Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

சினிமா செய்திகள்

அர்னால்டு தாத்தாவின் புதிய பேத்தி

அர்னால்டு சுவாசநேகரின் மகளான கேத்தரின் சுவாசநேகர் மற்றும் ஜுராசிக் பார்க் நடிகர் கிரீஸ் பிராட்டின் இரண்டாவது மகளின் புகைப்படம் வெளியாகி உள்ளது

கடந்த ஜூன் 2019இல் கேத்தரின் சுவாசநேகர் மற்றும் நடிகர் கிரீஸ் பிராட்டுக்கும் திருமணம் நடைபெற்றது,இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உண்டு இவர்களுக்கு தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.இவர்கள் அர்னால்டுடன் எடுத்துக்கொண்ட புரைபடங்கள் தற்போது வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது

எலோய்ஸ் என தங்களது புதிய பேத்திக்கு பெயரிட்டு இருக்கிறார் அர்னால்டு,இவர் தனது மகள் மற்றும் மருமகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் அணைத்து சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது .

ஜுராசிக் பார்க் ,கார்டியன்ஸ் ஆப் கேலக்ஷி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கிரீஸ் பிராட் இவர் ஏற்கனவே அமெரிக்க நடிகை அன்னா பாரிசை திருமணம் செய்துஇருந்தார் ,இவர்களுக்கு 2012 முதல் ஆண் குழந்தை பிறந்தது ,இருந்த போதிலும் இவர்களுக்கு 2017இல் மனவருத்தம் காரணமாக விவாகரத்து நடை பெற்றது

பின் ,அர்னால்டு சுவாசநேகரின் மூத்த மகளான கேத்தரின் சுவாசநேகரை 2019 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்,இவருக்கு 2020இல் முதல் பெண் குழந்தை பிறந்தது ,பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது

தாத்தாவின் கண்டிப்பு

எப்போதும் தனது குடும்பத்தினர் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுவதை விரும்பாத அர்னால்டு,சில தினங்களுக்கு முன்பு கண்டிப்புடன் வலை செய்தி ஒன்றையும் பகிர்ந்து இருந்தார் ,தொடர்ந்து தனது பேத்தியின் புகைப்படத்தை பகிர துடித்த செய்தி நிறுவனங்களையும் சாடினார் ,அவரது கண்டிப்புக்கு பயந்து அவரது குடும்பத்தினரை தொடர்வதை நிறுத்தினர் செய்தி நிறுவனங்கள்

பேத்தியின் புகைப்படம் வெளியீடு

கேத்தரின் சுவாசநேகர் தற்போது தனது இரண்டாவது மகளின் புகைப்படங்களை முகம் தெரியாத வண்ணம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

தனது குழந்தையை அனைத்தபடி ஒரு புகைப்படமும் ,குழந்தையின் கால்கள் மட்டும் தெரியும் வண்ணம் ஒரு புகைப்படமும் ,தனது தந்தையான அர்னால்டு குழந்தையை வைத்திருப்பத்து போன்ற புகைப்படமும் ,தனது கணவர் குழந்தையை வைத்திருப்பது போன்ற புகைப்படமும் ,தனது மூத்த மகளை கழுத்தில் அமர வைத்த கணவரின் புகைப்படமும் அவர் வெளியிட்டு இருந்தார்

இருந்த போதிலும் தனது தந்தையின் கட்டுப்பாட்டை மீறாத கேத்தரின் சுவாசநேகர் எந்த புகைப்படத்தில் குழந்தைகளின் முகத்தை காட்டவில்லை என்பது குறிப்பிட தக்கது