Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 4.1 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.


அ) வசம்பு
ஆ) மணத்தக்காளியிலைச் சாறு
இ) கடுக்காய்
ஈ) மாவிலைக்கரி
Answer:
இ) கடுக்காய்

‘குழிமாற்று’ எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்


அ) இலக்கியம்
ஆ) கணிதம்
இ) புவியியல்
ஈ) வேளாண்மை
Answer:
ஆ) கணிதம்

திண்ணைப் பள்ளிக்கூடங்கள் எந்த நூற்றாண்டில் அதிகம் இருந்தன?


அ) 12-ஆம் நூற்றாண்டு
ஆ) 18-ஆம் நூற்றாண்டு
இ) 19-ஆம் நூற்றாண்டு
ஈ) 17-ஆம் நூற்றாண்டு
Answer:
இ) 19-ஆம் நூற்றாண்டு

குருகுலம் என்பது


அ) ஆசிரியரின் அறை
ஆ) குருக்கள் தங்கும் இடம்
இ) துறவியரின் குழல்
ஈ) ஆசிரியரின் வீடு
Answer:
ஈ) ஆசிரியரின் வீடு

மன்றத்திற்கு வழங்கும் இன்னொரு பெயர்


அ) சபை
ஆ) சங்கம்
இ) கோட்டை
ஈ) அம்பலம்
Answer:
ஈ) அம்பலம்

ஜைன மடங்களுக்கான பெயர்


அ) அம்பலம்
ஆ) மன்றம்
இ) திண்ணை
ஈ) பள்ளி
Answer:
ஈ) பள்ளி

பள்ளியென்னும் பெயர் எவ்வறிற்கெல்லாம் பொதுவாக வழங்கப்படும்


அ) பாடசாலை, ஆலயம்
ஆ) பாடசாலை, விருந்தினர் கூடும் இடம்
இ) பாடசாலை, மடங்கள்
ஈ) பாசறை, மடங்கள்
Answer:
இ) பாடசாலை, மடங்கள்

‘நெடுங்கணக்கு’ என்பது


அ) நீண்ட கணக்கு
ஆ) பெருக்கல் கணக்கு
இ) ஓலைச் சுவடி
ஈ) அரிச்சுவடி
Answer:
ஈ) அரிச்சுவடி

‘சட்டாம்பிள்ளை ‘ என்பவர் யார்?


அ) ஊரில் பெரியவர்
ஆ) சண்டித்தனம் செய்பவர்
இ) தலைமை வகிக்கும் மாணவர்
ஈ) பிடிவாதம் பிடிக்கும் மாணவர்
Answer:
இ) தலைமை வகிக்கும் மாணவர்

‘அக்ஷராப்பியாசம்’ என்றால்


அ) பாடம்படித்தல்
ஆ) எழுத்தறிவித்தல்
இ) மனனம் செய்தல்
ஈ) ஏடு எழுதுதல்
Answer:
ஆ) எழுத்தறிவித்தல்

‘ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்’ என உரைக்கும் நூல்


அ) சிலப்பதிகாரம்
ஆ) வளையாபதி
இ) குண்டலகேசி
ஈ) சிந்தாமணி
Answer:
ஈ) சிந்தாமணி

செய்யுளை நினைவுப்படுத்தும் முறைகள்


அ) எழுதுதல், படித்தல்
ஆ) வாசித்தல், எதுகை மோனை
இ) எதுகை மோனை, அந்தாதி
ஈ) கற்பித்தல், எழுதுதல்
Answer:
இ) எதுகை மோனை, அந்தாதி

எழுத்தாணிக்கு வழங்கும் வேறு பெயர்


அ) மடக்கெழுத்தாணி
ஆ) குண்டெழுத்தாணி
இ) ஊசி
ஈ) எழுதுகோல்
Answer:
இ) ஊசி

கதைப்பாடல் குறிப்பிடும் மனனம் செய்வதற்கான சுவடி


அ) அம்கொவதி சுவடி
ஆ) இந்திரச்சுவடி
இ) பிரபாவதி சுவடி
ஈ) சரஸ்வதி சுவடி
Answer:
இ) பிரபாவதி சுவடி

“மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்” – எனக் குறிப்பிடும் நூல்


அ) சிந்தாமணி
ஆ) தமிழ்விடு தூது
இ) தமிழ்க்கோவை
ஈ) இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை
Answer:
ஆ) தமிழ்விடு தூது

ஓதற் பிரிவுக்கென தொல்காப்பியம் குறிப்பிடும் கால எல்லை


அ) மூன்று ஆண்டுகள்
ஆ) நான்கு ஆண்டுகள்
இ) இரண்டு ஆண்டுகள்
ஈ) ஏழு ஆண்டுகள்
Answer:
அ) மூன்று ஆண்டுகள்

பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் என்னும் உ.வே.சாவின் இக்கட்டுரை எந்தத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது?


அ) உயிர்நீட்சி
ஆ) உயிர்மீட்சி
இ) உயிர்க்காட்சி
ஈ) மையாடல்
Answer:
ஆ) உயிர்மீட்சி

கூற்று 1 : ஆசிரியர் நெடுங்கணக்கைச் சொல்லிக் கொடுக்க மாணக்கன் அதனைப் பின்பற்றிச் செல்வான்.
கூற்று 2 : பிள்ளைகள் முதலில் தரையில் எழுத ஆசிரியர்கள் அதன் மேல் எழுதுவார்கள்.


அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
இ) கூற்று 1 சரி 2 தவறு

கூற்று : சுவடிகளிலுள்ள எழுத்துகளில் மையைத் தடவி வாசிக்கத் தருவார்கள்.
காரணம் : கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும், எழுத்துகளை விளக்கமாகக் காட்டும்.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று சரி, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answer:
ஆ) கூற்று சரி, காரணம் சரி

கூற்று 1 : உபாத்தியாயருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந்தது.
கூற்று 2 : கணக்காயரென்பது அமைச்சரின் பெயர்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று இரண்டும் சரி
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஆ) கூற்று 1 சரி 2 தவறு

கூற்று : பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களை ஆசிரியர் கூறி அனுப்புவதில்லை .
காரணம் : பெயர்களை நினைவில் வைத்து மறுநாள் சொல்வதன் மூலம் நினைவாற்றல் அதிகமாகும்.

அ) கூற்று தவறு காரணம் சரி
ஆ) கூற்று சரி காரணம் தவறு
இ) கூற்று சரி காரணம் சரி
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
அ) கூற்று தவறு காரணம் சரி

கூற்று : தமிழ்நாட்டிற்கும் நவத்வீபம் முதலிய இடங்களிலிருந்து வந்து படித்துச் சென்றவர்கள் பலர் உண்டு .
காரணம் : திருவாவடுதுறை மடம், தருமபுரம் மடம் முதலியன பல வருஷமாகக் கல்வியைப் போதிக்கவில்லை.

அ) கூற்று சரி, காரணம் சரி
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
இ) கூற்று சரி காரணம் தவறு

கூற்று 1 : பள்ளிக்கு முதலில் வருபவனை வேத்தான் என்று அழைப்பர்.
கூற்று 2 : வேத்தான் சில நேரங்களில் சட்டாம்பிள்ளைக்குரிய கடமை செய்வான்.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
இ) கூற்று 1 சரி 2 தவறு

சரியானதைத் தேர்க.


அ) உபாத்தியாயர் – கணக்காயர்
ஆ) கீழ்வாயிலாக்கம் – பின்ன எண்ணின் மேல் தொகை
இ) நவத்வீபம் – கல்விப் பயிற்சிக் கூடம்
ஈ) வித்தியாரம்பம் – எழுத்துப் பயிற்சி
Answer:
அ) உபாத்தியாயர் – கணக்காயர்

சரியானதைத் தேர்க.


அ) மனப்பாடம் செய்ய சகல வல்லவாதி சுவடி என்ற புத்தகம் இருந்தது.
ஆ) ‘மையாடல் விழா’ என்பது திருமண விழா.
இ) நெடுங்கணக்கை மாணாக்கர் தானே கற்றனர்.
ஈ) நிகண்டுகளை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கு மதிப்பிருந்தது.
Answer:
ஈ) நிகண்டுகளை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கு மதிப்பிருந்தது.

சரியானதைத் தேர்க.


அ) சாஸனம் – இருக்கை
ஆ) மணல் – சிலேட்
இ) பனையேடு – கரும்பலகை
ஈ) எழுத்தாணி – பென்சில்
Answer:
ஆ) மணல் – சிலேட்

பொருந்தாததைத் தேர்க.


அ) ஓதற்பிரிவு – 3 வருடம்
ஆ) வேத்தான் – முதலில் வரும் மாணக்கன்
இ) மையாடல் விழா – அக்ஷராப்பியாசம்
ஈ) விலங்கு – வரியெழுத்தின் இனம்
Answer:
ஈ) விலங்கு – வரியெழுத்தின் இனம்

பொருந்தாததைத் தேர்க.


அ) சுவடிகளை வைக்கவும் எடுத்துச்செல்லவும் பயன்படும் கருவி அசை எனப்படும்.
ஆ) ‘கிளிமூக்கு’ என்பது ஓலைச் சுவடியுடன் தொடர்புடையது.
இ) மாணவர்கள் சேர்ந்து சொல்வது மனன முறை என்பர்.
ஈ) புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியன வரியெழுத்தின் உறுப்புகள்.
Answer:
இ) மாணவர்கள் சேர்ந்து சொல்வது மனன முறை என்பர்.

பொருந்தாததைத் தேர்க.


அ) கோணாமல் – கொம்பு சுழி
ஆ) சாயாமல் – கொண்ட பந்தி
இ) அசையாமல் – தராசுபோல் கால்கள்
ஈ) கொம்பு – வரியெழுத்தின் உறுப்பு
Answer:
இ) அசையாமல் – தராசுபோல் கால்கள்

பொருத்துக.


அ) உபாத்தியாயர் – 1. தாழைமடல்
ஆ) குழிமாற்று – 2. ஆசிரியர்
இ) சீதாளபத்திரம் – 3. எழுத்துப்பயிற்சி
ஈ) அக்ஷராப்பியாசம் – 4. பெருக்கல் வாய்பாடு

அ) 2, 4, 1, 3
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 1, 4, 3
ஈ) 3, 1, 4, 2
Answer:
அ) 2, 4, 1, 3

பொருத்துக.


அ) எட்டயபுரம் திண்ணைப் பள்ளி – 1. பின்னத்தூர் நாராயணசாமி
ஆ) முத்துராம பாரதி திண்ணைப் பள்ளி – 2. நாவலர் சோமசுந்தர பாரதியார்
இ) கணபதியார் திண்ணைப் பள்ளி – 3. வெள்ளைக்கால் ப. சுப்பிரமணியனார்
ஈ) மௌனகுரு – 4. மாண. இராசமாணிக்கனார்

அ) 2, 1, 3, 4
ஆ) 2, 1, 4, 3
இ) 2, 3, 1, 4
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 2, 1, 3, 4

பொருத்துக.


அ) நெடுங்கணக்கு – 1. அரசாணை
ஆ) சட்டாம் பிள்ளை – 2. ஓலைச்சுவடி
இ) தூக்கு – 3. அரிச்சுவடி
ஈ) சாஸனம் – 4. வகுப்புத்தலைவன்

அ) 3, 4, 1, 2
ஆ) 3, 2, 4, 1
இ) 4, 1, 3, 2
ஈ) 4, 3, 1, 2
Answer:
ஈ) 4, 3, 1, 2

சென்னை புரசைவாக்கம் சர்,எம்.சி.டி. முத்தையா உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் முதல் சொற்பொழிவாக 20.03.1936இல் நிகழ்த்தப்பட்டு 16.08.1936இல் கட்டுரையாக வெளியான வார இதழ்


அ) இந்தியா
ஆ) விஜயா
இ) நவசக்தி
ஈ) சுதேசமித்திரன்
Answer:
ஈ) சுதேசமித்திரன்

மில்டனின் சுவர்க்க நீக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர்


அ) வெள்ளைக்கால் ப. சுப்பிரமணியனார்
ஆ) எட்டையபுரம் சி.சுப்பிரமணிய பாரதி
இ) சுப்ரமணிய சிவா
ஈ) உ.வே.சாமிநாதர்
Answer:
அ) வெள்ளைக்கால் ப. சுப்பிரமணியனார்

வெள்ளைக்கால் சுப்பிரமணியனார் என்பார் ……………….. ஆவார்.


அ) வழக்கறிஞர்
ஆ) பொறியாளர்
இ) உயிரின மருத்துவர்
ஈ) நீதியரசர்
Answer:
இ) உயிரின மருத்துவர்

ப. சுப்பிரமணியார், திருநெல்வேலி தெற்குத்தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்த வருடங்கள்


அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
ஆ) நான்கு

வரலாற்றாய்வாளரும் தமிழறிஞருமான டாக்டர் மா. இராசமாணிக்கனார் …………. படித்திருக்கிறார்.


அ) ஞான குருவிடம்
ஆ) மௌன குருவிடம்
இ) கணபதியாரிடம்
ஈ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரிடம்
Answer:
ஆ) மௌன குருவிடம்

நற்றிணை நூலின் உரையாசிரியர்


அ) டாக்டர் மா. இராசமாணிக்கனார்
ஆ) பின்னத்தூர் நாராயணசாமி
இ) ப. சுப்பிரமணியனாா
ஈ) வ.சுப. மாணிக்கம்
Answer:
ஆ) பின்னத்தூர் நாராயணசாமி

நாராயணசாமி, பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ……………… திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.


அ) சோமசுந்தர பாரதி
ஆ) சுப்பிரமணிய பாரதி
இ) முத்துராம பாரதி
ஈ) கவிபாரதி
Answer:
இ) முத்துராம பாரதி

நாவலர் சோமசுந்தர பாரதிக்குப் பொருந்தாததைக் கண்டறிக.


அ) பாரதியின் நண்பர்
ஆ) வழக்கறிஞர்
இ) தமிழறிஞர்
ஈ) வரலாற்றாய்வாளர்
Answer:
ஈ) வரலாற்றாய்வாளர்

பின்வரும் தமிழறிஞர்களில் சிலப்பதிகார உரையாசிரியரைக் கண்டறிக.


அ) ப. சுப்பிரமணியனார்.
ஆ) மா.இராசமாணிக்கனார்
இ) வ.சுப. மாணிக்கம்
ஈ) வேங்கடசாமி
Answer:
ஈ) வேங்கடசாமி

டாக்டர் வ.சுப. மாணிக்கம் …………… பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.


அ) சென்னை
ஆ) மதுரை
இ) மைசூர்
ஈ) டெல்லி
Answer:
ஆ) மதுரை

‘இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை’ என்னும் நூலின் ஆசிரியர்


அ) அ.கா. பெருமாள்
ஆ) வ.சுப. மாணிக்கம்
இ) வ.வே.சு. ஐயர்
ஈ) மு.வரதராசனார்
Answer:
அ) அ.கா. பெருமாள்

பொருத்திக் காட்டுக.


அ) கீழ்வாயிலக்கம் – 1. பெருக்கல் வாய்ப்பாடு
ஆ) மேல்வாயிலக்கம் – 2. தாழை மடல்
இ) குழிமாற்று – 3. பின்ன எண்ணின் கீழ்த்தொகை
ஈ) சீதாளபத்திரம் – 4. பின்ன எண்ணின் மேல்தொகை

அ) 3, 4, 1, 2
ஆ) 3, 1, 2, 4
இ) 4, 3, 2, 1
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 3, 4, 1, 2

நவத்வீப்ம் என்பது


அ) நேபாளத்தில் உள்ள பள்ளிக்கூடத்தின் பெயர்
ஆ) வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்
இ) தெய்வத்திற்குப் படைக்கப்படும் ஒருவித பொருள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்

முதன் முதலில் வித்தியாப்பியாசம் செய்யும்பொழுது தாய்தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்த வயது


அ) ஐந்து
ஆ) ஏழு
இ) பத்து
ஈ) பதின்மூன்று
Answer:
அ) ஐந்து

உபாத்தியாயர் ………………. சொல்லிக்கொடுக்க, மாணாக்கன் அதனைப் பின்பற்றிச் சொல்வான்.


அ) குறுங்கணக்கை
ஆ) நெடுங்கணக்கை
இ) புராணத்தை
ஈ) இதிகாசத்தை
Answer:
ஆ) நெடுங்கணக்கை

உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணவர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை ……………… என்று கூறுவார்கள்.


அ) முறை வைப்பது
ஆ) திருமறை படிப்பது
இ) பாடம் படிப்பது
ஈ) நூல் வாசிப்பது
Answer:
அ) முறை வைப்பது

உபாத்தியாயருக்குப் பிரதியாகச் சில சமயங்களிற் முறை வைப்பவர்


அ) சட்டாம்பிள்ளை
ஆ) கணக்குப்பிள்ளை
இ) உபாத்தியாயரின் மனைவி
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
அ) சட்டாம்பிள்ளை

மை தடவிப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அகூராப்பியாசத்தை ………… என்று சொல்வார்கள்.


அ) மஞ்சள் நீராட்டுவிழா
ஆ) மையாடல் விழா
இ) மையிழைக்கும் விழா
ஈ) புதுவாசிப்பு நாள் விழா
Answer:
ஆ) மையாடல் விழா

வரியெழுத்தின் உறுப்புகள்


i) புள்ளி
ii) கால்
iii) கொம்பு
iv) விலங்கு

அ) i), ii) சரி
ஆ) ii), iii) சரி
இ) ili) மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

சிறுவர்களைப் படிக்கவைக்கும் வகையில் அகராதி வரிசையில் அமைந்த நூல்கள்


அ) ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்
ஆ) திருக்குறள், நாலடியார்
இ) இன்னா நாற்பது, இனியவை நாற்பது
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்

கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று, நெல் இலக்கம் முதலிய வாய்பாடுகளைக் கட்டாயம் மனப்பாடம் செய்வதற்காக இருந்த சுவடிப் புத்தகம்


அ) லீலாவதி
ஆ) கலாவதி
இ) பிரபாவதி
ஈ) அமராவதி
Answer:
இ) பிரபாவதி

இரட்டைத் துணையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக்கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவதை ……………… என்று கூறுவர்.


அ) மூங்கிலாசனம்
ஆ) நாராசம்
இ) ஏடாசம்
ஈ) கிளிமூக்கு
Answer:
ஆ) நாராசம்

சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் உபயோகப்படும் கருவிக்கு ………….. என்று பெயர்.


அ) மையாடல்
ஆ) நாராசுரம்
இ) கிளிமூக்கு
ஈ) தூக்கு
Answer:
ஈ) தூக்கு

தூக்கு என்னும் சுவடி சார்ந்த பொருளுக்கு ………….. என்றும் பெயர்.


அ) அசை
ஆ) இசை
இ) தூக்கிசை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) அசை

அரசவையில் வாதுபுரிந்து தம் கல்வித்திறமையை நிலைநாட்டும் நூற்பயிற்சியுடையவர்கள் கொடிகட்டியிருப்பரென்று குறிப்பிடும் நூல்


அ) பரிபாடல்
ஆ) பட்டினப்பாலை
இ) மதுரைக்காஞ்சி
ஈ) முல்லைப்பாட்டு
Answer:
இ) மதுரைக்காஞ்சி

“வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடநனி இக்கும்” – என்று குறிப்பிடும் நூல்


அ) அகத்தியம்
ஆ) தொல்காப்பியம்
இ) நன்னூல்
ஈ) தொன்னூல் விளக்கம்
Answer:
இ) நன்னூல்

‘என் ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு’ என்று குறிப்பிடும் நூல்


அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) நான்மணிக்கடிகை
ஈ) திரிகடுகம்
Answer:
அ) திருக்குறள்

கல்வியின் பொருட்டு பிரியுங்காலத்தைத் தொல்காப்பியம் ……….. பிரிவு என்று குறிப்பிடுகிறது.


அ) ஓதற்பிரிவு
ஆ) பொருள்வயின் பிரிவு
இ) தலைமகற்பிரிவு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) ஓதற்பிரிவு

தஞ்சாவூரில் இருந்த ஆகம சாஸ்திர பண்டிதராகிய சர்வசிவ பண்டிதரென்பவரிடத்தில் பல அன்னிய தேசத்து மாணாக்கர்கள் வந்து கற்றுச் சென்றார்களென்னும் செய்தி …………….. சாஸனம் ஒன்றால் தெரிகின்றது.


அ) முதல் இராஜராஜ சோழன் காலத்தில், தஞ்சையில் பொறிக்கப்பட்ட
ஆ) முதல் இராசேந்திர சோழன் காலத்தில், உறையூரில் பொறிக்கப்பட்ட
இ) இரண்டாம் இராஜஇராஜசோழன் காலத்தில், தாராசுரத்தில் பொறிக்கப்பட்ட
ஈ) முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், காஞ்சிபுரத்தில் பொறிக்கப்பட்ட
Answer:
அ) முதல் இராஜராஜ சோழன் காலத்தில், தஞ்சையில் பொறிக்கப்பட்ட

பல வருடகாலம் தமிழ்க்கல்லூரியாகவும், வடமொழிக் கல்லூரியாகவும் விளங்கி வந்த மடங்கள்


அ) திருவாவடுதுறை, தருமபுரம்
ஆ) மதுரை, திருப்பாதிரிப் புலியூர்
இ) காஞ்சிபுரம், திருநெல்வேலி
ஈ) இவற்றில் ஏதுமில்லை
Answer:
அ) திருவாவடுதுறை, தருமபுரம்

சரியானக் கூற்றைக் கண்டறிக.


i) பள்ளிக்கூடத்திற்குக் காலையில் ஐந்து மணிக்கே வந்துவிட வேண்டுமாகையால் பிள்ளைகள் பெரியவர்களை அழைத்து வருவதே வழக்கம்.
ii) முதலில் வருபவனை வேத்தான் என்று சொல்வார்கள்.
iii) வேத்தன் என்பதற்கு மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பது பொருள்.

அ) i), ii), ii) தவறு
ஆ) i), ii) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

‘தமிழ்த்தாத்தா’ என்னும் சிறப்புக்குரியவர்


அ) உ.வே.சா.
ஆ) ம.பொ .சி.
இ) தெ.பொ.மீ
ஈ) மு.வ.
Answer:
அ) உ.வே.சா

உ.வே.சா. பெறாத பட்டத்தைக் கண்டறிக.


அ) மகாமகோபாத்தியாய
ஆ) திராவிட வித்தியா பூஷணம்
இ) தாக்ஷிணாத்தி கலாநிதி
ஈ) தாஹுணாத்திய கருணாநிதி
Answer:
ஈ) தாஹுணாத்திய கருணாநிதி

பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்


அ) உ.வே.சா.
ஆ) ம.பொ .சி.
இ) தெ.பொ.மீ
ஈ) மு.வ.
Answer:
அ) உ.வே.சா.

உ.வே.சா. சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ஆண்டு


அ) 1932
ஆ) 1930
இ) 1928
ஈ) 1926
Answer:
அ) 1932

உ.வே.சா.வின் திருவுருவச்சிலை சென்னை மாநிலக் கல்லூரியில் …………… வண்ண ம் நிறுவப்பட்டுள்ளது.


அ) வங்கக்கடலை நோக்கி நிற்கும்
ஆ) வள்ளுவர் கோட்டத்தைப் பார்க்கும்
இ) அனைவரும் வியக்கும்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) வங்கக்கடலை நோக்கி நிற்கும்

உ.வே.சா. நூலகம் அமைந்துள்ள இடம்


அ) சென்னை , திருவான்மியூர்
ஆ) சென்னை , வடபழனி
இ) தஞ்சை, கிழக்குவாசல்
ஈ) மதுரை, மேற்குவாசல்
Answer:
அ) சென்னை , திருவான்மியூர்