Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 1.4 தம்பி நெல்லையப்பருக்கு

பலவுள் தெரிக

தமிழ்நாட்டில் வீதி தோறும் இருக்க வேண்டியது எது எனப் பாரதியார் விரும்புகிறார்

அ) ஆலயம்
ஆ) தொழிற்சாலை
இ) பள்ளிக்கூடம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை

Answer:
இ) பள்ளிக்கூடம்

பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதங்களைப் பதிப்பித்தவர்

அ) இளசைமணி
ஆ) ரா.அ. பத்மநாபன்
இ) கி. ராஜநாராயணன்
ஈ) கவிகேசரி சாமி தீட்சிதர்

Answer:
ஆ) ரா.அ. பத்மநாபன்

கருத்து 1 : ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றார் பாரதி.
கருத்து 2 : பரலி. சு. நெல்லையப்பர் பாரதியின் பாப்பாப்பாட்டைப் பதிப்பித்தவர்.

அ) இரண்டு கருத்தும் தவறு
ஆ) இரண்டு கருத்தும் சரி
இ) கருத்து 1 தவறு, 2 சரி
ஈ) கருத்து 1 சரி, 2 தவறு

Answer:
அ) இரண்டு கருத்தும் தவறு

சரியானதைத் தேர்தெடுக்க .

அ) முரசுப்பாட்டு – குந்திகேசவர்
ஆ) நெல்லைத் தென்றல் – வ.உ.சிதம்பரனார்
இ) பாரதி கடிதங்கள் – ரா.அ. பத்மநாபன்
ஈ) வம்சமணி தீபிகை – சு. நெல்லையப்பர்

Answer:
இ) பாரதி கடிதங்கள் – ரா.அ. பத்மநாபன்

சரியானதைத் தேர்க

அ) கவிகேசரி சாமி தீட்சிதர் – பாரதி கடிதங்கள்
ஆ) இளசைமணி – சூரியோதயம்
இ) கண்ணன்பாட்டு – ரா.அ. பத்மநாபன்
ஈ) வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு – சு. நெல்லையப்பர்

Answer:
ஈ) வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு – சு. நெல்லையப்பர்

பொருந்தாததைத் தேர்க.

அ) இளசை மணி – வம்சமணி தீபிகை நூலின் மறுமதிப்பு
ஆ) வம்சமணி தீபிகை – கவிகேசரி சாமி தீட்சிதர்
இ) பரலி சு. நெல்லையப்பர் – ஆசிரியர்
ஈ) பாரதி வாழ்த்து – பரலி சு. நெல்லையப்பர்

Answer:
இ) பரலி சு. நெல்லையப்பர் – ஆசிரியர்

பொருத்துக.

அ) வம்சமணி தீபிகை – 1. சு. நெல்லையப்பர்
ஆ) பாரதி கடிதங்கள் – 2. ரா.சு. பத்மநாபன்
இ) நெல்லைத் தென்றல் – 3. கவிகேசரி சாமி தீட்சிதர்

அ) 1, 2, 3
ஆ) 3, 2, 1
இ) 2, 3, 1
ஈ) 1, 3, 2

Answer:
ஆ) 3, 2, 1

பொருத்துக.

அ) தமிழ் அழகியல் – 1. பரலி சு. நெல்லையப்பர்
ஆ) நிலவுப்பூ – 2. தி.சு. நடராசன்
இ) கிடை – 3. சிற்பி. பாலசுப்பிரமணியம்
ஈ) உய்யும் வழி – 4. கி. ராஜநாராயணன்

அ) 4, 3, 2, 1
ஆ) 1, 4, 2, 3
இ) 2, 4, 1, 3
ஈ) 2, 3, 4, 1

Answer:
ஈ) 2, 3, 4, 1

பாரதி நெல்லையப்பருக்குக் கடிதம் எழுதிய இடம், நாள்

அ) புதுச்சேரி, 19 ஜூலை 1915
ஆ) நெல்லை , 14 ஜீலை 1914
இ) கடலூர், 18 ஆகஸ்ட் 1914
ஈ) காரைக்கால், 19 ஜீலை 1915

Answer:
அ) புதுச்சேரி, 19 ஜூலை 1915

நெல்லையப்பரை யார் காத்திட வேண்டும் என்கிறார் பாரதி?

அ) சிவன்
ஆ) முருகன்
இ) பராசக்தி
ஈ) துர்க்கை

Answer: இ) பராசக்தி

நெல்லையப்பர் எதனைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று பாரதி கூறினார்?

அ) பெற்றோரைக் காப்பதை
ஆ) விடுதலைக்குப் போராடுவதை
இ) தமிழ் வளர்ப்பதை
ஈ) சமூக இழிவை களைவதை

Answer: இ) தமிழ் வளர்ப்பதை

‘தம்பி-உள்ளமே உலகம்’ என்று யார் யாருக்குக் கூறியது?

அ) அறிஞர் அண்ணா , கலைஞருக்கு
ஆ) பாரதி, நெல்லையப்பருக்கு
இ) மு.வ., இளைஞர்களுக்கு
ஈ) திரு.வி.க., தமிழர்களுக்கு

Answer:
ஆ) பாரதி, நெல்லையப்பருக்கு

உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ-என்பதில் ‘உனக்கு’ என்பது யாரை எதைக் குறிக்கிறது?

அ) தமிழை
ஆ) நெல்லையப்பரை
இ) குயிலை
ஈ) இளைஞர்களை

Answer:
ஆ) நெல்லையப்பரை

பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது-என்று கடிதம் எழுதியவர்

அ) நெல்லையப்பர்
ஆ) பாரதியார்
இ) வாணிதாசன்
ஈ) பாரதிதாசன்

Answer:
ஆ) பாரதியார்

நெல்லையப்பரைப் பாரதி ………….. என்று கூவு என்கிறார்.

அ) வாழ்க வாழ்க
ஆ) தொழில்கள் தொழில்கள்
இ) மனிதர்கள் மனிதர்கள்
ஈ) வெல்க வெல்க

Answer:
ஆ) தொழில்கள் தொழில்கள்

ஓருயிரின் இரண்டு தலைகள் என்பன

அ) ஆணும் பெண்ணும்
ஆ) அறிவும் அழகும்
இ) வாழ்வும் தாழ்வும்
ஈ) பிறப்பும் இறப்பும்

Answer:
அ) ஆணும் பெண்ணும்

தமிழ்ப் பள்ளிக் கூடங்களில் ……………… லாம் பயிற்சிப் பெற்று வளர வேண்டும் என்கிறார் பாரதி.

அ) நவீன கலைகள்
ஆ) விளையாட்டு
இ) பாரம்பரிய கலைகள்
ஈ) அறிவியல் கல்வி

Answer:
அ) நவீன கலைகள்

வம்சமணி தீபிகை என்னும் நூலை எழுதியவர் ………… வெளியிட்ட ஆண்டு …………….

அ) கவிகேசரி சாமி தீட்சிதர், 1879
ஆ) முத்து சாமி தீட்சிதர், 1879
இ) இளசைமணி, 2008
ஈ) சீனி விசுவநாதன், 2004

Answer:
அ) கவிகேசரி சாமி தீட்சிதர், 1879

வம்சமணி தீபிகை என்னும் நூல் யாரைப் பற்றியது?

அ) சோழ மன்னர்களின் பரம்பரை வரலாறு
ஆ) எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு
இ) ஆங்கில ஆட்சியாளரின் அடக்குமுறைகளைக் கூறுவது
ஈ) பாரதியின் வாழ்ககை வரலாற்றைக் கூறுவது

Answer:
ஆ) எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு

வம்சமணி தீபிகை நூலின் பதிப்பைத் திருத்தி வெளியிட ஆசை கொண்டு .6.8.1919இல் ஆட்சி செய்த வெங்கடேசர எட்டப்பருக்குக் கடிதம் எழுதியவர் ………..

அ) பாரதியார்
ஆ) சீனி. விசுவநாதன்
இ) இளசைமணி
ஈ) கவிகேசரி சாமி தீட்சிதர்

Answer:
அ) பாரதியார்

வம்சமணி தீபிகை நூலின் மூலவடிவம் மறுபதிப்பாக வெளியிட்டவர் …………… ஆண்டு ……………

அ) கவிகேசரி சாமி தீட்சிதர், 1879
ஆ) பாரதியார், 1919
இ) இளசைமணி, 2008
ஈ) சீனி. விசுவநாதன், 1921
Answer:
இ) இளசைமணி, 2008

பாரதி தனது பதினைந்து வயதில் எட்டயபுரம் அரசருக்கு எழுதிய கவிதைக் கடிதத்தில் வேண்டப்படும் செய்தி

அ) ஆங்கில அரசை அகற்ற வேண்டி
ஆ) பாரதி கல்வி கற்க உதவி வேண்டி
இ) தன் நண்பன் கல்வி கற்க உதவி வேண்டி
ஈ) எட்டயப்புரத்தில் கவியரங்கம் நடத்த வசதி வேண்டி

Answer:
ஆ) பாரதி கல்வி கற்க உதவி வேண்டி

பாரதியின் கடைசிக் கடிதம் யாருக்கு எழுதப்பட்டது?

அ) எட்டயபுரம் அரசருக்கு
ஆ) நெல்லையப்பருக்கு
இ) குத்திகேசவருக்கு
ஈ) சீனி. விசுவநாதனுக்கு

Answer:
இ) குத்திகேசவருக்கு

சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரயாக இருந்தவர்

அ) நெல்லையப்பர்
ஆ) கண்ண தாசன்
இ) பாரதிதாசன்
ஈ) சீனி. விசுவநாதன்

Answer:
அ) நெல்லையப்பர்

பாரதி நடத்திய இதழ்களில் துணையாசிரியாராக இருந்தவர்

அ) நெல்லையப்பர்
ஆ) கண்ண தாசன்
இ) இளசை மணி
ஈ) இளசை சுந்தரம்

Answer:
அ) நெல்லையப்பர்

பாரதியின் பல்வேறு பாட்டுகளை (கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு உள்ளிட்டவை) பதிப்பித்தவர்

அ) நெல்லையப்பர்
ஆ) சீனி. விசுவநாதன்
இ) இளசை மணி
ஈ) இளசை சுந்தரம்

Answer:
அ) நெல்லையப்பர்

நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களை எழுதியவர்

அ) சீனி. விசுவநாதன்
ஆ) நெல்லையப்பர்
இ) இளசை மணி
ஈ) இளசை சுந்தரம்

Answer:
ஆ) நெல்லையப்பர்

வ. உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்

அ) சீனி. விசுவநாதன்
ஆ) இளசை மணி
இ) இளசை சுந்தரம்
ஈ) நெல்லையப்பர்
Answer:
ஈ) நெல்லையப்பர்

லோகோபகரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர்

அ) சீனி. விசுவநாதன்
ஆ) இளசை மணி
இ) இளசை சுந்தரம்
ஈ) நெல்லையப்பர்

Answer:
ஈ) நெல்லையப்பர்