அ) மடியின்மை
ஆ) வெஃகாமை
இ) ஊழ்
ஈ) வெகுளாமை
Answer:
அ) மடியின்மை

‘பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
உலகு காக்கும் உயர் கொள்கை
கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே”
– என்னும் அடிகள் இடம்பெறும் நூல் ………………… பாடப்பட்ட வன் … அடிலை கடமபறும் நூல் ……………… பாடியோன

அ) புறநானூறு, கோவூர்கிழர், சோழன் நலங்கிள்ளி
ஆ) பதிற்றுப்பத்து, கபிலர், சேரன் செங்குட்டுவன்
இ) புறநானூறு, பரணர், பேகன்
ஈ) மனோன்மணியம், சுந்தரனார், ஜீவகன்
Answer:
அ) புறநானூறு, கோவூர்கிழர், சோழன் நலங்கிள்ளி

சீனத்தில் வழங்கும் யாங்சௌ கதை ………….. பற்றியது.
அ) இவ்வுலக வாழ்வை
ஆ) நேர மேலாண்மையை
இ) கொல்லாமையை
ஈ) சொர்க்கத்தை
Answer:
ஆ) நேர மேலாண்மையை

வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து இனிது அரசு செய்கின்றான் – என்று தன் நாட்டை மிகவும் செப்பமாகவும்
நுணுக்கமாகவும் ஆட்சி செய்த யாரைப் பற்றி யார் எந்நூலில் பாடியுள்ளார்?

அ) தசரதனைப், கம்பர், கம்பராமாயணம் – பாலகாண்டத்தில்
ஆ) நெடுஞ்செழியனைப், இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டத்தில்
இ) நலங்கிள்ளியைப், கோவூர்கிழார் – புறநானூற்றில்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தசரதனைப், கம்பர், கம்பராமாயணம் – பாலகாண்டத்தில்

‘இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக… என்று கூறுவது
அ) மூதுரை
ஆ) ஆத்திசூடி
இ) அறநெறிச்சாரம்
ஈ) நளவெண்பா
Answer:
இ) அறநெறிச்சாரம்

உரோமபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தர்கள் என்ற குறிப்பினை உடைய நூல்
அ) கம்பராமாயணம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) மதுரைக்காஞ்சி
ஈ) பட்டினப்பாலை
Answer:
ஆ) சிலப்பதிகாரம்

‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்’ என்று குதிரைகள் இறக்குமதி பற்றிக் குறிப்பிடும் நூல்
அ) பரிபாடல்
ஆ) பட்டினப்பாலை
இ) பதிற்றுப்பத்து
ஈ) புறநானூறு
Answer:
ஆ) பட்டினப்பாலை

‘வான் முகந்த நீர் மலைப் பொழியவும்…’ எனக் காவிரிப்பூம்பட்டினத்தில் மாரிக்காலத்து மழைமேகம் போல, கணக்கிட இயலாத பொருள்கள் பண்டசாலை முற்றத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்ததனைக் குறிப்பிடும் நூல்
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) பட்டினப்பாலை
ஈ) அகநானூறு
Answer:
இ) பட்டினப்பாலை

காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்த பொருள்களுக்குச் சுங்கம் வசூலித்தபின் அவற்றின்மீது சுங்க அதிகாரிகள் பொறித்த சின்னம்
அ) வில்
ஆ) மீன்
இ) புலி
ஈ) சிங்கம்
Answer:
இ) புலி

சங்க இலக்கியங்களின் வாயிலாக மிகப் பெரிய துறைமுகமாகவும், யவனர்களின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படும் இடமாகவும் அறியப்படுவது
அ) கொற்கை
ஆ) முசிறி
இ) தொண்டி
ஈ) வஞ்சி
Answer:
ஆ) முசிறி

அகஸ்டஸ் சீசரைப் பாண்டிய நாட்டுத் தூதுக்குழு ஒன்று கி.மு. 20ஆம் ஆண்டு சந்தித்ததைப் பற்றிக் கூறுபவர்
அ) ஸ்ட்ரேபோ
ஆ) யுவான்சுவாங்
இ) பாகியான்
ஈ) மெகஸ்தனிஸ்
Answer:
அ) ஸ்ட்ரேபோ

யவனரது கப்பல்கள் பற்றிய குறிப்பு இடம்பெறும் பாடல்
அ) புறநானூற்றில் 56ஆம் பாடல்
ஆ) புறநானூற்றில் 86ஆம் பாடல்
இ) அகநானூற்றில் 56ஆம் பாடல்
ஈ) அகநானுற்றில் 86ஆம் பாடல்
Answer:
அ) புறநானூற்றில் 56ஆம் பாடல்

யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாக்கிக் கட்டுப்படுத்தியவன் என்று பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தில் குறிக்கப்படுபவன்
அ) சேரன் செங்குட்டுவன்
ஆ) உதியஞ் சேரலாதன்
இ) இமயவரம்பன் நெடுஞ்சோலாதன்
ஈ) இவற்றில் எவருமிலர்
Answer:
இ) இமயவரம்பன் நெடுஞ்சோலாதன்

‘உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்’ என்ற குறட்பா உணர்த்தும் செய்தி

அ) தன்னுடைய வலிமையின் அளவை மீறிச்செயல்படுவோர் அழிவர்
ஆ) எந்தச் செயலையும் முடிக்க இயலும் என்பதை நம்ப வேண்டும்
இ) முடியாதது என்ற ஒன்று எவருக்குமே இல்லை
ஈ) தான் என்ற சர்வம் வெற்றியுடையவனாக்கும்
Answer:
அ) தன்னுடைய வலிமையின் அளவை மீறிச்செயல்படுவோர் அழிவர்

கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுந் தலைப்படுவர்’ – என்று கூறும் நூல்
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) நன்மணிக்கடிகை
ஈ) ஏலாதி
Answer:
ஆ) நாலடியார்

‘டைமன்’ பற்றிய ……………. நாடகம் நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல் விளக்கமாக அமைகிறது.
அ) வேர்ட்ஸ்வொர்த்தின்
ஆ) பெர்னாட்ஷாவின்
இ) ஷேக்ஸ்பியரின்
ஈ) டெமாஸ்தனிஸின்
Answer:
இ) ஷேக்ஸ்பியரின்

“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப்…”
– என நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் கவிஞர்

அ) கோவூர்கிழார்
ஆ) ஒளவையார்
இ) ஒக்கூர் மாசாத்தியார்
ஈ) கபிலர்
Answer:
ஆ) ஒளவையார்

ஹிராக்ளிடஸ் என்பவர் ……………. நாட்டவர் ஆவார்.
அ) கிரேக்க
ஆ) இத்தாலி
இ) அமெரிக்க
ஈ) ஆப்கானிய
Answer:
அ) கிரேக்க

ஹிராக்ளிடஸ் என்பார் எழுதிய உலகப் புகழ்பெற்ற ‘துளிகள்’ என்னும் நூல் ……….. ஒற்றை வரிகளை உடையது.
அ) 124
ஆ) 126
இ) 154
ஈ) 224
Answer:
ஆ) 126

‘இரண்டு முறை ஒருவன் ஒரே நதியில் இறங்க முடியாது’ என்று எழுதியவர்
அ) ஹிராக்ளிடஸ்
ஆ) ஷேக்ஸ்பியர்
இ) பெர்னாட்ஷா
ஈ) அரிஸ்டாட்டில்
Answer:
அ) ஹிராக்ளிடஸ்

‘ஒவ்வொரு நாளும் சூரியன் புதிது’ என்று கூறியவர்
அ) ஹிராக்ளிடஸ்
ஆ) ஷேக்ஸ்பியர்
இ) பெர்னாட்ஷா
ஈ) அரிஸ்டாட்டில்
Answer:
அ) ஹிராக்ளிடஸ்

அவ்வைக்கு நெல்லிக்கனியைத் தந்தவன்
அ) பேகன்
ஆ) அதியன்
இ) பாரி
ஈ) ஓரி
Answer:
ஆ) அதியன்

‘இலக்கியத்தில் மேலாண்மை ‘ என்னும் நூலை எழுதியவர்
அ) சகாயம்
ஆ) வெ. இறையன்பு
இ) இந்திரா பார்த்தசாரதி
ஈ) மேலாண்மை பொன்னுசாமி
Answer:
ஆ) வெ. இறையன்பு

இ.ஆ.ப. தேர்வுக்குத் தமிழை ஒரு விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர்
அ) இராதாகிருஷ்ணன்
ஆ) வெ. இறையன்பு
இ) ரோகினி
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
ஆ) வெ. இறையன்பு

வெ. இறையன்புவின் எந்த நூல் 1995ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றது?
அ) வாய்க்கால் மீன்கள்
ஆ) ஏழாவது அறிவு
இ) உள்ளொளிப்பயணம்
ஈ) மூளைக்குள் சுற்றுலா
Answer:
அ) வாய்க்கால் மீன்கள்