Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Tamil Essays

welcome speech in Tamil essay

welcome speech in Tamil essay வரவேற்பு பேச்சு கட்டுரை:-வரவேற்பு பேச்சு ஒவ்வொரு விழாவிலும் அதன் நடத்துனராக இருந்து விழாவை சிறப்பிக்கும் பேச்சாளரின் கடமையாகும் ,ஒவ்வொரு மேடை விழாவிலும் முதன்மையான இத்தகைய பேச்சு கட்டுரை இங்கே கொடுக்க பட்டுள்ளன,இந்த கட்டுரையில் பள்ளி விழாவில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினரை வரவேற்கும் முறைகள் ,மரியாதையை நிமித்தங்கள் ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன

welcome speech in Tamil essay

விழா முதல் வரவேற்பு

எமது பள்ளியில் 50வது ஆண்டுவிழாவிற்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கின்றேன்.ஐம்பது வருடங்கள் என்ற மைல் கல்லை எட்டியுள்ள நமது பள்ளியின் வரலாற்றை சற்று திரும்பி பார்த்தல் ,ஒரு சிறிய இடத்தில வெறும் 20 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்களுடன் தொடங்க பட்ட இந்த பள்ளி இன்று ஆயிரம் ஆயிரம் வெற்றி பெற்ற மாணவர்களை இந்த உலகுக்கு அளித்து பார்போற்றும் வண்ணம் நிமிர்ந்து நிற்கிறது நமது பள்ளி .தற்சமயம் எட்டாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் பள்ளியாக உயர்ந்துள்ளது நம் பள்ளி

சிறப்பு விருந்தினர் வரவேற்பு

நமது பள்ளியில் பயின்று வெளி நாடுகள் ,வெளி மாநிலங்கள் ,அரசு அலுவலகங்கள் ,விஞ்ஞான கூடங்கள் ,பொறியியல் தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் வேலை செய்தும் முன்னாள் மாணவர்களின் நினைவில் இப்பள்ளியின் நிழல் கொடுக்கும் மரங்கள் ,வானளாவிய உயரத்திற்கு உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் ,விலாசமான வகுப்பறைகள் போன்றவை நினைவில் நிற்கும் என்பதில் ஐயமில்லை

அவ்வகையில் நமது பள்ளியின் நினைவுகளுடன் வாழ்ந்து வரும் நமது பள்ளியில் பயின்று இந்திய விஞ்ஞானி யாக உயர்ந்திருக்கும் நமது சிறப்பு விருந்தினரை வரவேற்கிறேன் . நமது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி இந்திய மாணவர்கள் அனைவருக்கு ஊக்க சக்தியாக விளங்கும் இவரது இளமைக்காலம் ,நமது பள்ளியில் துவங்கியது என்பது நமக்கெல்லாம் பெருமை மிகுந்த ஒன்றாகும்.

இங்கே கூடி இருக்கு அணைத்து மாணவர்களுக்கும் தமது வாழ்வை முன்னுதாரண படுத்தி தமது உரையை வழங்குமாறு வீரவேற்கிறேன்

முடிவுரை பேச்சு

ஒவ்வொரு மாணவரும் சிறந்தவர் தான் ,நன்றாக படித்தல் மட்டுமல்லாது நன்றாக விளையாடுதல் ,நல்ல பழக்க வழக்கங்களை மேம்படுத்துதல் , போன்றவையும் ஒரு பள்ளி மாணவருக்கு வழங்கும் சிறந்த பரிசாகும் ,அவ்வகையில் தான் பெற்ற அறிவை பற்றி மட்டும் விவாதிக்காமல் தனது பள்ளி தமது மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருந்த வழிகளையும்,சிறந்த ஆசிரியர்கள் பற்றியும் எடுத்து கூறி நமது அனைவரையும் ஆச்சர்யங்களில் மூழ்கடித்த சிறப்பு விருந்தினரது பேச்சை கேட்டதில் மிகுந்த ஆனந்தம் அடைகிறேன் ,அவரது எதிர்காலமும் நடப்பு வாழ்க்கையும் நமது பள்ளியின் நினைவுகளுடன் பூரிப்புடன் இருக்க இறைவனை பிரார்த்தித்து இந்த நிகழ்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன்